என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முழு அடைப்பு போராட்டம் எதிரொலி:  பெங்களூரு, வட மாநிலம் செல்லும் லாரிகள் கிருஷ்ணகிரியில் நிறுத்தம்
    X

    ஓசூர் அருகே வடமாநிலத்திற்கு செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி.

    முழு அடைப்பு போராட்டம் எதிரொலி: பெங்களூரு, வட மாநிலம் செல்லும் லாரிகள் கிருஷ்ணகிரியில் நிறுத்தம்

    • கன்னட சங்கங்கள், கட்சிகள் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை.
    • கிருஷ்ணகிரி போலீசார் சுங்கச்சாவடி அருகில் இருபுறமும் பாதுகாப்பு பணி களை மேற்கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    சுப்ரீம் கோர்ட்டு உத்தர வுப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துள்ளது. இதை கண்டித்து கர்நாடகாவில் விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த 26&ந் தேதி பெங்களூருவில் முழு அடைப்பு நடந்த நிலையில், கன்னட சங்கங்கள், கட்சிகள் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை.

    அதே நேரத்தில் நேற்று பா.ஜனதா, மத சார்பற்ற ஜனதா தளம் மற்றும் கன்னட அமைப்புகள் சார்பில் கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பெங்க ளூரு செல்லும் தமிழக அரசு பஸ்கள் நேற்று முன்தினம் இரவுடன் ஓசூரில் நிறுத்தப்பட்டன. நேற்று பெங்களூருவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    மாநில எல்லையுடன் நிறுத்தப்பட்டன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சரக்கு லாரிகள் ஓசூர் வழியாக பெங்களூரு மற்றும் கர்நாடக மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும் செல்கின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாக னங்கள் இவ்வாறு சென்று வருகின்றன. நேற்று கர்நாடகாவில் முழு அடைப்பு காரணமாக லாரிகள் தமிழக எல்லை வழியாக கர்நாடகா செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கிருஷ்ணகிரியிலேயே பெரும்பாலான லாரிகள் நிறுத்தப்பட்டன. சாலை யோரம் லாரிகளை நிறுத்திய டிரைவர்கள் இங்கேயே இருந்தனர். மாலைக்கு மேல் லாரிகளை இயக்கினார்கள். இதன் காரணமாக கிருஷ்ண கிரியில் ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரு புறமும் நூற்றுக்க ணக்கான சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டி ருந்தன. மேலும் கிருஷ்ணகிரி போலீசாரும், சுங்கச்சாவடி அருகில் இருபுறமும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    Next Story
    ×