என் மலர்
கிருஷ்ணகிரி
- மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்களை கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி, 15-வது வார்டுக்குட்பட்ட காந்திநகர், 16-வது வார்டுக்குட்பட்ட லண்டன்பேட்டை பகுதி களில் கழிவுநீர் வெளியேற வழியின்றி சாக்கடை கால் வாய்கள் இல்லாமல் சாலை யில் தேங்கி நின்றது. இது குறித்து பொதுமக்கள் நகராட் சிக்கு புகார் மனு அளித்தனர். இதையடுத்து இந்த 2 இடங்களிலும் தலா ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் மதிப் பீட்டில் சாக்கடை கால்வாய் அமைக்க நக ராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப் பட்டது.
இந்த பணிகளுக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ண கிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச் சிக்கு நகராட்சி கமிஷனர் வசந்தி, நகர தி.மு.க. செயலாளர் நவாப் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
அப்போது பொதுமக்கள் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மதியழகன் எம்.எல்.ஏ. அந்த மனுக்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நாள ந்தா பள்ளிகளின் நிறுவனர் ஆடிட்டர் கொங்கரசன், மா நில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடே சன், பொதுக்குழு உறுப்பி னர் அஸ்லம், கவுன்சிலர்கள் சுதா சந்தோஷ், ஜெயக்குமார், மாதேஸ்வரி, விநாயகம், பாலாஜி, செந்தில்குமார், பிர்தோஷ்கான், ஹேமாவதி பரந்தாமன், மற்றும் கனல்சுப்பிரமணி, ஜான்டேவிட் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓசூர்:
ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று மாலை, ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை, தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், 80 மூட்டை மற்றும் 4 அட்டைப்பெட்டிகளில் 640 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.5, 30,000 ஆகும். இதனை சரக்கு வேனுடன் பறிமுதல் செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தியதில், கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து விற்பனைக்காக சேலம் பகுதிக்கு அந்த குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து வேன் டிரைவர் அஜித்குமார் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சேலம் சன்னியாசிகுண்டு குமரகிரி பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மீண்டும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் நேற்று மாலை முதல் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- அனைத்தும் தற்போது ராயக்கோட்டை அருகே ஊடே துர்க்கம் வனப்பகுதிக்கு சென்றடைந்தது.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே சானமாவு வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தஞ்சமடைந்தது. அந்த யானைகள் கூட்டத்தை ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது, யானைக் கூட்டங்களை மீண்டும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் நேற்று மாலை முதல் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதியில் இருந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் யானை கூட்டங்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி வரும், இதேபோல் இந்த ஆண்டும் ஜவளகிரி வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் தமிழக எல்லைக்குள் புகுந்தது.
பல குழுக்களாக பிரிந்த யானை கூட்டங்கள் 50-க்கும் மேற்ப்பட்ட யானை கூட்டங்கள் தேன்கனிக்கோட்டை வழியாக ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வந்தடைந்தது.
தற்போது ராகி, நெல் அறுவடை சீசன் காலம் என்பதால் யானைக் கூட்டங்களை விரட்ட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து யானைக் கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர் நேற்று மாலை முதல் 20-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் யானைகளை விரட்டும் பணியை ஈடுபட்டனர்.
அப்போது 50-க்கு மேற்ப்பட்ட யானைகள் தனது குட்டிகளுடன் கூட்டமாக கெலமங்கலம் உத்தனப்பள்ளி சாலையை கடந்து சென்றது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அவைகள் அனைத்தும் தற்போது ராயக்கோட்டை அருகே ஊடே துர்க்கம் வனப்பகுதிக்கு சென்றடைந்தது.
தற்போது ராயக் கோட்டை வனச்சரகர் வெங்கட்டாசலம் தலைமையில் வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை வழியாக ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
- மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
- 25 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், கடந்த 2023-2024-ம் கல்வி ஆண்டில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர். சரக அளவில், 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவில், கால்பந்து, கோ-கோ, கபடி, பூப்பந்து, கைப்பந்து, ஆக்கி, டேபிள் டென்னிஸ், செஸ் மற்றும் டென்னி காய்ட் போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவி லான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் கோ-கோ போட்டியில் 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட பிரிவிலும், கபடியில் 17 வயதிற்குப்பட்ட பிரிவிலும், கால்பந்தில் 19 வயதிற்குட் பட்ட பிரிவிலும், டேபில் டென்னிஸ் 14 வயதிற் குட்பட்ட ஒற்றையர் பிரிவி லும் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தடகளப் போட்டியில் சரக அளவில் 17 வயதிற் குட்பட்ட பிரிவில் தனி நபர் கோப்பையை வென்றுள்ள னர். மேலும் புதிய விளையாட்டுப் போட்டிக ளான சிலம்பப் போட்டியில் 4 மாணவிகள் தங்கமும், 3 வெண்கலமும், ஜூடோ போட்டியில் 7 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கமும், குத்துச் சண்டை யில் 1 தங்கமும், நீச்சல் போட்டியில் 25 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கமும் பெற்றனர். கடற் கரை வாலிபால் போட்டி யில் 17 வயதுப் பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற னர். இந்த கல்வியாண்டில், 112 மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு செல்ல தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த் துள்ளனர். பள்ளி விளை யாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவிலான கோ- கோ போட்டியில் 17 வயதுப் பிரிவில் குமாரி காவியா, பத்மா ஆகியோர் நாசிக்கில் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் போட்டியில் விளை யாடிக் கொண்டிருக்கின்ற னர். டிசம்பர் 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வரை நடைபெற உள்ள தேசிய அளவில் நடைபெற உள்ள இளையோர்களுக்கா ன போட்டியில் மோனிகா ஸ்ரீ, மற்றும் ஹரிதா ஆகி யோர் கலந்து கொள்ள உள்ளனர்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்தி ரன் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி யில், உதவி தலைமை ஆசிரி யர்கள் ரவிக்கண்ணன், பெருமாள், உடற்கல்வி இயக்குனர் திவ்ய லட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் மகாலட்சுமி, மாணிக்கம், ஹசீனா பேகம், மணி மேகலை ஆகியோர் உடன் இருந்தனர்.
- கல்குவாரியில் முத்து மணி பரிதாபமாக இறந்து கிடந்தார்
- உறவினர்கள் இரு வர் மது அருந்த சென் றது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒசஹள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்த மான பயன்பாட்டில் இல்லாத கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் உள்ள 30 அடி ஆழ பள்ளத்தில் முத்துரா யன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த முத்து மணி 22 என்பவர் நேற்று இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலை அடுத்து போலிஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்குவாரி பள்ளத் தில் இறந்துகிடந்த வாலிப ரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்க னிகோட்டை அரசு மருந்து வமனைக்கு அனுப்பி வைத்து விசாரனையி நடத்தி னர்.
விசாரணையில் நேற்று முன்தினம் முத்துமணியுடன் அவரது உறவினர்கள் இரு வர் மது அருந்த சென் றது தெரியவந்தது. அதனால் கல்குவாரி பள்ளத்தில் கால் தவறி விழுந்து முத்துமணி உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என கோணத்தில் விசாரனை மேற்கொண் வருகின்றனர் . இறந்தவரின் அண்ணன் சிவகுமார் கொடுத்த புகா ரின் பேரில் வழக்குபதிவு செய்த முத்துமணியுடன் சென்ற இருவரிடம் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 76 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை கண்ட றிந்தனர்.
- அரிசியை, தமிழ்நாடு வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.
வாணியம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த முயன்ற 3.8 டன் ரேஷன் அரிசியை, கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் சின்னசாமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் துரைமுருகன், சூளகிரி தனி வருவாய் ஆய்வாளர் சூர்யா உட்பட கொண்ட குழுவினர் பாகலூர் அருகே ரோந்து மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு கிடமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த நேரம் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடினார். இதையடுத்து வாகனத்தை சோதனை செய்த போது அதில் வாகனத்தில் 50 கிலோ எடை கொண்ட 76 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை கண்ட றிந்தனர்.
மேலும், வாணியம்பாடி அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடு, வீடாக ரேஷன் அரிசியை குறைந்து விலைக்கு வாங்கி, கர்நாடகா மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்திச் சென்றது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட 3.8 டன் ரேஷன் அரிசியை, தமிழ்நாடு வாணிப கழக கிடங்கிலும், வாகனம் உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோ டிய வாகன டிரைவர், வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அரிசி சேகரித்து தரும் முகவர்களை தேடி வருகின்றனர்.
- தி.மு.க. சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப் பட்டது.
- தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப் பட்டது. இதையொட்டி கிருஷ்ண கிரி செட்டியம் பட்டியில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், நகர செயலாளர் நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் கோவிந்தன், கவுன்சிலர்கள் பாலாஜி, சக்திவேல், ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட தலைவர் துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
- லாவண்யா ஹேம்நாத் தலைமை வகித்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நாகேஷ், ரத்னம்மா, யசோதா, லஷ்மம்மா, லஷ்மம்மா காஞ்சனா, பாக்கியவதி, புஷ்பா, தமிழ்செல்வி, சங்கீதா, லதா, வனீதா, முனிரத்தனா, முனிராஜ், சீதாராமன், சேட்டு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் பல கிராமங்க ளில் அடிப்படை வசதிகள் குடிநீர், கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை, தார் சாலைகள் ஆகிய அடிப் படை வசதிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிகுமார், பாபி பிரான்சினா மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் ஒன்றியக்குழு தலைவர், உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி பல்வேறு திட்ட வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்து கொண்டார்.
- சாம்பசிவம் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கோடிப்பதி பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது64).
இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர் கவுண்டனூர் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவராவார்.
இவர்கள் குடும்பத்துடன் நேற்று முன்தினம் காலை குடும்பத்துடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தனர்.
அங்கிருந்து மீண்டும் நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7¼ பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசுகள் உள்ளிட்ட ரூ.5. லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் தங்க நகைகள் மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து சாம்பசிவம் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- காலபைரவருக்கு அபி ஷேகம், அர்ச்சனை பூஜைகள், செய்யப்பட்டது.
- பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அண்ணாலை புதூர் மலை உச்சியின் மேல் குகையில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் அஷ்டமி பெருவிழா நடைப்பெற்றது. சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்த காலபை ரவருக்கு அபி ஷேகம், அர்ச்சனை பூஜைகள், செய்யப்பட்டது.
இதில் தாமரைப்பூ மாலை, வில்லம்மால தும்பை பூமாலை, சந்தன மாலை, செவ்வரளி மாலை, மஞ்சள் மாலை, எலுமிச்சை மாலை, முழமுந்திரி மாலை, செவ்வந்தி மாலைகள் சாத்தப்பட்டு பூஜைகள் நடந்தது.
அதனை தொடர்ந்து மாலை அங்குள்ள பைரவ ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் அனைவருக்கும் வடை பாயசத்துடன் அன்ன தானம் வழங்கப்பட்டது.
விழாவில் தருமபுரி, கிருஷ்ணகிரி, காவேரிப்ப ட்டிணம், போச்சம்பள்ளி, மத்தூர், மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள். கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார்.
- சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஜூஜூவாடி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் தினேஷ்குமார்.
தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் வாட்ஸ்-அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் பகுதிநேரம் வேலை இருப்பதாகவும், இதற்காக குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று இருந்தது.
இதனை நம்பிய தினேஷ்குமார் அந்த மெசேஜில் வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அதில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.12 லட்சத்து 21ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.
அதன்பின்பு அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது மர்ம நபரின் போன் சுவிட்ச் ஆப் செய்து இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டது தினேஷ்குமாருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார்.
இதேபோல் கிருஷ்ணகிரி பவர்ஹவுஸ் காலனியை சேர்ந்தவர் அஜீன்குமார் (வயது27). இவரது செல்போனில் வந்த எஸ்.எம்.எஸில் வந்த குறுஞ்செய்தியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று வந்தது. அந்த லிங்க்கை கிளிக் செய்தபோது வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் அஜீன்குமார் ரூ.7லட்சத்து 35ஆயிரத்தை செலுத்தினார். பின்னர் அந்த மர்ம நபரின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அஜீன்குமார் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார். இதேபோன்று ஓசூர் கே.சி.சி. நகரைச் சேர்ந்த ஷமீர் என்பவரின் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு மர்ம நபரின் வங்கி கணக்கில் ரூ.17 லட்சத்து 48 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் அவரை மர்ம நபர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். மாவட்டத்தில் 3 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.38 லட்சம் பணம் பறித்த சம்பவம் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் தீவிர விசாரணை
- 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் ஸ்ரீ குமரன் பைனான்ஸ் என்கிற நிதி நிறுவனத்தை தனபால் (55) என்பவர் நடத்தி வருகிறார். இந்த பைனான்சில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500 -க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்துள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டு காலமாக சீட்டு பணம் நிறைவடைந்த நிலையில், பணத்தை திருப்பி தராமல் பைனான்ஸ் கம்பெனியில் உரிமையாளர் தனபால் ஏமாற்றி வந்துள்ளார்.
இது சம்மந்தமாக பாதிக்கப் பட்டோர் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் தனபாலை அழைத்து விசாரித்தபோது, அவரது பேரில் இயங்கி வரும் மாங்கூல் உற்பத்தி தொழிற் சாலையை விற்று பணத்தை தருவதாகவும், அதற்கு ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது மாங்கூல் தொழிற்சாலை விற்பனை செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை தராமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் காவல் நிலையம் கூடிய பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தை பெற்றுத்தர போலீசாரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் பணத்தை திருப்பித்தர உத்திர வாதம் தராததால் நேற்று போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் உள்ள நிதி நிறுவனத்தை பாதிக்கப்பட்ட மக்கள் 50 ற்கும் மேற்பட்டோர் கூடி தனபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆத்திரம் கொண்ட தனபால், நிதி நிறுவன ஷோகேஸ் கண்ணாடியை கையால் உடைத்து, அதிலிருந்து சிதறிய கண்ணாடி துண்டை எடுத்துக் கொண்டு தன்னைத்தானே உடம்பில் அனைத்து பகுதி களிலும் குத்திக்கொண்டார்.
ரத்த வெள்ளத்தில் நிதி நிறுவனத்தை விட்டு வெளியே வந்து மீண்டும் தன்னைத்தானே குத்திக்கொண்டதால், பொது மக்கள் பயந்து சிதறியடித்து ஓடினர்.
பாதுகாப்பிற்காக அங்கிருந்த போலீசார் நெருங்கும்போது கண்ணாடி துண்டை கழுத்தில் வைத்து அறுத்துக்கொள்வதாக கூறியதால் காவலர்கள் அவரை நெருங்க முடியாமல் தவித்து வந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழ, போலீசாரும் பொது மக்களும் ஓடி சென்று அவர் கையிலிருந்த கண்ணாடி துண்டை அகற்றி, அவரை இரு சக்கர வாகனம் மூலம் போச்சம்பள்ளி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் நிதி நிறுவன உரிமையாளர் தனபால் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஏமாற்றப்பட்ட மக்கள் பணத்தை திருப்பி கேட்டதால் தனபால் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






