search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மல்லிக்கல் காலபைரவர் கோவிலில் அஷ்டமி பெருவிழா
    X

     காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    மல்லிக்கல் காலபைரவர் கோவிலில் அஷ்டமி பெருவிழா

    • காலபைரவருக்கு அபி ஷேகம், அர்ச்சனை பூஜைகள், செய்யப்பட்டது.
    • பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அண்ணாலை புதூர் மலை உச்சியின் மேல் குகையில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் அஷ்டமி பெருவிழா நடைப்பெற்றது. சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்த காலபை ரவருக்கு அபி ஷேகம், அர்ச்சனை பூஜைகள், செய்யப்பட்டது.

    இதில் தாமரைப்பூ மாலை, வில்லம்மால தும்பை பூமாலை, சந்தன மாலை, செவ்வரளி மாலை, மஞ்சள் மாலை, எலுமிச்சை மாலை, முழமுந்திரி மாலை, செவ்வந்தி மாலைகள் சாத்தப்பட்டு பூஜைகள் நடந்தது.

    அதனை தொடர்ந்து மாலை அங்குள்ள பைரவ ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் அனைவருக்கும் வடை பாயசத்துடன் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    விழாவில் தருமபுரி, கிருஷ்ணகிரி, காவேரிப்ப ட்டிணம், போச்சம்பள்ளி, மத்தூர், மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள். கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×