என் மலர்
கன்னியாகுமரி
- போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை
- ஓய்வு பெற்ற அரசுத்துறை அதிகாரி வீட்டில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் உள்ளிட்ட பல பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் நேற்று ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு போனதாக போலீசாருக்கு புகார் வந்தது. அஞ்சு கிராமம் வாரியூர் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜின், கன்னியாகுமரியில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசுத்துறை அதிகாரி வீட்டில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இன்று காலை வேலைக்கு வந்த ஜார்ஜின், வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் அங்கு இல்லை. இதுகுறித்து அவர், கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில், இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், ஜார்ஜனின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த 3 மாதங்களில் மட்டும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் திருடர்களின் உருவம் சிக்கியுள்ளதால் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு பைக் திருடர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 64 அணிகள் இடம்பெற்றது.
மார்த்தாண்டம் :
புனித சவேரியார் ஆலயம் மற்றும் இளைய தீபம் இளையோர் இயக்கம் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டியானது பூட்டேற்றி கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.குமரி மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 64 அணிகள் இடம்பெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியினை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பூட்டேற்றி புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை சிஜின் போட்டியினை தலைமையேற்று நடத்தினார்.பூட்டேற்றி மேல்நிலைப்பள்ளி தாளாளர் டென்னிஸ், கீழ்குளம் பேரூராட்சி கவுன்சிலர் அனிதா ராஜகிளன், கிள்ளியூர் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ராஜசேகரன், கீழ்குளம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜகிளன் மற்றும் இளையதீபம் இளையோர் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மழைநீர் ஓடை சீரமைக்கப் படாமல் சாக்கடை தேங்கி சுகாதார சீர்கேடு
- சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரணியல் :
வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலை அடிமடை யில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் வகுப்பு மாண வன் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் பிழைத்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி இருந்தது. மறுநாள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பத்மநாப புரம் கோட்டாட்சியர் கவுசிக் மழைநீர் ஓடையை சீரமைக்க பேரூராட்சி அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டு சென்றி ருந்தார்.
இந்த நிலையில் மாணவன் இழுத்து செல்லப் பட்ட மழைநீர் ஓடை பெயரளவுக்கு மட்டும் சீரமைக்கப்பட்ட தாகவும், எதிரே உள்ள மழைநீர் ஓடை சீரமைக்கப் படாமல் சாக்கடை தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும், மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அடைப்பு ஏற்பட்டு சாக் கடை தேங்கி நிற்கும் மழைநீர் ஓடைக்குள் பயணிகள் அவ்வப்போது விழுந்து அடிபட்டு செல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே துர்நாற்றம் வீசி, கொசுக்கள் உற்பத்தி யாகி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வரும் இந்த மழைநீர் ஓடையை போர்க்கால அடிப்படையில் வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
- கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் இன்று காலை பேரணி தொடங்கியது.
கன்னியாகுமரி :
8-வது தேசிய ஆயுர்வேத தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரை ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் இன்று காலை பேரணி தொடங்கியது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் பேரணியை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் வழியாக களியக்காவிளையை சென்றடைகிறது
- கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- 60 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப் பில் நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட் டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக ஒருங்கி ணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம்- தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தின் கீழ் நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டமானது 2016-17-ம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் விளைபொருட்களை (குறிப்பாக காய்கறிகள், பழங்கள்) இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதன் மூலம் விவசாயி கள் லாபம் அடை கின்றனர். இவ்வண்டிகள் மூலமாக விவசாயிகள் எளிய முறையில் காய்கனிகள் மற்றும் பழங்களை ஆங் காங்கே கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்ற னர்.
பேரிடர் மற்றும் பெருந் தொற்று காலகட்டத்தில் வெளியே செல்ல முடியாத சூழலில் நுகர்வோர் வீட்டி லிருந்தபடியே நடமாடும் காய்கனி வண்டிகள் மூலம் காய் கறிகள் மற்றும் பழங் களை பெற்று வருகின்றனர். வேலை வாய்ப்பினை ஏற்ப டுத்தி தருகின்
றது.
இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர், பழங்குடியினர், பெண்கள், ஊனமுற்றோர் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும் மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளி களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின்கீழ் பயன டைய ஆதார் நகல், புகைப் படம், குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவல கத்தில் சமர்ப்பிக்க வேண் டும்.
2016-17-ம் நிதியாண்டில் 30 எண்களும், 2017-18-ம் நிதியாண்டில் 10 எண்களும் வழங்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் நுகர்வோருக்கு காய்கறிகள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டபோது நடமாடும் காய்கனி வண்டிகளின் பங்கு அளப்பறியது. அதன் ஒரு பகுதியாக ஒருங்கி ணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி தேசிய தோட் டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் ஒன்றிற்கு ரூ.15 ஆயிரம் மானியம் வீதம் 30 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் நிதி இலக்கு பெறப் பட்டது.
ராஜாக்கமங்கலம் மற்றும் தோவாளை வட்டாரங்களை சேர்ந்த 30 பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் வழங்கப் பட்டது. அதனைத்தொ டர்ந்து 2023-2024-ம் நிதியாண்டில் நடமாடும் காய்கனி விற்பனை வண்டி ஒன்றுக்கு ரூ.15,000 மானியம் வீதம் 30 எண்ணத்திற்கு ரூ.4,50,000 நிதி இலக்காக பெறப்பட்டு, அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் 4 பயனாளி களும், தோவாளை வட்டாரத்தில் 3 பயனாளி களும், முஞ்சிறை வட்டா ரத்தில் 3 பயனாளிகளும், ராஜாக்கமங்கலம் வட்டா ரத்தில் 3 பயனாளிகளும், தக்கலை வட்டாரத்தில் 3 பயனாளிகளும், குருந்தன் கோடு வட்டாரத்தில் 4 பயனாளிகளும், கிள்ளியூர் வட்டாரத்தில் 3 பயனாளி களும், திருவட்டார் வட்டா ரத்தில் 3 பயனாளிகளும் மற்றும் மேல்புறம் வட்டா ரத்தில் 4 பயனாளிகளும் என தேர்வு செய்யப்பட்ட 30 பயனாளிகள் என மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப் பில் நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தோவாளை உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது
- தகவலை பூதப்பாண்டி உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் :
செண்பகராமன்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனங்கோப்பு, சீதப்பால், தாழக்குடி, ஈசாந்திமங்கலம், நாவல்காடு, ஆண்டித்தோப்பு, தோவாளை, வெள்ளமடம், செண்பகராமன்புதூர், லாயம், நாக்கால் மண்டபம் போன்ற பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை செண்பகராமன்புதூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதுபோல் தோவாளை உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கட்டர்குளம், மரப்பாலம், பொய்கை ரோடு, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை பூதப்பாண்டி உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- மகளிர் அணியில் கூடுதலாக உறுப்பினர்கள் சேர்க்கவும்
- இளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் அதிகமான பெண்களை சேர்க்கவும் தீர்மானம்
ராஜாக்கமங்கலம் :
ராஜாக்கமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் ராஜாக்க மங்கலத்தில் ஒன்றிய செய லாளர் பொன்சேகர் தலை மையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம்
எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்ட னர்.
கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கிருஷ்ணதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகே சன், இலக்கிய அணி அமைப்பு செயலாளர் சந்துரு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அக் ஷயாகண்ணன், ஒன்றிய செயலாளர் பொன் சுந்தர நாத், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் அய்யப்பன், சாந்தினி பகவதியப்பன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சுந்தரம், மாவட்ட பஞ்சாயத்து கவுன் சிலர் ஜான்சிலின் விஜிலா, மாநில மகளிர் அணி துணை செயலாளர் ராணி, ஒன்றிய செயலாளர்கள் வீராசாமி, ராதாகிருஷ்ணன், முன் னாள் மாவட்ட செயலாளர் அசோகன், ராஜாக்கமங்க லம் கிளை செயலாளர் தங்கப்பன், ஒன்றிய அவைத் தலைவர் முருகன், ஒன்றிய பொருளாளர் மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் மகளிர் அணியில் கூடுதலாக உறுப்பினர்கள் சேர்க்கவும், இளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் அதிகமான பெண்களை சேர்க்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு பூத்துக்கும் தனித்தனி பொறுப்பாளர்களை நியமித்து அதிகமான வாக்குகளை அ.தி.மு.க.விற்கு பெற தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. முடிவில் நாகர்கோவில் மாநகர உறுப்பினர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்
- வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் சைமன் நகர் பகுதியை சேர்ந்தவர் தாணுமூர்த்தி (வயது 58). இவர் தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் சார்பதிவாளராக வேலை பார்த்து வருகிறார்.
தாணுமூர்த்தி கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தாணு மூர்த்தி மீது நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சார்பதிவாளர் தாணுமூர்த்தி மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அவரது வீடுகளில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் இன்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் உள்ள சார்பதிவாளர் தாணுமூர்த்தி வீட்டிற்கு இன்று காலை 7.30 மணிக்கு இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் தலைமையில் போலீசார் சென்றனர். வீட்டில் சார்பதிவாளர் தாணுமூர்த்தி மற்றும் அவரது மனைவி இருந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
வீட்டிலிருந்த ஆவணங்கள் குறித்த தகவல்களையும், சார்பதிவாளர் தாணுமூர்த்தியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டறிந்தனர். காலை தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதேபோல் திங்கள்நகர் காந்திநகரில் உள்ள தாணுமூர்த்தியின் மனைவி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். காலை 7 மணிக்கு சோதனை தொடங்கியது. வீட்டில் இருந்த தாணு மூர்த்தியின் மாமனார், மாமியார் மற்றும் அவரது மனைவியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
வீட்டிலிருந்த சில ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நாகர்கோவிலில் நேற்று மாலையில் மழை வெளுத்து வாங்கியது.
- கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாத காலமாக பரவலாக தினமும் மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவி வருகிறது. காலையில் வெயில் அடித்தாலும் தினமும் இரவு நேரத்தில் மழை நீடித்து வருவதால் இதமான குளிர் காற்றும் வீசி வருகிறது.
மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்த நிலையில் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
நாகர்கோவிலில் நேற்று மாலையில் மழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு இரவு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
சிற்றாறு-2 அணைப்பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 122.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, களியல், கன்னிமார், தக்கலை, ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பெருஞ்சாணி அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். சிற்றார் 1- நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையில் இருந்து 234 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர் மழையின் காரணமாக கோதையாறு, வள்ளியாறு, பரளிஆறு, பழையாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மழைக்கு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
புத்தனார் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மணவாளக்குறிச்சி பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது அங்கு நெல் அறுவடை செய்து கொண்டிருந்த சேலத்தை சேர்ந்த டிரைவர் சபரி ராஜா மின்னல் தாக்கி பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்களில் தலா 2 வீடுகள் மழைக்கு இடிந்து விழுந்தது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.33 அடியாக உள்ளது. அணைக்கு 839 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.30 அடியாக உள்ளது. அணைக்கு 630 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 15.97 அடியாக உள்ளது. அணைக்கு 261 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.
அணையில் இருந்து 234 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 88.6, பெருஞ்சாணி 7.2, சிற்றார் 1-93.4, சிற்றார் 2- 122.6, களியல் 54.4, கன்னிமார் 57.8, கொட்டாரம் 10.2, குழித்துறை 20, மயிலாடி 5.2, நாகர்கோவில் 32.4, புத்தன் அணை 5.6, சுருளோடு 35.2, தக்கலை 88, குளச்சல் 14, இரணியல் 42, பாலமோர் 24.4, மாம்பழத்து றையாறு 95.4, திற்பரப்பு 24.8, கோழிப்போர்விளை 78.2, அடையாமடை 20, குருந்தன்கோடு 48, முள்ளங்கினாவிளை 25.6, ஆணைக்கிடங்கு 94.2, முக்கடல் 32.
- மேயர் மகேஷ் ஆய்வு செய்து உத்தரவு
- ரோட்டின் ஆக்கிரமிப்பு பகுதி இடத்தில் பஸ் நிறுத்தம் அமைக்க தேவையான நடவடிக்கை
நாகர்கோவில், நவ.6-
நாகர்கோவில் மாநகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட சுங்கான்கடை பகுதியில் மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அங்கு அரசு தொடக்கப்பள்ளியில் சேதமடைந்த சுற்றுச்சுவரை பார்வையிட்ட அவர், அதனை சரி செய்யவும், பாலிடெக்னிக் கல்லூரி முன்புள்ள மழைநீர் வடிகால் ஓடையில் மண் அடைப்பு ஏற்பட்டுள்ளதை சீரமைக்கவும் உத்தரவிட்டார். மேலும் பழுதுபட்டுள்ள குடிநீர் வால்வை மாற்றி அமைக்கவும், பொதிகை நகர் தெருவில் ஊற்று தண்ணீர் சாலையில் செல்வதால் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ள பாசியை அகற்றி சரி செய்யவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பொதுபணித்துறைக்கு சொந்தமான குளத்தில் விழுந்து கிடக்கும் மரத்தை அதற்றவும், ரோட்டின் ஆக்கிரமிப்பு பகுதி இடத்தில் பஸ் நிறுத்தம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேயர் மகஷே் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி 41-வது வார்டு ஹவ்வா நகரில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை சீரமைப்பு பணி, 34 -வது வார்டு பார்க் ரோடு காமராஜர் தெரு மற்றும் என.பி. காலனி பகுதிகளில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம் அமைக்கும் பணி, 16-வது வார்டு பரமேஸ்வரன் தெரு, கே.பி. ரோடு குறுக்கு சாலை, எம்.எஸ் ரோடு குறுக்கு சாலை பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம் அமைக்கும் பணி போன்றவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர நல அலுவலர் டாக்டர் ராம் குமார், நகரமைப்பு ஆய்வாளர் சந்தோஷ், சுகாதார ஆய்வாளர் சத்தியராஜ், மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், கவுன்சிலர்கள் அணிலா, தினகரன், பகுதி செயலாளர் ஷேக்மீரான், வட்ட செயலாளர் ராஜேஷ் மாநகராட்சி தொழில்நுட்ப உதவியாளர்கள் ரவி, மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், அணிகளின் நிர்வாகிகள் சரவணன், வட்டச் செயலாளர் அப்துல் கரீம், ஜானகிராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தல்
- ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் பெண்கள் பணிபுரியும் அனைத்து அரசு துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், போட்டி தேர்வு மையங்கள், தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், சிறுகுறு நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா பணியிடங்கள் முதலான அனைத்து பணியிடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரியும், கல்வி பயிலும் பட்சத்தில் அங்கு பாலியல் வன்கொடுமையை தவிர்ப்பதற்காக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013-ன் கீழ் உள் புகார் குழு அமைத்திட வேண்டும். ஒவ்வொரு அலுவலகத்திலும், வேலையிடத்திலும் அதன் பிரிவு பணியிடங்களிலும் 4 உறுப்பினர்கள் கொண்ட உள்ளக புகார் குழு எழுத்துப்பூர்வ ஆணையில் அமைத்திடல் வேண்டும். உள்ளக புகார் குழுவானது கீழ்க்காணும் உறுப்பினர்களை கொண்டு இருக்க வேண்டும். உறுப்பினர்-1 மூத்த நிலையிலுள்ள ஒரு பெண் உறுப்பினர். இவரே குழுவின் தலைமை அலுவலர் ஆவார். உறுப்பினர்-2 அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர், உறுப்பினர்-3 அலுவலகத்தில் பணிபுரிபவர், உறுப்பினர்-4 அலுவலகத்தில் பணிபுரிபவர் சட்டம் பணி அனுபவம் உள்ளவர், உறுப்பினர் 5 சமூகநல பணியாளர் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண்கள் தொடர்புடைய பணி அனுபவம் உள்ளவர்.
மொத்த உறுப்பினர்களில் பாதிப்பேர் பெண்களாகவும், இதன் அலுவல் காலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றத்திற்குரியதாகவும் இருக்க வேண்டும். உள் புகார் குழுவானது பணிபுரியும் இடங்களில் மற்றும் கல்வி பயிலும் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான புகார் மனுக்கள் மீதான விசாரணைக்கு துணை புரிந்து, அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர், கல்வி பயிலும் மாணவிகளுக்கு தங்கள் பணியிடத்தில், நிறுவனங்களில் பாலியல் தொந்தரவு ஏதும் ஏற்படும் நிலையில் இக்குழு மூலம் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்பான புகார் மனுக்களை பெறுவதற்கு அந்தந்த நிறுவனங்களில் புகார் பெட்டி வைக்கப்படவேண்டும். இந்த உறுப்பினர்கள் அடங்கிய உள்ளக புகார் குழு அமைத்து அதன் உறுப்பினர்கள் விவரம் கன்னியாகுமரி மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு கடிதம் மூலம் அனுப்பிட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
உள் புகார் குழு மற்றும் புகார் பெட்டி வைத்திடாத அலுவலகங்கள் கல்வி, தொழில் நிறுவனங்கள், போட்டி தேர்வு மையங்கள் மற்றும் பெண்கள், மாணவியர் விடுதிகள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்ட பிரிவுகளின்படி ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இதுதொடர்பான கூடுதல் விவரம் அறிய மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெண் டிரைவர்கள் நியமனம்
- முதியவர்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த நடைமேடைகளுக்கும் பேட்டரி கார்களை இயக்கவேண்டும்
நாகர்கோவில் :
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் வசதிக்காக பேட்டரி கார்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு டெண்டர் முடிவுக்கு வந்ததாலும் கொரோனே காரணமாகவும் பேட்டரி கார்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தற்போது சிறப்பு ரெயில்கள் மற்றும் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் வரத்து அதிகமாக உள்ளது. இதில் 2 மற்றும் 3-வது நடைமேடைகளில், சென்னை மற்றும் பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் ரெயில்கள் நிறுத்தப்படுகின்றன.
அந்த ரெயில்களில் வரும் பயணிகள், முதியோர் நுழைவு வாயில் செல்ல சிரமப்பட்டனர். எஸ்கலேட்டர், லிப்ட் வசதி இருந்தாலும் பல நேரங்களில் அவை இயங்குவதில்லை. எனவே பேட்டரி கார் வசதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து பேட்டரி கார் இயக்க டெண்டர் விடப்பட்டது. இது முடிவுக்கு வந்ததும் 2 பேட்டரி கார்கள், நாகர்கோவில் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. அதனை இயக்க 2 பெண் டிரைவர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று முதல் அந்தக் கார்கள் இயக்கப்பட்டன.
ஒரு பயணிக்கு ரூ.10 கட்டணத்தில் பேட்டரி கார் இயக்கப்பட்டது. இந்தக் கார்கள், முதல் நடைமேடையில் மட்டும் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் பெங்களூரூ மற்றும் சென்னை சிறப்பு ரெயில்கள் 2 மற்றும் 3-வது நடைமேடைகளில் தான் வந்து செல்கின்றன. இந்த ரெயில்களில் குழந்தைகளுடன் வரும் பெண்கள் மற்றும் முதியவர்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த நடைமேடைகளுக்கும் பேட்டரி கார்களை இயக்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






