search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரிபெய்டு மீட்டர் பொருத்தும் பணியை கைவிட வேண்டும்
    X

    பிரிபெய்டு மீட்டர் பொருத்தும் பணியை கைவிட வேண்டும்

    • மின் வாரியத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை
    • வீடுகளுக்கான 100 யூனிட், கைத்தறி உள்ளிட்ட தொழில்களுக்கு இலவச மின்சாரம்

    மார்த்தாண்டம், நவ.9-

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிள்ளியூர் வட்டார செயலாளர் சாந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

    மின்துறையில் தனியாரை ஊக்குவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மின்சார திருத்த மசோதா 2023-ஐ மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு காரணமாக இம்மசோதா நிலைக்குழு வுக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றபட்டால் மின் உற்பத்தி மட்டுமின்றி வினி யோகத்திலும் தனியார்துறை ஈடுபடுத்தப்படும் சூழ்நிலை ஏற்படும்.

    ஏற்கனவே தமிழகத்தில் விவசாய இலவச மின்சாரம், வீடுகளுக்கான 100 யூனிட், கைத்தறி உள்ளிட்ட தொழில்களுக்கு இலவச மின்சாரம் நடைமுறையில் உள்ளது. ஒன்றிய மின்சார திருத்தசட்டம் 2023 அமுலாகும்போது மின்துறை தனியார்மயம் ஆகும் சூழலில் மேற்கண்ட சலுகைகள் அனைத்தையும் தமிழகம் இழக்கும் நிலை உருவாகும்.

    இந்த நிலையில் தமிழக அரசு புதிய ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர் கோரியுள்ளது. மீட்டர் மாற்றி பொருத்த 3000 கோடி ரூபாய் தேவை. ஏற்கனவே தமிழக மின் வாரியத்திற்கு பல கோடி ரூபாய் கடன் உள்ளது. மாநில அரசு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தாவிட்டால், மானியத்தை கொடுக்க முடியாது என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பக்கத்து மாநிலமான கேரளம், ஒன்றிய அரசின் நிர்பந்தத்தை நிராகரித்து அம்மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளது.

    எனவே தமிழக அரசு ஒன்றிய அரசின் நிர்பந்தத்தை நிராகரித்து தமிழக மின்துறையை பாதுகாக்கவும், இலவச மின்சாரத்தை தொடரவும் ஸ்மார்ட் மீட்டர் என்ற பிரிபெய்டு மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிள்ளியூர் கிழக்கு வட்டார கமிட்டி சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×