என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்சூரன்சு ஊழியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்
    X

    இன்சூரன்சு ஊழியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்

    • செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
    • குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    பொது இன்சூரன்சு ஓய்வு பெற்ற ஊழியர்கள் கூட்ட மைப்பின் அகில இந்திய செயற்குழு கூட்டம் கன்னியா குமரியில் 2 நாட்கள் நடந்தது. அகில இந்திய பொதுச் செயலாளர் பானர்ஜி தலைமை தாங்கினார். மண்டல மேலாளர் கோபி சங்கர், ஊழியர்கள் சங்க மதுரை மண்டல தலைவர் ஆறுமுக நயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி மேலாளர் பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். "மெடிக் கிளைம் பாலிசி"க்கான பிரிமியத்தை மாத சந்தாவாக பெற்று கொள்ள வேண்டும். அதற்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதிய புத்தகம் வழங்க வேண்டும். மெடிக்கிளைம் காப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வூதியர்களின் நலனுக்காக சிறப்பாக செயலாற்றியதற்காக மதுரை மண்டல செயல் தலைவர் சோமசுந்தரத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மதுரை மண்டல செயலாளர் ரெங்கா, அமைப்பு செயலாளர் ராம சுப்பிரமணியன் உள்பட நாடு முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×