என் மலர்
கன்னியாகுமரி
- கடலில் புனித நீராடி வழிபட்டனர்
- வாகன பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், அதைத்தொடர்ந்து நித்திய பால் தர்மமும், அன்னதானமும் நடந்தது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் முட்டப்பதி அய்யா வைகுண்ட சாமி பதி உள்ளது. இது அய்யா வைகுண்ட சாமியின் பஞ்சபதிகளில் ஒன்றாகும். அதுமட்டுமின்றி அய்யா வைகுண்டசாமி விஞ்சை பெற்ற இடமாகும். இந்த பதியில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை அன்று அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடை பெறுவது வழக்கம்.
அதேபோல கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கி ழமையான இன்று அதி காலை 4 மணிக்கு முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் திருநடை திறக்கப் பட்டு அய்யாவுக்கு பணி விடைகள் நடந்தது.
அதைத்தொடர்ந்து உகப்படிப்பு நடந்தது. பின்னர் வாகன பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், அதைத்தொடர்ந்து நித்திய பால் தர்மமும், அன்னதானமும் நடந்தது.
முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியின் தர்மகர்த்தா மனோகரா செல்வன் அய்யா வைகுண்ட சாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழ மையான இன்று முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் அய்யாவழி பக்தர் கள் கூட்டம் அதிகம் காணப் பட்டது.
அதிகாலை முதலே கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங் களை சேர்ந்த ஆயிரக்க ணக்கான அய்யாவழி பக்தர்கள் முட்டப்பதியில் குவிந்து இருந்தனர். அவர்கள் முட்டப்பதி தீர்த்தக்கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்தி ருந்து அய்யா வைகுண்ட சாமியை வணங்கி வழிபட்டு சென்றனர்.
இதேபோல முட்டப்பதி யில் உள்ள அய்யா மூத்த நயினார் பதி, நரியன்விளை யில் உள்ள தெட்சணத்து துவாரகாவதி, ஆமணக்கின் விளை வாவைப்பதி, ரஸ்தாகாடு காயாம்பூபதி உள்பட அனைத்து அய்யா வைகுண்டசாமி பதிகளில் கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று அய்யாவுக்கு பணி விடைகள் நடந்தது.
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் மரியாதை
- கொடும் செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மார்த்தாண்டம் :
கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் கருங்கல் ராஜீவ் ஜங்சனில் இந்திரா காந்தியின் 106-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கொடும் செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் குமரேசன், கருங்கல் பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஆசீர்பிரைட் சிங், குமார், சுனில்குமார், ஊராட்சி பேரூராட்சி காங் கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஜெபர்சன், சுரேஷ் கியூபர்ட் ராஜ், ஜெஸ்டின், ராஜகிளன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சம்பவத்தன்று அதிக அளவில் மது குடித்த நிலையில் தூங்க சென்றார்.
- வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை, நவ.19-
மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 50), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். விஜயன் கொடுங்குளத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அதிக அளவில் மது குடித்த நிலையில் தூங்க சென்றார். பின்னர் காலையில் அவர் எழும்பவில்லை.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அருகில் சென்று பார்த்தபோது விஜயன் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் கொண்டாடப்பட இருக்கிறது.
- விழா ஏற்பாடுகளை அனைத்திந்திய கூட்டுறவு வார விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
நாகர்கோவில் :
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14-ந்தேதி முதல் நாளை (20-ந்தேதி) வரை நாடு முழுவதும் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டா டப்பட்டு வருகிறது.
70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தமிழ்நாட்டின் பொருளா தாரத்தை ஒரு டிரில்லிய னாக்குவதில் கூட்டுறவின் பங்கு எனும் கருப்பொருளை மையமாக கொண்டு கொண்டாடப்பட்டு வரு கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் 7-வது நாளான நாளை 20-ந்தேதி அன்று கூட்டுறவு கல்வி மற்றும் பயிற்சியை சீரமைத்தல் என்ற தலைப்பில் நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் கொண்டாடப்பட இருக்கிறது.
விழாவிற்கு கன்னியா குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்குகிறார். அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலை வகிக்கிறார். விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பிக்க உள்ளனர்.
விழாவில் பொதுமக்கள், கூட்டுறவாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் கலந்துகொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை அனைத்திந்திய கூட்டுறவு வார விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
- பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.05 அடியாக இருந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 மாதமாக விட்டுவிட்டு பெய்த மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது. குமரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
மார்த்தாண்டம், களியல், குலசேகரம் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. இடிச்சத்தம் காதை பிளக்கும் வகையில், மின்னல்கள் கண்ணை பறிக்கும் வகையில் இருந்தன. களியலில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் மழை பதிவானது.
கொட்டாரம், மயிலாடி, தக்கலை, அடையாமடை, முள்ளங்கினாவிளை, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அதன்பிறகு மழை பெய்தது. சுமார் 2 மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். காலை 8 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை மதியம் 1 மணி வரை நீடித்தது. இடைவிடாது கொட்டிய மழையின் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கொட்டாரம், சுசீந்திரம், சாமிதோப்பு, கன்னியாகுமரி, தக்கலை, குழித்துறை பகுதியில் காலை முதலே மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது.
அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதியிலும் மழை நீடித்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் அணையில் இருந்து கூடுதல் தண்ணீரை வெளியேற்றுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். சிற்றாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மதகுகள் வழியாக மட்டும் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.05 அடியாக இருந்தது.
அணைக்கு 801 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 503 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.81 அடியாக இருந்தது. அணைக்கு 408 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 280 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பொய்கை அணையின் நீர்மட்டம் 8.20 அடியாகவே உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 58.4, பெருஞ்சாணி 4.8, சிற்றார் 1-32, சிற்றார் 2-42, களியல் 60, கொட்டாரம் 25, குழித்துறை 9.2, மயிலாடி 4.2, புத்தன அணை 4, தக்கலை 9.4, பாலமோர் 2.4, மாம்பழத்துறையாறு 12, திற்பரப்பு 31.4, அடையாமடை 7.1, முள்ளங்கினா விளை 4.2, ஆணைக்கிடங்கு 13, முக்கடல் 20.
- வரி வசூல் மைய மின் மீட்டரும், உயர் கோபுர விளக்கிற்கும் உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில் உள்ளது.
- தீயை சுமார் ½ மணி நேரம் போராடி அணைத்தனர்
இரணியல் :
திங்கள்நகர் பேரூராட்சி மார்க்கெட் வரி வசூல் செய்வதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வரி வசூல் மையம் மார்க்கெட் நுழைவு சாலையில் உள்ளது. அங்கு உயர்கோபுர மின் விளக்கு, மின் மீட்டர் பெட்டி உள்ளது. வரி வசூல் மைய மின் மீட்டரும், உயர் கோபுர விளக்கிற்கும் உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில் உள்ளது.
நேற்று நள்ளிரவு இந்த மின் மீட்டரில் மின் கசிவு ஏற்பட்டு மீட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த வழியாக குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் ரோந்து வந்தார். அவர் மின் மீட்டர் தீயில் எரிவதை பார்த்து உடனே திங்கள்நகர் தீயணைப்பு நிலையத்திற்கும், மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டருக்கும் தகவல் தெரிவித்து அங்கு வரவழைத்தார். இன்ஸ்பெக்டர் பெருமாள், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ஜாண் வின்ஸ் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று பரவும் தீயை சுமார் ½ மணி நேரம் போராடி அணைத்தனர். இதனால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. மின் மீட்டர் தீப்பிடித்து எரிந்ததில் தக்க நேரத்தில் அங்கு சென்று தீயை அணைக்க முயற்சி மேற்கொண்ட டி.எஸ்.பி. தங்கராமனை அப்பகுதி கடைக்காரர்கள், பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.
திங்கள் நகர் பேரூராட்சி பகுதியில் மின் விநியோகம் நடைபெறும் மின்கம்பிகள் முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுத்தருளினார்.
நாகர்கோவில் :
கந்த சஷ்டி விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ் வான சூரசம்ஹார விழா குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று நடந் தது.
இந்த விழாவையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுரு கன் சன்னதியில் நேற்று காலையில் முருகப்பெருமா னுக்கு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தன. இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் சூரனை வதம் செய்ய முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுத்தருளினார்.
நாகராஜா கோவிலின் 4 ரதவீதிகளிலும் வலம் வந்த பின்னர் நாகராஜா திடலில் சூரனை, முருகப்பெருமான் வேலால் குத்தி வதம் செய்யும் நிகழ்ச்சி இரவு 7 மணி அளவில் நடந்தது. பின்னர் ஒழுகினசேரியில் உள்ள ஆராட்டுத்துறையில் சாமிக்கு ஆராட்டு நடந்தது. தொடர்ந்து சாமி கோவி லுக்கு எழுந்தருளினார். இன்று நாகராஜா கோவில் பாலமுருகன் சன்னதியில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆரல்வாய்மொழி பெரு மாள்புரம் இந்து நாடார் சமு தாயம் வவ்வால்குகை பால முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாட்களில் தினமும் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம் ஹாரம் நேற்று மாலையில் நடந்தது. இதனையொட்டி வவ்வால் குகை பாலமுருகன் சுப்பிரமணியபுரத்திலிருந்து மெயின்ரோடு வழியாகமேள தாளங்களுடன் சூரன் முன்னே செல்ல வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் பாலமுரு கன் பின்னே துரத்தியபடி சென்றார். மாலை 6.30 மணிக்கு சூரனை பால முருகன் வதம் செய்தார். தொடர்ந்து கண்ணை கவரும் வகையில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந் து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட் டளை தலைவர் பகவதி யப்பன், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் சுயம்பு ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தோவாளை செக்கர்கிரி சுப்ரமணியசாமி ஆலயத்தில் சூரசம்ஹார விழா அதிர்வேட்டு முழங்க வானவேடிக்கையோடு கேரள பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சியோடு சிறப்பாக நடைபெற்றது. ஏற்கனவே கந்த சஷ்டியை முன்னிட்டு ஆயிரக்க ணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் மேற்கொண் டார்கள். தினசரி முருகப்பெ ருமானுக்கு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடந்தது. நேற்று சூரசம்கா ரத்தை முன்னிட்டு செக் கர்கிரி ஆலயத்தில் இருந்து வேலவன் பல்லக்கில் சூரசம்ஹாரத்துக்கு புறப் பட்டு கோவில் அடிவா ரத்தில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.
மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கேரளக் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. இதை பொது மக்கள் வியப்புடன் கண்டு களித்தனர்.
விழா ஏற்பாடுகளை செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் விழா கமிட்டி செய்து வந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதி யப்பன், பொறியாளர் லட்சுமணன், விழா குழு நிர்வாகி கருணாநிதி, தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் தாணுஉள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
முடிவில் வான வேடிக்கை நடைபெற்றது. சூரசம்ஹாரம் முடிந்த முருகன் கோவில்களில் முருக பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடந்தது. வடிவீஸ்வ ரம் அழகம்மன் கோவில், ஆரல்வாய்மொழி வவ்வால் குகை பாலமுருகன் சுவாமி கோவில், தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணிய சாமி கோவில், வெள்ளி மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்களில் முருக பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி முருகன் குன்றம் கோவிலில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண கோலத்தில் இந்திர வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளங்களுடன் பட்டண பிரவேசம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- சி.சி.டி.வி.காமிராவின் காட்சிகள் ஆய்வு
- குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.
நாகர்கோவில், நவ.19-
புதுக்கடை அருகே முன்சிறை சந்திப்பில் இருந்து முஞ்சிறை கிராம நிர்வாக அலுவலகம் மங்காடு வழியாக களியக் காவிளைக்கு செல்லும் சாலை ஓரத்தில் முட்புதரில் பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்தது.
இதை பார்த்த பொது மக்கள் புதுக்கடை போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர். புதுக்கடை போலீசாரும் குழந்தை நலத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
பின்னர் முட்புதரில் கிடந்த குழந்தையை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு குழந்தையை கண்காணித்து வருகிறார்கள். குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.
பிறந்த சில மணி நேரத்தில் குழந்தை வீசப் பட்டுள்ளது.
எனவே அதே பகுதியை சேர்ந்த பெண்கள் யாராவது வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள். கள்ளக்காத லில் பிறந்த குழந்தையாக இருக்க லாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர் பாக விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
அந்த பகுதியில் யாராவது நிறை மாத கர்ப்பிணியாக இருந்து தற்பொழுது குழந்தை பெற்றுள் ளார்களா? என்பது குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
மேலும் குழந்தை வீசப்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் சி.சி.டி.வி. காமிராக்களில் சரியான காட்சிகள் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள்.
- குளச்சல் மரைன் போலீசில் மீனவர்கள் மனு
- இந்த வகை வலையை பயன்படுத்துவதால் கடலில் உள்ள பவள பாறைகள் அழிந்து விடுகிறது
குளச்சல் :
தேங்காய்பட்டணம் துறைமுகம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு களும், 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகு கள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்பும். கட்டுமரம், வள்ளங்கள் அருகில் சென்று மீன் பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும்.
இந்த மீனவர்கள் தூண்டி லை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இந்நிலை யில் கடந்த சில மாதங்களாக தேங்காய்பட்டணம் கிழக்கு, மேற்கு பகுதியில் சில கட்டு மரங்கள் தடை செய்யப்பட்ட 'கஜா முஜா' வலையை பயன்படுத்தி மீன்பிடித்து செல்வதாக அப்பகுதி கட்டு மர மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த வகை வலையை பயன்படுத்துவதால் கடலில் உள்ள பவள பாறைகள் அழிந்து விடுகிறது என்றும், மீன்கள் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்றும், இதனால் கட்டுமர மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த 'கஜா முஜா' வலையை பயன் படுத்தி மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்த கோரி நீரோடி முதல் ஆரோக்கிய புரம் வரை உள்ள கட்டுமரம், வள்ளம் மீன் பிடித்தொழில் பாதுகாப்பு சங்க மாவட்ட முன்னாள் செயலாளர் மரிய விஜயன் தலைமையில் மீனவர்கள் நேற்றிரவு குளச்சல் மரைன் போலீசில் மனு அளித்தனர்.
அப்போது பூத்துறை, ராமன்துறை, இனயம் புத்தன்துறை கட்டு மரம், வள்ளம் மீனவர்கள் உடனிருந்தனர்.
- பயிற்சி மருத்துவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோர் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுதியிருந்தார்
- முன்னாள் மாணவர்களின் பதிவேடுகள், அவர்களின் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் ஆய்வு
திருவட்டார், நவ.19-
குமரி மாவட்டம் குலசே கரம் நாகக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முதுநிலை மருத்துவ பயிற்சி மாணவி சுகிர்தா தற்கொலை செய்துகொண் டார்.
இவர் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில் பேராசிரியர் பரமசிவன் தன்னை செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும், பயிற்சி மருத்துவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோர் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுதியிருந்தார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரப்பரப்பானது குலசே கரம் போலீசார் விசாரித்து வந்த நிலையில் மாண வர்களின் போராட்டம் எதிரொலியாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட் டது.
இதில் டாக்டர் பரமசிவன் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டார். தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ப்ரீத்தி, ஹரிஷ் ஆகிய 2 பேரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி நேரடியாக விசாரித்தனர். இவர்களும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையில் போலீசார் ஸ்ரீமுகாம்பிகா மருத்துவ கல்லூரிக்கு சென்று முன்னாள் மாணவர்களின் பதிவேடுகள், அவர்களின் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்து விசாரித்தனர். கல்லூரி நிர்வாகத்தின ரிடமும் கிடுக்கிப்பிடி விசா ரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு சம்மந்தமாக இதுவரை சுமார் 70 பேரிடம் விசாரணை செய்துள்ளனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
- திருநங்கை தற்போது சாலையோரம் பிணமாக கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
தேனி மாவட்டம் குமுளி பகுதியை சேர்ந்தவர் சுமன் (வயது 33). திருநங்கையான இவர் கடந்த 2 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை வீர புலி பகுதியில் வசித்து வந்தார்.
கூலி வேலை செய்து வந்த சுமன் இன்று காலை வீரபுலி பகுதியில் ரோட்டோரத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் கீரிப்பாறை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
ரோட்டோரத்தில் பிணமாக கிடந்த சுமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பலியான திருநங்கை சுமனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. பிரேத பரிசோதனையில் தான் அவர் எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும். கடந்த வாரம் கன்னியாகுமரி பகுதியில் ரோட்டோரத்தில் திருநங்கை ஒருவர் பிணமாக கிடந்த நிலையில், மேலும் ஒரு திருநங்கை தற்போது சாலையோரம் பிணமாக கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஐயப்ப பக்தர்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர்.
- கடல் சீற்றமும் தணிந்த பிறகு தான் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் தொடங்கிய 3-வது நாளான இன்று கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலிதுறை கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினார்கள். ஆனால் மழை மேக மூட்டம் காரணமாக வானம் மப்பும் மந்தாரமாக காட்சி அளித்தது. இடையிடையே விட்டுவிட்டு மழை பெய்துகொண்டே இருந்தது. தொடர்ந்து மழை மேகம் சூழ்ந்து சூரிய வெளிச்சம் வெளியே தெரியாமல் இருந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரைக்கு சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அதேபோல கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட ராட்சத அலைகளால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதையும் மீறி கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கடலில் புனித நீராட சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்த போதும் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர். கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
மழை பெய்து கொண்டிருந்தபோதும் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் கன்னியாகுமரியில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களை சுற்றி பார்வையிட்டனர். இதனால் காந்திநினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரியில் இன்று காலையில் திடீர் என்று மழை பெய்தது. இதனால் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. மழை நின்று, கடல் சீற்றமும் தணிந்த பிறகு தான் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் மழையின் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது.
இங்கு சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக் கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.






