என் மலர்
கன்னியாகுமரி
- நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் பார்வையிட்டார்
- விவேகானந்தர் நினைவு மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே நடைபெறுகிறது
கன்னியாகுமரி :
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பணிகள் வருகை தருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடல் நடுவில் அமைந்துஉள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வை யிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகா னந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப் படியான பாறை களும் உள்ளது. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளு வர் சிலைக்கு இயக்கப்படு வதில்லை.
இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளூர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்பு களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளு வர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தர விட்டு உள்ளது.
அதன்படி ரூ.29 கோடியே 33 லட்சம் செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த ஜூன் மாதம் நடந்தது. இந்த நிலையில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த மே மாதம் 24-ந்தேதி தொடங்கி யது.
இதைத் தொடர்ந்து தற்போது திருவள்ளுவர் சிலை வளாகத்தில் பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை தமிழக நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் நேற்று நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கிராம சாலைகள் தலைமை பொறியாளர் நெல்லை தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் நாகர்கோவில் கோட்ட பொறியாளர் பாஸ்கரன் உதவி கோட்ட பொறியாளர் ஹெரால்டு கன்னியாகுமரி தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலை வாய்ப்பு முகாமில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், கல்லூரி தாளாளர், கல்லூரி முதல்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமை நாகர்கோவிலில் விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நியமன சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்த அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஒன்றினை நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வைத்து நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி ஜெரிபா, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், கல்லூரி தாளாளர், கல்லூரி முதல்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 120 நிறுவனங்கள் கலந்து கொண்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்தனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- மோசடியில் தேனியை சேர்ந்த முரளி (24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது.
- நாகர்கோவிலில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் புதுக்கடை ஐரேனியபுரம் கோணத்துவிளையை சேர்ந்தவர் பிரவிதா (வயது 29). இவர் நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எனக்கு ஐரேனிய புரத்தைச் சேர்ந்த அபிஷா (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், தற்போது பெங்களூரு கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஜோயல் தேவா (37) என்பவரை திருமணம் செய்து பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அபிஷாவும், அவருடைய கணவர் ஜோயல் தேவாவும், தங்களுக்கு ரெயில்வே துறையில் முக்கிய அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக ரெயில்வேயில் வேலை வாங்கி தர முடியும் என்றும் என்னிடம் கூறினர். ஆனால் வேலை வாங்கித் தர வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறினார்கள்.
இதனை நம்பி நான் ரூ.20 லட்சம் கொடுத்தேன். இதே போல கிள்ளியூர் பண்டாரவிளையை சேர்ந்த பிறைஜா என்பவரிடம் ரூ.10 லட்சமும், முள்ளுவிளையை சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் ரூ.14 லட்சமும், ராஜ்குமார் என்பவரிடம் ரூ.12 லட்சமும் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்கள் வாங்கினர். அந்த வகையில் 4 பேரிடமும் மொத்தம் ரூ.56 லட்சம் வாங்கினார்கள். ஆனால் அவர்கள் கூறியது போல ரெயில்வேயில் வேலை வாங்கித் தரவில்லை. எனவே நாங்கள் பணத்தை திரும்பத் தரும்படி கேட்டோம். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை. வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்டனர். இந்த மோசடியில் தேனியை சேர்ந்த முரளி (24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் விசாரணை நடத்தி ஜோயல் தேவா, அவருடைய மனைவி அபிஷா, முரளி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தார். அப்போது சம்பந்தப்பட்ட 3 பேரும் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் தலைமையிலான போலீசார் பெங்களூர் சென்று ஜோயல் தேவா, அபிஷா மற்றும் முரளி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- மாமூடு தெருவில் ரூ.11.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட ராஜலெட்சுமி நகர், கவின் முகில் கார்டன் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் 7-வது வார்டுக்குட்பட்ட கிரவுண் தெரு, மாமூடு தெருவில் ரூ.11.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
அதேபோல் 22-வது வார்டுக்குட்பட்ட பரேரா காலனி பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மற்றும் 48-வது வார்டு வெள்ளாடிச்சவிளை பகுதியில் ரூ.3.20 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற உள்ளது. இந்த பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
அப்போது மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜசீலி, மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், மாமன்ற உறுப்பினர் பியஷா ஹாஜி பாபு, சுகாதார ஆய்வாளர்கள் சத்தியராஜ், பகவதி பெருமாள், மாநகர பகுதி செயலாளர்கள் சேக் மீரான், துரை, அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
- போராட்டத்திற்கு பாரதிய ஜனதா மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார்.
- மறியலில் ஈடுபட்ட 102 பெண்கள் உள்பட 378 பாரதிய ஜனதாவினரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் :
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு பாரதிய ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பாரதிய ஜனதா சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பாரதிய ஜனதா மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தும், அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினர். மாவட்ட பொருளாளர் முத்துராமன், கவுன்சிலர்கள் அய்யப்பன், வீரசூரப்பெருமாள், சதீஷ் மற்றும் நிர்வாகிகள் சிவக்குமார், சொக்கலிங்கம், ஜெகநாதன், சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 102 பெண்கள் உள்பட 378 பாரதிய ஜனதாவினரை போலீசார் கைது செய்தனர்.
- சுவர் ஏறி குதித்து மர்ம நபர் துணிகரம்
- பழைய குற்றவாளிகளின் படத்துடன் ஓப்பிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் முருகன்குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் தினமும் காலை நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்தக் கோவிலில் வெள்ளி மற்றும் முக்கிய தினங்களில் பக்தர்கள் அதிக அளவு வருவது உண்டு. அப்போது அன்னதானம் வழங்கப்படும். பக்தர்கள் பாதுகாப்புக்காக கோவிலில் கண்காணிப்பு காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
நேற்று மாலை பூசாரி, கோவிலில் பூஜைகள் முடிந்ததும் கதவை பூட்டிச் சென்றார். அதன்பிறகு இன்று காலை அவர் வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் வாசலில் கண்காணிப்பு காமிராக்கள் உடைந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கோவிலுக்குள் சென்றார்.
அங்கு அன்னதானத்திற்காக பக்தர்கள் காணிக்கை செலுத்த வைத்திருந்த உண்டியல் உடைந்து கிடந்தது. எனவே கோவிலுக்குள் யாரோ புகுந்து கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு அவர் தகவல் கொடுத்தார்.
அவர்கள் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர். கோவிலை சுற்றி வந்து பார்த்தபோது, அங்குள்ள புவனேசுவரி அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் எடை கொண்ட தங்கத் தாலியும் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. மேலும் கோவிலின் வேல் மண்டபத்தில் இருந்த வேல்களை திருட முயற்சி நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஓருவன், கோவிலுக்குள் நடமாடும் காட்சி பதிவாகி இருந்தது. அவன் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் அவன் கோவிலுக்குள் சுவர் ஏறி குதித்து வந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். காமிராவில் பதிவான உருவத்தை, பழைய குற்றவாளிகளின் படத்துடன் ஓப்பிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலுக்குள் மர்ம நபர் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வழிமறித்து ஆடையை இழுத்து தகராறு செய்தனர்
- கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் முகாமில் இளம்பெண் மனு
நாகர்கோவில் :
குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் வந்து மனு அளித்தனர்.
வள்ளவிளையை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் அளித்த மனுவில், நானும், என் தாயாரும் வள்ளவிளையில் வசித்து வருகிறோம். என் தந்தை இறந்துவிட்டார். நான் கடந்த 1-ந்தேதி மதியம் என் உறவினர் வீட்டுக்கு சென்றேன். அந்த பகுதியில் உள்ள பள்ளி பின்புறம் வழியாக சென்றபோது ஒரே பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென என்னிடம் தகராறு செய்தனர்.
மேலும் என் ஆடையை பிடித்து இழுத்து கீழே தள்ளினர். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் கூச்சலிட்டேன். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து என்னை காப்பாற்றினர். எனினும் சம்பந்தப்பட்ட 3 பேரும் எனக்கு மிரட்டல் விடுத்து விட்டு சென்றனர். பாலியல் பலாத்காரம் செய்துவிடுவதாகவும் மிரட்டினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று கூறப்பட்டுள்ளது.
- ரூ.14 லட்சமும், ராஜ்குமார் என்பவரிடம் ரூ.12 லட்சமும் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்கள் வாங்கினர்.
- சம்பந்தப்பட்ட 3 பேரும் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது.
நாகர்கோவில் :
புதுக்கடை ஐரேனியபுரம் கோணத்துவிளையை சேர்ந்தவர் பிரவிதா (வயது 29). இவர் நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எனக்கு ஐரேனியபுரத்தைச் சேர்ந்த அபிஷா (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், தற்போது பெங்களூரு கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஜோயல் தேவா (37) என்பவரை திருமணம் செய்து பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அபிஷாவும், அவருடைய கணவர் ஜோயல் தேவாவும்
தங்களுக்கு ரெயில்வே துறையில் முக்கிய அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக ரெயில்வேயில் வேலை வாங்கி தர முடியும் என்றும் என்னிடம் கூறினர். ஆனால் வேலை வாங்கித் தர வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறினார்கள். ரூ.56 லட்சம் மோசடி
இதனை நம்பி நான் ரூ.20 லட்சம் கொடுத்தேன். இதே போல கிள்ளியூர் பண்டாரவிளையை சேர்ந்த பிறைஜா என்பவரிடம் ரூ.10 லட்சமும், முள்ளுவிளையை சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் ரூ.14 லட்சமும், ராஜ்குமார் என்பவரிடம் ரூ.12 லட்சமும் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்கள் வாங்கினர். அந்த வகையில் 4 பேரிடமும் மொத்தம் ரூ.56 லட்சம் வாங்கினார்கள்.
ஆனால் அவர்கள் கூறியது போல ரெயில்வேயில் வேலை வாங்கித் தரவில்லை. எனவே நாங்கள் பணத்தை திரும்பத் தரும்படி கேட்டோம். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை. வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி மோசடி செய்து விட்டனர். இந்த மோசடியில் தேனியை சேர்ந்த முரளி (24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.3 பேர் கைது
இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் விசாரணை நடத்தி ஜோயல் தேவா, அவருடைய மனைவி அபிஷா, முரளி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தார். அப்போது சம்பந்தப்பட்ட 3 பேரும் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் தலைமையிலான போலீசார் பெங்களூர் சென்று ஜோயல் தேவா, அபிஷா மற்றும் முரளி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ஐ.எஸ்.ஆர்.ஓ. விஞ்ஞானி பங்கேற்பு
- பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் அவர் பரிசுகளை வழங்கினார்
நாகர்கோவில் :
நாகர்கோவில் கோட்டார் ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 39-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி துணை முதல்வர் அவ்வை சிதம்பரம் வரவேற்றார். பள்ளி தலைவரும், தாளாளருமான நாகராஜன் தலைமை தாங்கி பேசினார்.
தொடர்ந்து பள்ளி முதல்வர் அமுதா ெஜயந்த் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவிகள் கோபிகா, அனு பாலா ஆகியோர் பள்ளியை பற்றியும், மாண வன் முகம்மது ஷபான் வ.உ.சி.யை பற்றியும் பேசினர். விழாவுக்கு மகேந்திர கிரியில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ. உந்துவிசை வளா கத்தின் விஞ்ஞானி ஆசீர் பாக்கியராஜ் சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டார். அவரை பள்ளியின் ஆலோசகர் சுப்ரமணியம் அறிமுகப்படுத்தினார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும், அவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், ஆசிரியர்கள் மாணவர்களை எவ்வாறு கையாள வேண் டும் என்று அறிவுறுத்தி விஞ்ஞானி ஆசீர் பாக்கிய ராஜ் பேசினார்.
தொடர்ந்து 10, 11, 12-ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ -மாணவிகளுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் அவர் பரிசுகளை வழங்கினார். பின்னர் பள்ளி துணை தலைவர் கோபாலன் நினைவு பரிசை வழங்கினார்.
தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், யோகா, கராத்தே ஆகியவை நடை பெற்றன. முடிவில் ஆசிரியர் பினிஸ்குமார் நன்றி கூறினார்.
இந்த விழாவில் பள்ளி செயலாளர் சுப்ரமணியம், இணை செயலாளர் முத்து, பொருளாளர் நடேஷ், வக்கீல் சதீஸ்குமார், உறுப்பி னர்கள் சங்கர், மாரிதாஸ், ஆறுமுகம், ஆசிரிய, ஆசிரி யைகள், மாணவ-மாணவி கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- மூத்த விஞ்ஞானி வெங்கடேஷ்வ ன் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.
- கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்ட னர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் சுங்கான்கடை புனித சவேரி யார் கத்ேதாலிக்க பொறியி யல் கல்லூரியில் 26-வது ஆண்டு இளநிலை பட்டப்ப டிப்புகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. குழித்துறை மறை மாவட்ட தொடர்பா ளரும், கல்லூரி யின் ஆட்சிமன்றகுழு தலைவரு மான யேசுரெத்தி னம் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் மரிய வில்லியம் வரவேற்றார். கல்லூரி முதல்வர், கல்லூரியின் சிறப்பம்சங்களை பட்டியலிட்டார்.
இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை யின் விக்யான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி வெங்கடேஷ்வ ன் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.
கல்லூரியின் முன்னாள் மாணவரும் துபாய் நாட்டின் லக்ரேம் வர்த்தக நிறுவனங்களின் துணை தலைவரு மான டாக்டர் கெவின் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் கல்லூரியின் முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜட்சன், நிதிகாப்பா ளர் பிரான்சிஸ் சேவியர், துணை முதல்வர் பேராசிரி யர் கிறிஸ்டஸ் ஜெயசிங், புனித சவேரியார் தாதியர் கல்லூரி தாளாளர் ஜெயபி ரகாஸ், மாணிங்ஸ்டார் தொழில்நுட்ப கல்லூரி தாளாளர் பிரிமஸ்சிங், கல்லூரி முதல்வர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்ட னர்.
- அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பேட்டி
- 490 கோவில்களுக்கும் அவர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு சுசீந்திரம் திருக்கோயில்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கோவில்கள் என 490 கோவில்களுக்கும் அவர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
அங்கு செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், சென்னையில் அமைச்சர் சேகர் பாபுவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது குமரி மாவட்டத்தில் திருக்கோயிலுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து அவர் எடுத்துக் கூறினார். மேலும் ஆயுதபூஜையை யொட்டி பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்படும் உடைவாள் மாற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து அமைச்சர் சேகர் பாபு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவதாக உறுதி அளித்தார். தொடர்ந்து 490 கோவில்களில் ஆய்வு செய்த போட்டோக்களை பிரபா ராமகிருஷ்ணன், அமைச்சர் சேகர்பாபுவிடம் காண்பித்தார். அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள் 490 கோவில்களை ஆய்வு செய்த பிரபா ராமகிருஷ்ணனை அமைச்சர் சேகர் பாபு பாராட்டினார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, ஜோதிஷ்குமார், துளசிதரன் ஆகியோரும் உடன் இருந்தனர். தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரையும் அறங்காவல் குழு சந்தித்தது.
இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் திருக்கோவில்கள் கட்டுப்பாட்டில் உள்ள 490 கோவில்களையும் நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். கோவில்களில் பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவரும் ஒரு மாத காலத்திற்குள் அதற்கான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் சில கோவில்களை புரணமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்.அதற்கான நடவடிக்கை எடுக்கப்ப டுவதாக உறுதி அளித்தார். குமரி மாவட்டத்தில் அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொன்மனை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன
- பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவட்டார் :
பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட பொன்மனை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் பேரூராட்சி தலைவர் அகஸ்டினிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று விஜய்வசந்த் எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3.40 லட்சம் மதிப்பீட்டில் பொன்மனை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிந்து நேற்று பயணிகள் நிழற்குடையை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். நகர தலைவர் ஜான் போஸ்கே, வினுகுமார், மார்டின், அஜிகுமார், ஜெகன், ஜெயசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், மாவட்ட பொதுச்செயலாளர் ஜான் இக்னோசியஷ், முன்னாள் வட்டார தலைவர் காஸ்டன் கிளிட்டஸ், மாவட்ட செயலாளர் கோபகுமார், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






