search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாக மிரட்டிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாக மிரட்டிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • வழிமறித்து ஆடையை இழுத்து தகராறு செய்தனர்
    • கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் முகாமில் இளம்பெண் மனு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் வந்து மனு அளித்தனர்.

    வள்ளவிளையை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் அளித்த மனுவில், நானும், என் தாயாரும் வள்ளவிளையில் வசித்து வருகிறோம். என் தந்தை இறந்துவிட்டார். நான் கடந்த 1-ந்தேதி மதியம் என் உறவினர் வீட்டுக்கு சென்றேன். அந்த பகுதியில் உள்ள பள்ளி பின்புறம் வழியாக சென்றபோது ஒரே பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென என்னிடம் தகராறு செய்தனர்.

    மேலும் என் ஆடையை பிடித்து இழுத்து கீழே தள்ளினர். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் கூச்சலிட்டேன். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து என்னை காப்பாற்றினர். எனினும் சம்பந்தப்பட்ட 3 பேரும் எனக்கு மிரட்டல் விடுத்து விட்டு சென்றனர். பாலியல் பலாத்காரம் செய்துவிடுவதாகவும் மிரட்டினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    என்று கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×