search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் கோட்டார் ஸ்ரீநாராயணகுரு பள்ளி ஆண்டு விழா
    X

    நாகர்கோவில் கோட்டார் ஸ்ரீநாராயணகுரு பள்ளி ஆண்டு விழா

    • ஐ.எஸ்.ஆர்.ஓ. விஞ்ஞானி பங்கேற்பு
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் அவர் பரிசுகளை வழங்கினார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 39-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி துணை முதல்வர் அவ்வை சிதம்பரம் வரவேற்றார். பள்ளி தலைவரும், தாளாளருமான நாகராஜன் தலைமை தாங்கி பேசினார்.

    தொடர்ந்து பள்ளி முதல்வர் அமுதா ெஜயந்த் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவிகள் கோபிகா, அனு பாலா ஆகியோர் பள்ளியை பற்றியும், மாண வன் முகம்மது ஷபான் வ.உ.சி.யை பற்றியும் பேசினர். விழாவுக்கு மகேந்திர கிரியில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ. உந்துவிசை வளா கத்தின் விஞ்ஞானி ஆசீர் பாக்கியராஜ் சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டார். அவரை பள்ளியின் ஆலோசகர் சுப்ரமணியம் அறிமுகப்படுத்தினார்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும், அவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், ஆசிரியர்கள் மாணவர்களை எவ்வாறு கையாள வேண் டும் என்று அறிவுறுத்தி விஞ்ஞானி ஆசீர் பாக்கிய ராஜ் பேசினார்.

    தொடர்ந்து 10, 11, 12-ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ -மாணவிகளுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் அவர் பரிசுகளை வழங்கினார். பின்னர் பள்ளி துணை தலைவர் கோபாலன் நினைவு பரிசை வழங்கினார்.

    தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், யோகா, கராத்தே ஆகியவை நடை பெற்றன. முடிவில் ஆசிரியர் பினிஸ்குமார் நன்றி கூறினார்.

    இந்த விழாவில் பள்ளி செயலாளர் சுப்ரமணியம், இணை செயலாளர் முத்து, பொருளாளர் நடேஷ், வக்கீல் சதீஸ்குமார், உறுப்பி னர்கள் சங்கர், மாரிதாஸ், ஆறுமுகம், ஆசிரிய, ஆசிரி யைகள், மாணவ-மாணவி கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×