என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • குமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது
    • 10 டயர் மேல் உள்ள டிப்பர் லாரிகள் இயக்கக்கூடாது

    நாகர்கோவில் : குமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. 10 டயர் மேல் உள்ள டிப்பர் லாரிகள் இயக்கக்கூடாது என்று கலெக்டர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். மேலும் கனிமவளங்களை கொண்டு செல்வதற்கும் இரண்டு வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து குமரி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து 8 வார காலம் 10 டயருக்கு மேற்பட்ட டிப்பர் லாரி களை இயக்கலாம் என அவகாசம் வழங்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கொண்டு வந்தனர்.

    ஒழுகினசேரி பகுதி யில் போலீசார் 10 சக்கரத்திற்கு மேல் உள்ள டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தினார்கள். அந்த லாரிகளை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் டேவிட் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    கோர்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில் லாரிகளை திருப்பி அனுப்பு வது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் சங்கத்தின் தலைவர் டேவிட் ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

    அந்த மனுவின் மதுரை கோர்ட்டின் 8 வார காலம் அவகாசம் ஆகியவற்றிற்கான தீர்ப்பின் நகலையும் வழங்கி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • மருத்துவமனையில் மாரடைப்பை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
    • இதய மருத்துவர் டாக்டர் டேனி கோல்ட் சிறப்புரையாற்றினார்.

    நாகர்கோவில்:

    உலக இதய தினத்தை முன்னிட்டு பெதஸ்தா மருத்துவமனையில் மாரடைப்பை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதய மருத்துவர் டாக்டர் டேனி கோல்ட் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெத ஸ்தா மருத்துவமனையின் நிறுவனர்களான டாக்டர் ஜெயராஜ், டாக்டர் ஸ்டார் லெட் ஜெயராஜ் மற்றும் டாக்டர் ஷீபா டேனி, மரு த்துவ ஊழியர்கள், இதய நோயாளிகள் பங்கேற்றனர். இதில் பெதஸ்தா மருத்து வமனை சார்பில் நட த்திய உலக இதய தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உலக இதய தினத்தையொட்டி மிகவும் கடினமான ஆஞ்சி யோபிளாஸ்ட்டி உடன் ஓ.சி.டி. என்ற புதிய சிகிச்சை ஒரு நோயாளிக்கு செய்யப்பட்டது.

    • பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
    • மேலாண்மை இயக்குநர் டி.சிங் தலைமை தாங்கினார்.

    மணவாளக்குறிச்சி:

    தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐ.ஆர்.இ.எல். நிறுவனமும் இணைந்து நெல்லை மண்டலம் மற்றும் தமிழ்நாடு மாநில அளவிலான 63-வது சுரங்க பாதுகாப்பு வார நிறைவு விழா நாகர்கோவிலில் நடத்தியது. ஐ.ஆர்.இ.எல். நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.சிங் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக சுரங்க பாதுகாப்பு பொது இயக்குநர் பிரபாத் குமார், கவுரவ விருந்தினராக தென்மண்டல சுரங்க பாதுகாப்பு துணை பொது இயக்குநர் தேவ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல். நிறுவன ஆலை தலைவர் செல்வராஜன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்க செயலாளர் மற்றும் தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்டின் முதுநிலை பொது மேலாளர் (சுரங்கம்) ஜி.ஆர். மகேஷ் தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்க அறிக்கையை வாசித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்க தலைவர் மற்றும் தி ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவன முதுநிலை துணைத்தலைவர் (ஒர்க்ஸ்) மதுசூதன் குல்கரணி, சென்னை மண்டல சுரங்க பாதுகாப்பு இயக்குநர் டி.ஆர்.கண்ணன், தென்மண்டல சுரங்க பாதுகாப்பு துணை பொது இயக்குநர் தேவ்குமார் ஆகியோர் பேசினர்.

    ஐ.ஆர்.இ.எல். துணை பொதுமேலாளர் (சுரங்கம்) ஜெயசந்த் நன்றி கூறினார். டிரேட் டெஸ்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு சுரங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், ஐ.ஆர்.இ.எல். பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • திரளான பெண் பக்தர்கள் தரிசனம்
    • காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும், நிவேத்திய பூஜையும் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டா டப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும், நிவேத்திய பூஜையும் நடந்தது.

    அதன்பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் காணிக்கையாக வழங்கிய தங்கக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, மல்லிகை, துளசி, தெத்தி, தாமரை, உள்பட பல வகையான மலர்களால் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மா சனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ் வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

    இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜா மணி அய்யர் நடத்தினார். பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெருமா னுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பேரவையினர் செய்திருந்தனர். இதேபோல கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்ற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ்மலை ஜோதி லிங்கசாமிகோவில், பரமார்த்தலிங்கசுவாமி கோவில், சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷபூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து சேவை 1 மணி நேரம் தாமதம்
    • காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.

    கன்னியாகுமரி:

    பவுர்ணமியையொட்டி இன்று காலையில் கன்னியா குமரியில் "திடீர்" என்று கடல் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. அதேபோல இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பா கவும் காணப்படுகிறது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளு வர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப்படவில்லை.

    இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகுத்துறை நுழைவுவாயிலில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் காத்து இருந்தனர். இதற்கிடையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொ டர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்ட பத்துக்கு படகு போக்கு வரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கும், விவேகா னந்தர் மண்டபத்துக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்கு வரத்து நடைபெறவில்லை. மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • கல்லூரி தாளாளர் தோமஸ் ராஜ் மற்றும் கல்லூரி முதல்வர் கலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • கல்லூரி மூத்த பேராசிரியர் செல்வின் இன்பராஜ் வரவேற்று பேசினார்.

    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டம் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஞான தீபம் கல்லூரியில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஞான தீபம் கல்லூரி தாளாளர் தோமஸ் ராஜ் மற்றும் கல்லூரி முதல்வர் கலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மூத்த பேராசிரியர் செல்வின் இன்பராஜ் வரவேற்று பேசினார்.

    முகாமில் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் பிரிட்டோ கலந்துகொண்டு காசநோய் விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். அதில் காசநோய் எவ்வாறு வருகிறது, அதன் அறிகுறிகள், எவ்வாறு காசநோய் வராமல் தடுக்கலாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் காசநோய்க்கு என்னென்ன மருந்துகள் உட்கொள்ளலாம் போன்றவற்றினை குறித்து மாணவர்களிடையே பேசினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். மேலும் வெட்டுமணி அரசு மருத்துவமனை சுகாதார பார்வையாளர்கள் சாந்தி மற்றும் அகிலா ஆகியோர் இந்த முகாமில் கலந்துகொண்டனர். விழா முடிவில் ஆசிரியை சிஞ்சு நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஞானதீபம் கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • வருகிற 3-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
    • இதில் பங்குபெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் ஆதார் அட்டையுடன் கலந்துகொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 வயதுக்குட்பட்ட இளையோர் கால்பந்து அணிக்கான விளையாட்டு வீரர்கள் தேர்வு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து வருகிற 3-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    இதில் பங்குபெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் ஆதார் அட்டையுடன் கலந்துகொள்ள வேண்டும். அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி முதல் 15ந் தேதி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கால்பந்து கழகம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்ட குமரி மாவட்ட கால்பந்து விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கு பெறுவார்கள். விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு குமரி மாவட்ட கால்பந்து கழக பொருளாளர் ஆனந்த் ஏ.வில்சன் தலைமையில் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
    • ரவுடிகள் பட்டி யலிலும் வெள்ளை செந்தில் பெயர் இடம்பெற்றுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பள்ளி விளை பகுதியை சேர்ந்தவர் வெள்ளை செந்தில். இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டி யலிலும் வெள்ளை செந்தில் பெயர் இடம்பெற்றுள்ளது. நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்றில் வெள்ளை செந்தில் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்திருந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வெள்ளை செந்தில் சென்னையில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் சென்னை விரைந்து சென்றனர். அங்கு வெள்ளை செந்திலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெள்ளை செந்திலை நேற்று இரவு நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் வெள்ளை செந்திலை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

    • 2-ந் தேதி நடக்கிறது.
    • அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் பங்கேற்று வள்ளலார் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வள்ளலார் பேரவையில் திருஅருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற திருநாளின் 201-வது அவதார தினவிழா வருகிற 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் மகேஷ் வரவேற்று பேசுகிறார். கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் பங்கேற்று வள்ளலார் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். அருட்ஜோதியை, மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் ஆகியோர் ஏற்றி வைக்கின்றனர்.

    போலீஸ் துணை சூப்பிரண்டுகள் நவீன்குமார், சந்திர சேகரன், பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ராஜன், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற குமரி மாவட்ட தலைவர் பாரத்சிங் உள்பட பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

    • கன்னியாகுமரி அருகே உள்ள மருந்துவாழ்மலையில் நடந்தது.
    • கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்துள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வத வர்த்தினி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷம் நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும், மூலவரான ஜோதிலிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாப்பொடி, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டுசர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான வாசனைத்திர வியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி சிவனடியார்கள் மற்றும் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் உள்ளிட்ட 7 வகையான அருட்பிர சாதங்கள் வழங்கப்பட்டன.

    • நாளை (30-ந் தேதி) முதல் சுமார் 40 நாட்களுக்கு போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
    • இறுதி கட்ட பணியாக பக்கவாட்டு சுவர் எழுப்பும் வேலை நடைபெறுகிறது.

    இரணியல்:

    திங்கள்நகர்-நெய்யூர்-அழகிய மண்டபம் செல்லும் சாலையில் இரட்டை ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் இறுதி கட்ட பணியாக பக்கவாட்டு சுவர் எழுப்பும் வேலை நடைபெறுவதால் இரட்டை ரெயில்வே மேம்பால பணிகள் நடை பெறும் இடத்தை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் கடந்த 26-ந்தேதி பார்வை யிட்டு வாகனங்கள் மாற்று பாதையில் செல்லவும் பணிகளை சுமார் 40 நாட்களில் விரைந்து முடிக்கவும் ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், ரெயில்வே துணை முதன்மை பொறியாளர் பமிலா, குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    இந்நிலையில் நாளை (30-ந் தேதி) முதல் சுமார் 40 நாட்களுக்கு போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதாவது, திங்கள் நகரில் இருந்து திருவிதாங்கோடு, அழகிய மண்டபம் செல்லும் வாகனங்கள் திங்கள்நகர் ரவுண்டானா, இரணியல் சந்திப்பு, ஆழ்வார்கோவில், தக்கலை வழியாகவும், அழகிய மண்டபம், திரு விதாங்கோட்டில் இருந்து திங்கள்நகர் செல்லும் வாகனங்கள் திரு விதாங்கோடு, வட்டம், ஆழ்வார் கோவில், இரணி யல் சந்திப்பு திங்கள் நகர் வழியாகவும் செல்லும்படி ஒருவழி போக்குவரத்தாக மாற்றம் செய்யப்பட்டு நாளை முதல் போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்ப டுகிறது. ஆகவே பொது மக்கள் போக்குவரத்து காவல்துறைக்கும், ரெயில்வே நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு தந்து மாற்று பாதையில் செல்லும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×