என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோதிலிங்கேஸ்வரருக்கு16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
    X

    ஜோதிலிங்கேஸ்வரருக்கு16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்

    • கன்னியாகுமரி அருகே உள்ள மருந்துவாழ்மலையில் நடந்தது.
    • கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்துள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வத வர்த்தினி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷம் நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும், மூலவரான ஜோதிலிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாப்பொடி, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டுசர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான வாசனைத்திர வியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி சிவனடியார்கள் மற்றும் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் உள்ளிட்ட 7 வகையான அருட்பிர சாதங்கள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×