என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • மார்த்தாண்டத்தை அடுத்த நட்டாலத்தில் நடந்த உறவினர் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்
    • பணங்காலை பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஓர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

    குழித்துறை :

    கருங்கலை அடுத்த பாலப்பள்ளம், படூர்காட்டு விளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 61), தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மார்த்தாண்டத்தை அடுத்த நட்டாலத்தில் நடந்த உறவினர் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் கிறிஸ்டோபர் மண்டபத்தின் வெளியில் நின்று கொண்டி ருந்தார்.

    அப்போது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டெம்போவை, மத்திகோடு தட்டான் பரம்புவிளை பகுதியை சேர்ந்த அஜித்குமார் (26), என்பவர் இயக்கி உள்ளார். ஆனால் எதிர்பாராதவித மாக அவரது கட்டுப்பாட்டை இழந்த டெம்போ தாறு மாறாக ஓடியது.அதே வேகத்தில் அங்கு நின்ற கிறிஸ்டோபர் மீது டெம்போ மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந் தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கிறிஸ்டோபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு விபத்து

    அருமனையை அடுத்த மாங்காலை அம்பலகாலை கோடிக்காமூலை பகுதியை சேர்ந்தவர் தனிஷ் (வயது 28), ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளி. கல்லு விளை பகுதியைச் சேர்ந்தவர் பிரபின் (26), இவர் பணங்காலை பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஓர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று பிரபின் மற்றம் தனிஷ் காரில் சென்றுள்ளனர். காரை பிரபின் ஓட்டினார். பனங்காலை- மருதன்கோடு சாலையில் கார் சென்ற போது, எதிர்பாராதவிதமாக தங்கசாமி என்பவரின் வீட்டு காம்பவுண்ட்டு சுவரில் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பின் இருக்கையில் இருந்த தனிஷ் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தனீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரபினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பிரபின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்தது
    • இறந்த யானையை உடல் கூறு ஆய்வுக்கு பின் புதைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    பூதப்பாண்டி அருகே வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. விளைநிலங்க ளுக்குள் புகுந்து யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அட்டகாசம் செய்தது.

    இந்த நிலையில் அழகிய பாண்டியபுரம் வன சரகம் அசம்புபீட் தூவச்சிசராகம் இஞ்சிக்கடவு பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்த மான தோட்டத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதைப்பார்த்த தொழிலாளர்கள் வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்த யானை 40 வயது உடைய பெண் யானை என்பது தெரியவந்தது.

    இறந்த யானை சுமார் 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இறந்திருப்பது தெரியவந்துள்ளது. கீழே உள்ள பள்ளத்தில் தண்ணீர் குடிக்க இறங்கியபோது தவறி விழுந்ததா? மழை பெய்து வந்த நிலையில் யானை வழுக்கி விழுந்து இறந்ததா? என்பது தெரியவில்லை.

    இறந்த யானையை உடல் கூறு ஆய்வுக்கு பின் புதைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    கால்நடை மருத்துவர்கள் வன பணியாளர்கள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு யானை அந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் புதைக்கப்பட்டது.

    • பேச்சிப்பாறை 25 அடியை எட்டியது
    • நேற்று இரவு அணை பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் வடகிழக்கு, தென்கிழக்கு என இரு பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட 69 சதவீதம் குறை வாகவே பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் நீர்மட்டம் சரிந்து காணப் பட்டது. பாசன குளங்களி லும் தண்ணீர் குறைவாகவே இருந்தது. அணைகளிலும், பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் கடைமடை பகுதிகளில் கன்னி பூ சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.

    இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை நீடித்து வருவதைய டுத்து பாசன குளங்களும், அணைகளும் நிரம்பி வருகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று இரவு அணை பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்தது. இதைய டுத்து அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத்தொடங்கியது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2½ அடியும் பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 5 அடியும் உயர்ந்துள்ளது.

    ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாசன குளங்களும் நிரம்பி வருகின்றன. 600-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 25 அடியை எட்டியது. அணைக்கு 2409 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 330 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.40 அடியாக இருந்தது. அணைக்கு 1820 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12.36 அடியாக உள்ளது. அணைக்கு 284 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. சிற்றார்-2 அணை நீர்மட்டம் 12.46 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும், மாம் பழத்துறையாறு அணை நீர்மட்டம் 4.92 அடியாகவும் முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 19.50 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 67.2, பெருஞ்சாணி 50.8, சிற்றார் 1-40.4, சிற்றார் 2-26.8, பூதப்பாண்டி 32.6, களியல் 40.4, கன்னிமார் 42.2, கொட்டாரம் 28.4, குழித்துறை 44.8, மயிலாடி 36.2, நாகர்கோவில் 24.2, புத்தன் அணை 48.6, சுருளோடு 48.2, தக்கலை 37.2, குளச்சல் 34.6, இரணியல் 33, பாலமோர் 68.4, மாம்பழத்துறையாறு 35, திற்பரப்பு 47.6, ஆரல்வாய்மொழி 24.2, கோழிபோர்விளை 52.2, அடையாமடை 61.3, குருந்தன்கோடு 14.6, முள்ளங்கினாவிளை 41.6, ஆணைக்கிடங்கு 32.4, முக்கடல் 39.2.

    • கண்டக்டரை சரமாரியாக தாக்கினார்
    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    திருச்செந்தூரில் இருந்து திங்கள்நகருக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. நள்ளிரவு 11.30 மணிக்கு பஸ் வடசேரி பஸ் நிலையத்தை வந்த டைந்தது.

    இதையடுத்து பஸ் நிலை யத்தில் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். அப்போது கண்டக்டர் அவரிடம் டிக்கெட் கேட்ட போது வெட்டூர்ணிமடம் செல்லவேண்டும் என்று டிக்கெட் எடுத்துள்ளார். பஸ் நிலையத்திலிருந்து பஸ் புறப்பட்டு சென்றது. வெட்டூர்ணிமடம் பஸ் நிறுத்தத்தை விட்டு சிறிதுதூரம் தாண்டி பஸ் நிறுத்தப்பட்டதாக தெரி கிறது. இதனால் பஸ்சில் இருந்த வாலிபருக்கும், கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    வாலிபர் போதையில் இருந்ததால் கண்டக்டரை திடீரென சரமாரியாக தாக்கினார். இதனால் கண்டக்டர் நிலை குலைந் தார். இதையடுத்து போதை வாலிபர் பஸ்சை விட்டு கீழே இறங்கினார். ரோட்டோரத்தில் கிடந்த கல்லை எடுத்து பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கண்டக்டர் தாக்கப்பட்டது குறித்து வடசேரி போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த இடம் தனது எல்லைக்குட்பட்ட பகுதி வராது என்றும், நேச மணி நகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி என்று கூறினார்கள். உடனே நேசமணி நகர் போலீசார் அங்கு வந்தனர். அவர்களும் தங்களுக்கும் எல்லைபகுதி கிடையாது வடசேரி போலீஸ் நிலை யத்துக்குட்பட்ட பகுதி என்று கூறினார்கள்.

    வடசேரி, நேசமணிநகர் போலீசார் என எல்லை பிரச்சினை ஏற்பட்டது. ஒரு வழியாக இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததையடுத்து நேசமணி நகர் போலீசார் உடைக்கப்பட்ட பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். போதை வாலிபர் தாக்குதலில் படுகாயம் அடைந்த கண்டக்டரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பஸ் கண்டக்டரை தாக்கி விட்டு தப்பி ஓடிய வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா மற்றும் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஓடும் பஸ்சில் கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கலெக்டர் அலுவலகத்தில் வந்து இப்படி தர்ணா போராட்டத்தில் ஈடுபடக்கூடாது
    • கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வாலிபர் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்த வாலிபர் ஒருவர் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பெய்த மழையையும் பொருட் படுத்தாமல் தரையில் அமர்ந்து கோஷமிட்டார். உடனே கலெக்டர் அலுவ லகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட அவரை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீ சாரிடம் அந்த வாலிபர் கூறியதாவது:-

    எனது பெயர் ரமேஷ் (வயது 31). எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. எனக்கு சகோதரர்கள் உண்டு. நான் பிறந்ததில் இருந்து எங்களது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறேன்.

    இந்த நிலையில் எனது உறவினர்கள் சிலர் என்னை வீட்டை விட்டு துரத்தி வெளியேற்றினர். இதனால் கடந்த 2 நாட்களாக வீடு இன்றி பொது இடங்களில் ஓய்வெடுத்து வருகிறேன். மேலும் எனது வீட்டை முழுமையாக அபகரிக்க முயல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் ரமேசிடம், "கலெக்டர் அலுவலகத்தில் வந்து இப்படி தர்ணா போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. தங்களது புகாரை மனுவாக கலெக்டர் அலுவல கத்தில் அளிக்க வேண்டும்" என்றனர். இதையடுத்து ரமேஷ் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு வீடு திரும்பினார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வாலிபர் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சமூக வலைதளம் மூலம் பழக்கம்
    • திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினார்

    நாகர்கோவில் :

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கணவனை இழந்து வசித்து வருகிறார். இதையடுத்து அவர் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அப்போது சமூக வலைதளம் ஒன்றில் மறுமணம் செய்ய விருப்பம் தெரிவித்து வாலிபர் ஒருவர் பதிவு செய்திருந்தார். உடனே அந்த பெண் அந்த வாலிபரை தொடர்பு கொண்டார். இருவரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் நேரில் சந்திக்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த வாலிபர் பெண்ணை நெல்லை பகுதியில் உள்ள கோவிலுக்கு வருமாறு அழைத்தார். அந்த வாலிபரும் அங்கு வந்தார். அப்போது அந்த பெண்ணும் அங்கு சென்றுள்ளார். இருவரும் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கன்னியாகுமரிக்கு வந்தனர். கன்னியாகுமரிக்கு வந்த இருவரும் கோவிலுக்கு சென்றனர். அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் தன்னை மறுமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் சில தோஷங்கள் இருப்பதால் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். அப்போது அவர் அணிந்திருந்த நகையை கழட்டிக் கொடுக்குமாறு கூறினார். வாலிபரை நம்பி அந்த பெண் அணிந்திருந்த 5 பவுன் நகையை கழட்டி கொடுத்தார். உடனே அந்த வாலிபர் தங்க நகை வைத்துவிட்டு அவர் கையில் இருந்த கவரிங் நகையை பூஜைக்கு வைத்தார். பூஜை முடிந்த சிறிய நேரத்தில் அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் கடலில் பூஜை செய்த பொரு ட்களை போட்டுவிட்டு வருவ தாக கூறிவிட்டு 5 பவுன் நகையுடன் மாயமானார். நீண்ட நேரமாக அந்த பெண் வாலிபருக்காக காத்திருந்தார். ஆனால் அவர் வரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகு தான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். உடனே இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண்ணை ஏமாற்றியது கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த யுவராஜ் (வயது 49) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவை சென்று யுவராஜை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யுவராஜை கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். கன்னியாகுமரியில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் இவரும், அவரது மனைவியும் விவகாரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் அவர் மறுமணம் செய்ய சமூக வலைதளங்கள் மூலமாக பெண் தேடியுள்ளார். பல பெண்களிடம் நெருங்கி பழகி வந்த யுவராஜ் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு நகையை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. வேறு பெண்களை ஏமாற்றி உள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சந்தைகள் மற்றும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறி வுறுத்தப்பட்டது.

    நாகர்கோவில் :

    சென்னை முதன்ைம செயலாளர், தொழிலாளர் ஆணையரால் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறி வுறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்டபிரபு தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் நெல், தேயிலை கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள், நடைபாதைகள் தள்ளுவண்டிகள், காய்கறிகள், மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் சந்தைகள் மற்றும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்டபிரபு கூறும்போது, முத்திரை இடப்படாத தரப்படுத்தப்படாத எடை யளவுகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், உரிய அறிவிப்புகள் இல்லாமல் இருப்பது மற்றும் பொட்டல மிடுபவர், இறக்குகுமதியாளர் பதிவுச்சான்று பெறாதது ஆகிய குற்றங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    • கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் மணி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
    • முடிவில் ஐந்தமிழ் ஆய்வுமன்ற செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    என்.ஜி.ஓ.காலனி :

    அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் ஐந்தமிழ் ஆய்வு மன்றத்தின் 19-வது தேசிய கருத்தரங்கம் தமிழ்த்துறை சார்பில் கல்லூரி பொறுப்பு முதல்வர் டி.எஸ். ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்த்துறை தலைவர் இளங்குமார் வரவேற்றார். கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் மணி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஐந்தமிழ் ஆய்வு மன்றத்தின் தலைவர் கருணாகரன் தலைமையுரையாற்றினார். கல்லூரி செயலாளர் ராஜன் ஆய்வு சிந்தனைகள் என்னும் ஆய்விதழை வெளியிட பொருளாளர் சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.

    வழக்கறிஞர் ஞானசேகரன் மற்றும் கல்லூரி ஆட்சி மன்ற துணை தலைவர் சந்திரமோகன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ஆனந்த், ஆதிமகாலிங்கம் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் ஐந்தமிழ் ஆய்வுமன்ற செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து வரும் அரசு மதுபானக்கடை

    பூதப்பாண்டி :

    பூதப்பாண்டி பேரூராட்சியின் கூட்டம் தலைவர் ஆலிவர்தாஸ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் அனில்குமார் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் மரியா அற்புதம், ஈஸ்வரி, கலா, அசாருதீன், நபீலா அன்சார், யூனிஷ்பாபு, டதி செல்வபாய், முருகன் பிள்ளை, ஜெசி தம்பி, முத்துலெட்சுமி, மெர்சி பாய் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பூதப்பாண்டியை அடுத்துள்ள 12-வது வார்டு துவரங்காடு பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து வரும் அரசு மதுபானக்கடையை (டாஸ்மாக்) மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மையே சேவை தொடர்பாக பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பையை பேரூராட்சி தலைவர் ஆலிவர்தாஸ் வழங்கினார்.

    • கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் முன்பு இன்று காலை திரண்டனர்.
    • மாலை அணிவிக்க அனுமதிக்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்

    கன்னியாகுமரி :

    விசுவ இந்து பரிசத்தின் 60-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் முன்பு பாரத மாதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை இன்று நடத்தப்போவதாக விசுவ இந்து பரிசத் அமைப்பினர் அறிவித்து இருந்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து தடையை மீறி பாரத மாதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் பீமாராவ் தலைமையில் மாநில விசுவ இந்து பரிசத் அமைப்பாளர் சேதுராமன், குமரி மாவட்ட தலைவர் குமரேசதாஸ், மாநில பொருளாளர் பாலு, மாநில இணை செயலாளர் காளியப்பன், மாவட்ட சேவா பிரம்முக் செந்தில், நாகர்கோவில் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா, செயலாளர் மகேந்திரன், மாவட்ட இணை செயலாளர் ஜெகன் உள்பட ஏராளமான விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் முன்பு இன்று காலை திரண்டனர்.

    இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக அவர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து வெளியே வந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கலையரங்கம் முன்பு மாலை அணிவித்து அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பாரத மாதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்தனர். அவர்களை போலீசார் இதற்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், விசுவ இந்து பரிசத் அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஒரு வேனில் ஏற்றி மாதவபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு தங்கி இருந்த விசுவ இந்து பரிசத் அமைப்பை சேர்ந்தவர்கள் பாரத மாதா உருவப்படத்துக்கு மாலை அணிவிக்க அனுமதிக்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு மேலும் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.

    • அமைச்சர்கள் செஞ்சிமஸ்தான், மனோ தங்கராஜ் வழங்கினர்
    • விழாவில் 7,36,353 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    முன்னாள் முதல்-அமைச் சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திற னாளி களுக்கான மருத்துவ முகாம் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் இன்று நடந்தது.

    விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சிவசங்கரன் வரவேற்று பேசினார். மருத்துவ முகாமினை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். 11 பயனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்களும், 47 பயனாளிகளுக்கு திறன் பேசியும், 5 பேருக்கு பாதுகாவலர் நியமன சான்றும் வழங்கப்பட்டது. விழாவில் 7,36,353 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய் உள்ளத்தோடு மக்களை பார்த்து வருகிறார். இந்த அரசு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 6.8 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

    உலக நாடுகளில் இதை ஒப்பிடும்போது ஒரு சில நாடுகளில் உள்ள மக்கள் தொகையை விட அதிகமாக மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.1443 கோடி செலவில் மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொழில் தொடங்கவும் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்திய துணை கண்டத்திலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாற்றுத்திறனாளி களுக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்கியது தி.மு.க. அரசு தான். மாற்றுத்திறனாளிகள் எப்பொழுது வேண்டுமானா லும் தங்களது பிரச்சினைகளை எங்களிடம் நேரில் தெரிவிக்க லாம். மாற்றுதிறனாளிகள் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. இந்த அரசு உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-

    மாற்றுத்திறனாளி களுக்கு என்று தனி அந்தஸ்தை ஏற்படுத்திக்கொடுத்தவர் மறைந்த முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி. கல்வி வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்கி உள்ளார்.

    ஆரம்ப பள்ளி படிக்கும் மாணவர்கள் கல்வி அறிவு தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

    பெண் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. பசிப்பிணியை போக்குவதுடன் அறிவு பிணியை போக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உதவி தொகை கிடைக்க இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் அனைவரும் கல்வி கற்கும் நிலையை உருவாக்கவும் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் நலம் சார் அரசாக இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, ஒன்றிய செயலாளர் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன், மாநகர செயலாளர் ஆனந்த், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியை ஜேமினா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சியாளர் பிரியாதிரேஸ் நன்றி கூறினார்.

    • 14-ந்தேதி லேல் அடிமை போட்டில் சிலருடன் சேர்ந்து மீன்பிடிப்பதற்காக சென்றுவிட்டார்
    • ஆன்சி மற்றும் நான்சி ஆகியோர் வீட்டில் இல்லை

    ராஜாக்கமங்கலம் :

    வெள்ளிச்சந்தை அருகே முட்டத்தை சேர்ந்தவர் லேல் அடிமை. கடல் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆன்சி (வயது 29). இவர்களுக்கு 9 வயதில் நான்சி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி லேல் அடிமை போட்டில் சிலருடன் சேர்ந்து மீன்பிடிப்பதற்காக சென்றுவிட்டார். நேற்று காலை அவர் திரும்பி வந்தபோது வீடு பூட்டி இருந்தது. அவரது மனைவி ஆன்சி மற்றும் நான்சி ஆகியோர் வீட்டில் இல்லை. இதையடுத்து அவர்களை லேல் அடிமை பல்வேறு இடங்களில் தேடினார். எனினும் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து லேல் அடிமை வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகிறார்

    ×