என் மலர்
கன்னியாகுமரி
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- 37-வது வார்டு வீரசிவாஜி தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
நாகர்கோவில், அக்.30-
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 37-வது வார்டு வீரசிவாஜி தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் 49-வது வார்டு காந்திபுரம் மெயின்ரோடு, பெட்ரோல் பல்க் அருகில் உள்ள தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
இதில் மாநகர செயலாளர் ஆனந்த், ஜீவா, அணி நிர்வாகிகள் அகஸ்தீசன், ராஜன், சரவணன், வட்ட செயலாளர்கள் ரவி, விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- வியாபாரி மீது வழக்கு
- போலீசார் விசாரணை நடத்தி பாலகிருஷ்ணன் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்
குளச்சல், அக்.30-
நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதி யை சேர்ந்தவர் பாலகிரு ஷ்ணன் (வயது 42). இவரது தனது தாய் நடத்தி வந்த பெட்டிக்கடையில் இருந்து வியாபாரத்தை கவனித்து ள்ளார். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வந்து ள்ளார். அவருக்கு மிட்டாய் கொடுத்த பாலகி ருஷ்ணன் பாலியல் தொல்லை கொடு த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி பயத்தில் கூச்சலிட்டார். அதனைக் கேட்டு அக்கம்ப க்கத்தினர் திரண்டதால் பாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இது குறித்து சிறுமியின் தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாலகிருஷ்ணன் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகிவி ட்ட அவரை தேடி வருகின்றனர்.
- மண்டபத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- அருகில் சென்று பார்த்த போது காணிக்கை பணம் சிதறி கிடந்துள்ளது. மேலும் வேல் ஓன்றும் கீழே கிடந்தது.
ராஜாக்கமங்கலம் :
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள சூரப்பள்ளம் ஊர் பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது.மண்ட பத்துடன் கூடிய இந்தக் கோவிலில் பூசாரியாக முத்துச் செல்வன் பணி யாற்றி வருகிறார்.
இவர் தினமும் மாைல யில் கோவிலில் வழிபாடு நடத்துவது வழக்கம். ேநற்று மாலையும் முத்துச் செல்வன் பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டிச் சென்றார்.
இன்று காைல அவர் ேகாவில் வழியாகச் ெசன்ற ேபாது அங்குள்ள மண்டபத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று பார்த்த போது காணிக்கை பணம் சிதறி கிடந்துள்ளது. மேலும் வேல் ஓன்றும் கீழே கிடந்தது.
எனவே யாரோ மர்ம நபர்கள் உண்டியலை, வேல் மூலம் நெம்பி உடைத்தி ருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்த தகவல் கிடைத்த தும் ேகாவில் தலைவர் தர்மலிங்கம், ெசயலாளர் கண்ணன் ஆகிேயார் ராஜாக்கமங்கலம் ேபாலீசில் புகார் ெகாடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- வடகிழக்கு பருவக்காற்று முடியும் வரை 3 மாதகாலம் சாதகமான சூழ்நிலை உருவாகும் என அதிகாரிகள் தகவல்ண
- பவுர்ணமி, அமாவாசை நாட்களில் நிகழும் இயற்கை சீற்றங்களில் “திடீர்” மாற்றம் எதிரொலி
கன்னியாகுமரி, அக்.30-
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, சீற்றம், கொந்த ளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லா மல் கடல்அமை தியாக குளம்போல் காட்சி அளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நாட்களில் கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்கக்கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்படும். அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படும். பவுர்ணமி மற்றும் அமாவாசை போன்ற காலங்களில் சில நாட்களுக்கு முன்பும் சில நாட்களுக்கு பின்பும் கடல் நீர்மட்டம் உயர்வதும் தாழ்வதுமான சூழ்நிலை நீடித்து வருகிறது.
இதனால் இந்த பவுர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் கன்னியாகுமரி கடலில் நிகழும் இயற்கை மாற்றங்களின் காரணமாக கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து அடிக்கடி தடைபட்டு வருகிறது. ஆனால் இந்த முறை பவுர்ணமி முடிந்து 2 நாட்கள் ஆன பிறகும் கன்னியாகுமரி கடலில் எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை.
இதுபற்றி தமிழ்நாடு கடல் சார் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாத காலமும் வடகிழக்கு பருவக்காற்று காலம் ஆகும். இந்த வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் கன்னியாகுமரி கடலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற நாட்களில் எந்தவித இயற்கை மாற்றங்களும் நிகழ வாய்ப்பு இல்லை. ஏதாவது புயல், மழை காலங்களில் மட்டும் இயற்கை மாற்றங்கள் நிகழலாம். தற்போது வடகிழக்கு பருவக்காற்று சீசன் தொடங்கி உள்ளதால் கன்னியாகுமரி கடலில் சாதகமான சூழ்நிலை நிலவிவருகிறது. இதனால் கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பவுர்ணமி காலமான தற்போது எந்தவித தடங்கலும் இன்றி படகு போக்குவரத்து தொடர்ச்சியாக நடை பெற்று வருகிறது. இந்த சாதகமான சூழல் வருகிற ஜனவரி மாதம் வரை 3 மாதகாலம் நீடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த 3 மாத காலமும் விவேகா னந்தர் நினைவு மண்ட பத்துக்கு எந்தவித தடங்க ளும் இன்றி படகு போக்கு வரத்து தொடர்ச்சியாக நடைபெறும் என்று நம்புகி றோம் இ வ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
- அமைச்சர் மனோதங்கராஜிக்கு சால்வை அணிவித்தனர்
- அனைவரும் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்த்தாண்டம் :
கிள்ளியூர் தெற்கு ஒன்றியம் பாலப்பள்ளம் பேரூராட் சிக்குட்பட்ட குறும்பனை பகுதியை சார்ந்த மாற்றுக் கட்சியினர் பலர் அமைச்சர் மனோ தங்கராஜிக்கு சால்வை அணிவித்து அவரது முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், பாலப்பள்ளம் பேரூர் செயலாளர் மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மனைவி ஸ்ரீஜா மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை :
மார்த்தாண்டம் ேபாலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நட்டாலம் காட்டாவிளையைச் சேர்ந்தவர் பால்துரை (வயது 39), தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மனைவி ஸ்ரீஜா மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி பால்துரை பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
- மேலாளர் ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துஇருந்தனர்.
கன்னியாகுமரி :
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பவுர்ணமி விழா கொண்டா டப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான ஐப்பசி பவுர்ணமி விழா கோலா கலமாக கொண்டா டப்பட்டது.
இதையொட்டி அதி காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.
பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையையும், நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய், பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தங்கக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. பவுர்ணமி அன்று சந்திர கிரகணம் நிகழ்ந்ததால் அன்று இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டுவிட்டது. அதைத்தொடர்ந்து அன்று இரவு நடக்க இருந்த மலர்முழுக்கு விழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, மல்லிகை, அரளி, கொழுந்து, துளசி, தாமரை, மரிக்கொழுந்து உள்பட பலவகையான மலர்களால் அம்மனுக்கு புஷ்பாபி ஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருள செய்து கோவி லின் உள் பிர காரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்கா வலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதிஷ்குமார், துளசிதரன் நாயர், சுந்தரி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துஇருந்தனர்.
- கடற்கரை ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது
- தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஜவுளி கடைகளுக்கு மக்கள் படை எடுப்பு
கன்னியாகுமரி :
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் இங்கு சுற்றுலா பயணிகள் மட்டு மின்றி அய்யப்ப பக்தர்க ளின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரியில் மெயின் சீசன் காலமாக கருதப்படுகிறது.
அதேபோல் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடு முறை சீசனை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்ப டும். கன்னியாகுமரியில் இந்த 2 சீசன் காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிக அளவில் காணப்ப டும். சீசன் இல்லாத காலங்க ளில் வாரத்தின் கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் தொடர் விடுமுறை நாட்க ளிலும் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதிய வண்ணமாக இருக்கின்றன.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்ப தால் மக்கள் ஜவுளி கடை களுக்கு துணி எடுப்பதற்காக படை எடுக்க தொடங்கி விட்டனர். இதனால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைய தொடங்கிவிட்டது. வாரத்தின் கடைசி விடு முறை நாட்களான கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட சுற்றுலா பயணிகளின் வருகை குறை வாகவே காணப்பட்டது.
அதிலும் குறிப்பாக வாரத்தின் முதல் நாளான இன்று பள்ளி மற்றும் அலுவலகங்கள் செயல்பட தொடங்கியதை தொடர்ந்து இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அடியோடு நின்று போய்விட்டது. வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளின் வருகையும் மட்டுமின்றி உள்ளூர் சுற்றுலா பயணிகளின் வருகையும் இன்று கணி சமான அளவு குறைந்துவிட்டது.
தீபாவளி முடியும் வரை கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைய வாய்ப்பு உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை குறைய தொடங்கியதால் சுற்றுலா தலமான கன்னியா குமரி கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் நட மாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்ப டுகிறது. கன்னியாகுமரி பகுதியில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி கிடக்கின்றன. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடேஸ்வரசுவாமி கோவில், சுசீந்திரம் தாணு மாலய சாமி கோவில் போன்ற பெரிய கோவில்க ளிலும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் கன்னியாகுமரியில் உள்ள கடை மற்றும் ஓட்டல்களில் வியாபாரம் இன்றி வியாபாரிகள் மிகவும் கவலையடைந்து உள்ளனர்.
- தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் நடந்தது
- இளம்பெண் இளைஞர் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆரல்வாய்மொழி :
தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக ஆரல்வாய்மொழி தனியார் மண்டபத்தில் பூத் நிர்வாகிகள் இளம்பெண் இளைஞர் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளருமான முத்துக்குமார் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மேலிடப்பார்வையாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி கலந்துகொண்டு பேசியதாவது:-
ஏழை, எளிய மக்களின் நலம்காக்க பாடுபட்ட இயக்கம் அ.தி.மு.க.. ஆனால் தி.மு.க. அரசு மக்களை வஞ்சித்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றுகிற தி.மு.க. அரசை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் அட்சய கண்ணன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி கிருஷ்ணதாஸ், ஆரல்வாய்மொழி நகர செயலாளர் சுடலையாண்டி, தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பரமேஸ்வரன், ஆரல் வாய்மொழி பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுதா பாலகிருஷ்ணன், தாழக்குடி பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரோகினி அய்யப்பன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர் நவமணி, மோகன் வள்ளி யம்மாள் கிளை கழக நிர்வாகிகள் துணை செல்வன், கச்சேரி நாக ராஜன், சிவசங்கரன், இணை செயலாளர் பேச்சி யம்மாள், அமுதா உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாம்பழத்துறையாறு. சோழன் திட்டை அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன
- அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப் பட்டு வருகிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சிற்றாறு-1, சிற்றாறு-2 மற்றும் மாம்பழத்துறையாறு. சோழன் திட்டை அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன. இதனால் அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப் பட்டு வருகிறது.
பேச்சிப்பாறை, பெரு ஞ்சாணி அணைகளு க்கும் தண்ணீர் வரத்து அதிக மாகவே உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 41.91 அடியாக உள்ளது. 77 அடி கொள்ள ளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 71.70 அடி நீர்மட்டம் உள்ளது.
பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 354 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 172 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 372 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வழக்கமாக அணையின் முழு கொள்ளளவில் 6 அடி குறைவாக தண்ணீர் இருக்கும் போது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தற்போது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் அந்த குறிப்பிட்ட அளவை நெருங்கி வருவதால், பொதுப்பணித்துறையினர் அணைகளுக்கு வரும் நீர்வரத்ைத 24 மணி நேரமும் கண்காணித்து வரு கின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வரும் நிலையில் பொய்கை அணை மட்டும் நீர் வரத்து இல்லாமல் உள்ளது.42.65 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 8.60 அடியே நீர்மட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றும் மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கொட்டாரத்தில் அதிகபட்சமாக 16 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.
இதற்கிடையில் கல்குளம் தாலுகாவில் நேற்று ஒரே நாளில் மழைக்கு 14 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. ஏற்கனவே 125-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆய்வு
- குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன
நாகர்கோவில் :
குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன. இதில் சிறு சிறு கோவில்கள் என 100 கோவில்களை தமிழக அரசு தேர்வு செய்து 2022-23-ம் ஆண்டில் திருப்பணி மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது. அதன்படி தெங்கம்புதூர் மறுகால்தலை கண்டன் சாஸ்தா கோவிலில் ரூ.20 லட்சத்தில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த திருப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது, ஊர் மக்கள் கோவிலில் கொடிமரம் வைக்க கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் அரசிடம் பேசி நிறைவேற்றி தருவதாக அறங்காவலர் குழு தலைவர் உறுதி அளித்துள்ளார். ஆய்வின்போது தேவசம் பொறியாளர் ராஜ்குமார், ஸ்ரீகாரியம் ஹரி பத்மநாபன், ஊர் தலைவர் மற்றும் உபயதாரர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
- கிள்ளியூர் தாலுகா பொதுமக்கள் நலன் கருதி தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம்
மார்த்தாண்டம்,அக்.30-
குமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்கும் முறையாக பயிற்சிகள் மேற்கொள்வதற்கும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் அரசு சார்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் இல்லை. சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் போது அரசு சார்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட மினி விளையாட்டு மைதானத்தை கிள்ளியூரில் அமைத்து தர வேண்டும்.
முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளான அதங்கோடு, செங்கிலம், மங்காடு, ஆலு விளை, மாமுகம், பணமுகம், பள்ளிக்கல், முஞ்சிறை, பார்த்திவபுரம், விரிவிளை, வைக்கலூர், மரப்பாலம், பருத்திக்கடவு, கழியான்குழி, ஈழக் குடிவிளாகம், பரக்காணி போன்ற பகுதிகளில் மழை காலங்களில் ஏற்படும் பெருவெள்ளத்தால் வீடுகளில் ஆற்றுநீர் புகுந்து விடுகிறது. இதனால் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்படுகிறது. இதனால் அப் பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் இருப்பக்கங்களிலும் நிரந்தர பக்கசுவர்கள் அமைத்து அங்கு குடியிருக்கும் பொது மக்களையும் அவர்களின் வீடுகளையும் பேரழிவிலிருந்து பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிள்ளியூர் தாலுகா பொதுமக்கள் நலன் கருதி தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என்கிற அடிப்படையில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களையும் உட்படுத்தி கிள்ளியூர் பகுதியில் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






