search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்
    X

    நாகர்கோவிலில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்

    • 10-ந்தேதி நடக்கிறது
    • ஓய்வூதிய விண்ணப்பத்தை சமர்ப்பித்தலில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வருங்கால வைப்பு நிதி ஆணையர் பங்கஜ்வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கும் மற்றும் தொழிலாளர்கள், தொழில் நிறுவனர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாகர்கோவிலில் உள்ள வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தில் நடக்கிறது. இதில் மண்டல ஆணையாளர் குறைகளை கேட்டு நிவாரணம் அளிப்பார்.

    அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குதலில் ஏதேனும் குறைகள் இருப்பின் மண்டல அலுவலகத்தை அணுகலாம். அதேபோல வருங்கால வைப்புநிதி சந்தாதாரராக சேர தகுதியிருந்தும் சேர்க்கப்படாமல் இருப்பவர்கள், செயலிழந்த உறுப்பினர் கணக்கை முடிக்க விரும்புபவர்கள், மாத சந்தா செலுத்துவது தொடர்பான குறையுள்ளவர்கள் விண்ணப்பம் அனுப்பி உரிய காலத்தில் வைப்புநிதி கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் 16 வருடங்களுக்கு மேல் பணி செய்து, வரும் 3 மாதத்திற்குள் 58 வயது முடிவடைகிற இ.பி.எஸ். உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓய்வூதிய விண்ணப்பத்தை சமர்ப்பித்தலில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மேலும் தொழிலாளர்கள்-தொழில் நிறுவனர்கள் தங்கள் குறைதீர் மனுக்களை வருகிற 7-ந்தேதிக்குள் அலுவலகத்தில் நேரிலும் அல்லது அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×