என் மலர்
நீங்கள் தேடியது "வருங்கால வைப்புநிதி"
- வருங்கால வைப்புநிதியில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
- இனி கல்வி தேவைக்காக 10 முறையும், திருமண தேவைக்காக 5 முறையும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.
புதுடெல்லி:
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரிய கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மத்திய தொழிலாளர்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்.
இதில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், வைப்புநிதியில் பகுதி அளவுக்கு பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அத்தியாவசிய தேவைகள் (உடல்நலக்குறைவு, கல்வி, திருமணம்), வீட்டு தேவைகள், சிறப்பு சூழ்நிலை என 3 பிரிவாக விதிமுறைகள் வகைப்படுத்தப்பட்டன.
தொழிலாளர் பங்களிப்பு, நிறுவனத்தின் பங்களிப்பு உள்பட வைப்புநிதியில் தகுதியான இருப்பில் 100 சதவீதம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்.
கல்வி தேவைக்காக 3 முறைக்கு பதிலாக 10 முறையும், திருமண தேவைக்காக 3 முறைக்கு பதிலாக 5 முறையும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
பேரிடர், வேலையின்மை போன்ற சிறப்பு சூழ்நிலை பிரிவில் தேவைக்கான காரணத்தை குறிப்பிடத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் உறுப்பினர்களின் எதிர்கால தேவைக்காக உறுப்பினர் கணக்கில் 25 சதவீத பங்களிப்பை குறைந்தபட்ச இருப்பாக எப்போதும் பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
- வருகிற 12-ந்தேதி நடக்கிறது
- வருங்கால வைப்புநிதி நாகர்கோவில் மண்டல ஆணையர் தகவல்
நாகர்கோவில்:
வருங்கால வைப்புநிதி நாகர்கோவில் மண்டல ஆணையர் பங்கஜ்வர்மா வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்களுக்கும், தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 12-ந்தேதி நாகர்கோவிலில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அதன்படி அன்று காலை 10 மணிக்கு நடை பெறும் கூட்டத்தில் மண்டல ஆணையர் ஓய்வூதி யர்கள் மற்றும் தொழிலா ளர்கள், தொழில் நிறுவ னர்களின் குறைகளை கேட்டு நிவாரணம் அளிக் கிறார். அனைத்து ஓய்வூதிய தாரர்களுக்கும், ஓய்வூதியம் வழங்குதலில் ஏதே னும் குறைகள் இருப்பின் மண்டல அலுவலகத்தை அணுக லாம். வருங்கால வைப்பு நிதி சந்தாதாரராக சேர தகுதியிருந்தும் சேர்க் கப்படாமல் இருப்பவர்கள், செயலிழந்த உறுப்பி னர் கணக்கை முடிக்க விரும்பு பவர்கள், மாத சந்தா செலுத்துவது தொடர்பான குறையுள்ளவர்கள், விண் ணப்பம் அனுப்பி உரிய காலத்தில் வைப்புநிதி கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து வருகிற 3 மாதத்திற்குள் 58 வயது முடிவடைகிற உறுப்பினர் களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓய்வூதியம் விண்ணப்பத்தை சமர்ப்பித் தலில் உள்ள சந்தேகங்க ளையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேலும், தொழில் நிறுவ னங்கள் பணம் செலுத் துவது, உலகளாவிய கணக்கு எண் ஒதுக்கீடு செய்வது, புதிய உறுப்பி னர்களை வருங்கால வைப்பு நிதியில் சேர்த்துக்கொள்வது தொடர் பான நவீன தொழில் நுட்பங்கள் குறித்த தங்களது சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் மின் அஞ்சல் முகவ ரியில் இருந்து ro.nagercoil@epfindia.gov.in என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- 10-ந்தேதி நடக்கிறது
- ஓய்வூதிய விண்ணப்பத்தை சமர்ப்பித்தலில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் வருங்கால வைப்பு நிதி ஆணையர் பங்கஜ்வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கும் மற்றும் தொழிலாளர்கள், தொழில் நிறுவனர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாகர்கோவிலில் உள்ள வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தில் நடக்கிறது. இதில் மண்டல ஆணையாளர் குறைகளை கேட்டு நிவாரணம் அளிப்பார்.
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குதலில் ஏதேனும் குறைகள் இருப்பின் மண்டல அலுவலகத்தை அணுகலாம். அதேபோல வருங்கால வைப்புநிதி சந்தாதாரராக சேர தகுதியிருந்தும் சேர்க்கப்படாமல் இருப்பவர்கள், செயலிழந்த உறுப்பினர் கணக்கை முடிக்க விரும்புபவர்கள், மாத சந்தா செலுத்துவது தொடர்பான குறையுள்ளவர்கள் விண்ணப்பம் அனுப்பி உரிய காலத்தில் வைப்புநிதி கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் 16 வருடங்களுக்கு மேல் பணி செய்து, வரும் 3 மாதத்திற்குள் 58 வயது முடிவடைகிற இ.பி.எஸ். உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓய்வூதிய விண்ணப்பத்தை சமர்ப்பித்தலில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேலும் தொழிலாளர்கள்-தொழில் நிறுவனர்கள் தங்கள் குறைதீர் மனுக்களை வருகிற 7-ந்தேதிக்குள் அலுவலகத்தில் நேரிலும் அல்லது அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






