search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்
    X

    கோப்பு படம் 

    நாகர்கோவிலில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்

    • வருகிற 12-ந்தேதி நடக்கிறது
    • வருங்கால வைப்புநிதி நாகர்கோவில் மண்டல ஆணையர் தகவல்

    நாகர்கோவில்:

    வருங்கால வைப்புநிதி நாகர்கோவில் மண்டல ஆணையர் பங்கஜ்வர்மா வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்களுக்கும், தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 12-ந்தேதி நாகர்கோவிலில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    அதன்படி அன்று காலை 10 மணிக்கு நடை பெறும் கூட்டத்தில் மண்டல ஆணையர் ஓய்வூதி யர்கள் மற்றும் தொழிலா ளர்கள், தொழில் நிறுவ னர்களின் குறைகளை கேட்டு நிவாரணம் அளிக் கிறார். அனைத்து ஓய்வூதிய தாரர்களுக்கும், ஓய்வூதியம் வழங்குதலில் ஏதே னும் குறைகள் இருப்பின் மண்டல அலுவலகத்தை அணுக லாம். வருங்கால வைப்பு நிதி சந்தாதாரராக சேர தகுதியிருந்தும் சேர்க் கப்படாமல் இருப்பவர்கள், செயலிழந்த உறுப்பி னர் கணக்கை முடிக்க விரும்பு பவர்கள், மாத சந்தா செலுத்துவது தொடர்பான குறையுள்ளவர்கள், விண் ணப்பம் அனுப்பி உரிய காலத்தில் வைப்புநிதி கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து வருகிற 3 மாதத்திற்குள் 58 வயது முடிவடைகிற உறுப்பினர் களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓய்வூதியம் விண்ணப்பத்தை சமர்ப்பித் தலில் உள்ள சந்தேகங்க ளையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மேலும், தொழில் நிறுவ னங்கள் பணம் செலுத் துவது, உலகளாவிய கணக்கு எண் ஒதுக்கீடு செய்வது, புதிய உறுப்பி னர்களை வருங்கால வைப்பு நிதியில் சேர்த்துக்கொள்வது தொடர் பான நவீன தொழில் நுட்பங்கள் குறித்த தங்களது சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் மின் அஞ்சல் முகவ ரியில் இருந்து ro.nagercoil@epfindia.gov.in என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×