என் மலர்
காஞ்சிபுரம்
கல்லூரி மாணவரை வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நடுவீரப்பட்டு ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் என்கிற பாபு (வயது 20). இவர் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார் கடந்த 30-ந்தேதி சோமங்கலம் அடுத்த தர்காஸ் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அபிஷேக்கை வழி மறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதில் அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த வழக்கில் ராஜகோபால் கண்டிகையை சேர்ந்த சச்சின் (20), ராஜ்குமார் (19), பம்மல் பகுதியை சேர்ந்த மதன் (20) ஆகியோர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
படப்பை அருகே வாலிபரை வெட்டியது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 23). இவருடைய சகோதரியின் திருமணம் கடந்த மாதம் 27-ந் தேதி சென்னை திருவேற்காட்டில் நடைபெற்றது. திருமண விழாவில் கலந்து கொண்ட கரசங்கால் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம், பிரதாப் மற்றும் அசோக்குமார் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் திருமணம் முடிந்து அசோக்குமார் தனது சகோதரியை கடந்த ஞாயிற்றுக்கிழமை கரசங்கால் பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தார்.
விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் பிரியாணி எடுத்து கொண்டு அசோக்குமார் அந்த பகுதியில் உள்ள நண்பர்களுக்கு கொடுத்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கரசங்கால் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் மற்றும் நித்தியானந்தம் (20), புருஷோத்தமன் (20), படப்பை தமிழ்ச்செல்வன் (20), குழங்கலச்சேரி ஜெயசூர்யா (21) கரசங்கால் கார்த்திக் (30) ஆகியோர் அசோக்குமாரை வழிமறித்து ஏற்கனவே திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற கைகலப்பு சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் அசோக்குமாரை கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து அனைவரும் தப்பிச்சென்று விட்டனர்.
வெட்டுபட்ட நிலையில் கிடந்த அசோக்குமாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, சிறுவர்கள் இருவரை சீர்திருத்த பள்ளிக்கும் 5 பேரை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பிரதாப்பை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதியதாக பதவியேற்ற மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட முதுகுத்தண்டுவடம் பாதித்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக்கூடிய நாற்காலிகளை வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
அதன்பின்னர் அவர், மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) யோகலட்சுமி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதியதாக பதவியேற்ற மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட முதுகுத்தண்டுவடம் பாதித்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக்கூடிய நாற்காலிகளை வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
அதன்பின்னர் அவர், மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) யோகலட்சுமி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
காஞ்சீபுரத்தில் இருவேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம், அரசன்குப்பம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி லட்சுமி (வயது 30), லோகநாதன் மனைவி லட்சுமியுடன் செங்கல்பட்டு மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
காஞ்சீபுரத்தை அடுத்த நெல்வாய் ஜங்ஷன் என்ற இடத்தில் இவர்கள் வந்தபோது திடீரென ஒரு மாடு குறுக்கே வந்ததால் லோகநாதன் திடீரென்று பிரேக் பிடித்தார். இதில் நிலைதடுமாறிய லட்சுமி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக மீட்டு பரந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து லோகநாதன் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் உதயத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் செல்வக்குமார் (27). இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (26) என்பவருடன் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த ஆம்னி பஸ் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் செல்வக்குமார் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பரான மணிமாறன் படுகாயத்துடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோட முயன்ற ஆம்னி பஸ் டிரைவரை சுங்கச்சாவடியில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வேளிங்கபட்டரையை சேர்ந்தவர் பாபு. இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டில் விட்டு விட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாபு காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மைனர்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.
இன்ஸ்பெக்டர் மைனர் சாமி, குற்றப்பிரிவு ஏட்டுகள் சரவணன், முரளி, ராமச்சந்திரன் ஆகியோர் காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி எதிரே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்தனர். உடனே போலீசார் அவர்களை சைகை காட்டி நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையொட்டி அவர்கள் 2 பேரை பிடித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பாபுவின் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதையொட்டி காஞ்சிபுரம் சதாவரத்தை சேர்ந்த ஈசா என்கிற ஈஸ்வரன் (வயது 23), முத்தியால்பேட்டையை சேர்ந்த சங்கர் (24) ஆகியோரை கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.
துபாயில் இருந்து சென்னை விமானநிலையம் வந்திறங்கிய சிறப்பு விமான நிலையத்தில் கடத்தப்பட்ட ரூ.10½ லட்சம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்திறங்கும் விமானங்களில் ரகசியமாக தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த சாகுல் அமீது (வயது 44) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்தனர்.
அதில் எதுவும் கிடைக்காததால், அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, அவரது உள்ளாடைக்குள் பிளாஸ்டிக் டப்பிகளில் மறைத்து வைத்திருந்த 230 கிராம் தங்க கட்டிகளை கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.
அதைத்தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.10 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சாகுல் அமீதிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
படப்பை அருகே 4 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை கலைஞர் நகர் 4-வது தெரு, ஆதனஞ்சேரியை சேர்ந்தவர் பத்மினி (வயது 55). இவரது மகன் செந்தில் என்ற செந்தில்குமார். இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானதாக மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பத்மினி கடந்த 28-ந்தேதி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் செந்தில்குமாரின் மனைவி மேனகாவுக்கு சென்னை சிட்லப்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த ராஜேஷ்கண்ணா (40) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி ராஜேஷ்கண்ணா, மாயமான செந்தில்குமாரின் தாயார் பத்மினியை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றார். அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், செந்தில்குமாரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் உள்ள மேனகாவின் தந்தை அருணை (66) பிடித்து விசாரித்தனர்.
அப்போது தனது மருமகன் செந்தில்குமாரின் சொத்து முழுவதையும் அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் தனது மகள் மேனகாவின் கள்ளக்காதலன் ராஜேஷ்கண்ணா மற்றும் தனது நண்பர்களான விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (42), சவுட்டூர் பகுதியை சேர்ந்த காசிநாதன் (70) ஆகியோருடன் சேர்ந்து செந்தில்குமாரை தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், ஆலம்பூண்டி கிராமம் அருகே உள்ள தனது தோட்டத்திற்கு அழைத்து சென்று கடந்த 2018-ம் ஆண்டு கொலை செய்து அங்கேயே புதைத்துவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அருண், ஹரிகிருஷ்ணன், காசிநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக மகேஸ்வரி ரவிக்குமார் பதவியேற்று கொண்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட புதிய பெண் கலெக்டராக மகேஸ்வரி ரவிக்குமார் காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த பொன்னையா திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பதவி ஏற்றதும் 2 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை வழங்கினார்.
மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, காஞ்சிபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாராயணன், மாவட்ட ஊராட்சி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பெருமாள் ராஜா, அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான வாலாஜாபாத் கணேசன், காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் மற்றும் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
புதிதாக பொறுப்பேற்று கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார், கிருஷ்ணகிரியில் வருவாய் ஆர்.டி.ஓ.வாகவும், தர்மபுரி மாவட்டத்தில் வருவாய்துறை அதிகாரியாகவும், சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பதவி வகித்து தற்போது காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக பதவியேற்றார். இவரது கணவர் ரவிக்குமார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
முன்னதாக உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் பொன்னாடை அணிவித்து பிரசாதங்களை வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட புதிய பெண் கலெக்டராக மகேஸ்வரி ரவிக்குமார் காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த பொன்னையா திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பதவி ஏற்றதும் 2 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை வழங்கினார்.
மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, காஞ்சிபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாராயணன், மாவட்ட ஊராட்சி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பெருமாள் ராஜா, அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான வாலாஜாபாத் கணேசன், காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் மற்றும் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
புதிதாக பொறுப்பேற்று கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார், கிருஷ்ணகிரியில் வருவாய் ஆர்.டி.ஓ.வாகவும், தர்மபுரி மாவட்டத்தில் வருவாய்துறை அதிகாரியாகவும், சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பதவி வகித்து தற்போது காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக பதவியேற்றார். இவரது கணவர் ரவிக்குமார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
முன்னதாக உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் பொன்னாடை அணிவித்து பிரசாதங்களை வழங்கினார்கள்.
உத்திரமேரூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த சிறுதாமூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் கிளக்காடு கிராமத்தை சேர்ந்த கோதண்டம் (வயது 40) லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் கல் ஏற்றி வர லாரியில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்தது.
இதில் கோதண்டம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோசையா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த குன்னங்கொளத்தூரை சேர்ந்தவர் துரை (50). இவர் தனது நிலத்தில் பயிரிடப்பட்ட கத்திரிக்காயை விற்பதற்காக செங்கல்பட்டு சந்தைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக அதிவேகமாக வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துரை உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காஞ்சீபுரத்தை அடுத்த ஆட்டுப்புத்தூர் ஜங்ஷன் என்ற இடத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது பின்னால் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதியது. இதில் காயம் அடைந்த அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சிங்காடிவாக்கம் கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரமேரூர்:
சென்னை ஒரகடத்தை சேர்ந்தவர் பவித்ரா. இவர் நேற்று முன்தினம் உத்திரமேரூர் அடுத்த மருதம் கிராமத்தில் வசித்து வரும் தனது சகோதரி அம்முவின் மகள் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக தனது மகன்கள் நவீன் குமார் (வயது 15), உமேஷ் (12) ஆகியோருடன் மருதம் கிராமத்திற்கு சென்றார்.
சாப்பிடுவதற்காக வாழை இலை எடுத்து வர நவீன்குமார் பின்புறமுள்ள தோட்டத்திற்கு சென்றான். அப்போது அங்குள்ள கிணற்றில் நவீன்குமார் தவறி விழுந்தான்.
சத்தம்கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் விழுந்த நவீன்குமாரை மீட்டு உத்திரமேரூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நவீன்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து உத்தரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார். சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த சிறுவன் கிணற்றில் விழுந்து பலியானது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
தாம்பரம் அருகே கல்லூரி மாணவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ராம்ஜிநகர், நான்காவது தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகன் அபிஷேக் என்கிற பாபு. இவர் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், அபிஷேக் நேற்று சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தர்காஸ் கிராமத்தில் நடந்த திருமண வரவேற்பு விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது 5 பேர் கொண்ட மர்மகும்பல் அபிஷேக்கை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.
தகவலறிந்து வந்த சோமங்கலம் காவல்நிலைய போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ராம்ஜிநகர், நான்காவது தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகன் அபிஷேக் என்கிற பாபு. இவர் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், அபிஷேக் நேற்று சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தர்காஸ் கிராமத்தில் நடந்த திருமண வரவேற்பு விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது 5 பேர் கொண்ட மர்மகும்பல் அபிஷேக்கை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.
தகவலறிந்து வந்த சோமங்கலம் காவல்நிலைய போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த நீர்வள்ளூர் ரோடு ஜங்ஷன் அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நீர்வள்ளூர் கிராம நிர்வாக அதிகாரி மகாலட்சுமி காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






