search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

    காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வேளிங்கபட்டரையை சேர்ந்தவர் பாபு. இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டில் விட்டு விட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாபு காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மைனர்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

    இன்ஸ்பெக்டர் மைனர் சாமி, குற்றப்பிரிவு ஏட்டுகள் சரவணன், முரளி, ராமச்சந்திரன் ஆகியோர் காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி எதிரே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்தனர். உடனே போலீசார் அவர்களை சைகை காட்டி நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையொட்டி அவர்கள் 2 பேரை பிடித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பாபுவின் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    இதையொட்டி காஞ்சிபுரம் சதாவரத்தை சேர்ந்த ஈசா என்கிற ஈஸ்வரன் (வயது 23), முத்தியால்பேட்டையை சேர்ந்த சங்கர் (24) ஆகியோரை கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×