என் மலர்
காஞ்சிபுரம்
ஒரகடம் வனப்பகுதி அருகே சாலை வளைவில் எதிர் திசையில் வேகமாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
படப்பை:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தென்கழனி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24), இவர் நேற்று முன்தினம் தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் பகுதியில் உள்ள தனது சித்தியின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வாலாஜாபாத்- வண்டலூர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
ஒரகடம் வனப்பகுதி அருகே சாலை வளைவில் எதிர் திசையில் வேகமாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தென்கழனி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24), இவர் நேற்று முன்தினம் தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் பகுதியில் உள்ள தனது சித்தியின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வாலாஜாபாத்- வண்டலூர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
ஒரகடம் வனப்பகுதி அருகே சாலை வளைவில் எதிர் திசையில் வேகமாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர், வடமங்கலம், சுங்குவார் சத்திரம் அடுத்த கீழ்பொடவூர் போன்ற இடங்களில் மர்மநபர்கள் திருட்டுத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின்பேரில் ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் மேற்பார்வையில், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசாரின் சோதனையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 30), வடமங்கலம் பகுதியை சேர்ந்த மற்றொரு மணிகண்டன் (32), சுங்குவார்சத்திரம் அடுத்த கீழ்பொடவூர் பகுதியை சேர்ந்த கண்ணபிரான் (35) ஆகியோர் திருட்டுத்தனமாக மது விற்றது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 347 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.
காஞ்சீபுரத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். அதன்பேரில் காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தை சேர்ந்த பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி என 21 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான மணிமாறன் (வயது 28), 11 வழக்குகளில் சம்பந்தப்பட்ட விஜய் (25) மற்றும் 12 வழக்குகளில் சம்பந்தப்பட்ட துளசிராமன் (25) ஆகியோர் தலைமறைவாக இருந்து கொண்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பல்வேறு கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு உதவி செய்த போந்தூரை சேர்ந்த சிவா என்கிற பரமசிவம(43), வல்லம் பகுதியை சேர்ந்த சதீஷ்(28) ஆகியோரை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சுங்குவார்சத்திரம் அருகே வேலை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த சிறுமாங்காடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 21). கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக வேலை இல்லாமல் இருந்து வந்தார்.
மேலும் விக்னேஷ் மது பழக்கத்துக்கு அடிமையாகி மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விக்னேஷ் நேற்று முன்தினம் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வீட்டின் அருகே மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் விக்னேசை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் மற்றும் சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டு ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காஞ்சீபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சின்னையன் சத்திரம் பகுதியில் சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி டிரைவர்களிடம் இருந்து 2 பேர் செல்போன்களை பறித்து செல்வதாக அங்கு இருந்த ரோந்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். காஞ்சீபுரம் பொன்னேரி கரையில் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை பட்டாபிராமை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 22), ஜெகன் (20) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள், சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடும் நபர்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தங்கள் அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்கு அல்லது காஞ்சீபுரம் போலீஸ் கட்டுப்பாட்டு அறை 044-27236111, 9498181232 என்ற எண்ணுக்கும் தகவல் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
படப்பை அருகே மொபட் மீது கார் மோதியதில் பெண் பலியானார்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மரியா ஜெனிபர் (வயது 57). நேற்று இவர் மொபட்டில் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் கரசங்கல் துண்டல் கழணி அருகே சென்று கொண்டிருந்தார்.
சாலை திருப்பத்தில் செல்லும்போது படப்பையில் இருந்து வண்டலூர் நோக்கி சென்ற கார் மின்னல் வேகத்தில் மொபட் மீது மோதியது.
மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட மரியா ஜெனிபர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் பேராசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (வயது40). திருமணம் ஆகாத இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 10-ந்தேதி இரவு வீட்டில் உள்ள அறையில் அனிதா மர்மமாக இறந்து கிடந்தார். அவரது வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மேலும் அனிதாவின் உடலிலும் காயங்கள் இருந்தன. இதுபற்றி காஞ்சி தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அனிதாவின் செல்போனுக்கு கடைசியாக பேசியவர்கள் விவரத்தை போலீசார் சேகரித்தனர். இதில் காஞ்சிபுரம் பாண்டபெருமாள் கோவில் சன்னதி தெருவைச் சேர்ந்த சுதாகர் என்பவர் பேராசிரியை அனிதாவிடம் அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது.
சுதாகர் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரிடம் நடத்திய விசாரணையில் பேராசிரியை அனிதாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
சுதாகருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அனிதாவுடன் அவர் நெருங்கி பழங்கி இருக்கிறார். இந்த நிலையில் தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ள அனிதா வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதில் ஏற்பட்ட தகராறில் அனிதாவை சுதாகர் கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா? கொலை நடந்தது எப்படி? என்பது குறித்து கைதான சுகதாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி பேராசிரியை கொலையில் உடற்கல்வி ஆசிரியர் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பணம் மற்றும் நகை கேட்டு மாணவியின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த பிளஸ்-2 மாணவனை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த 15 வயதுள்ள மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கும் அதே பகுதியில் உள்ள 17 வயது பிளஸ்-2 மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் திடீரென மாணவியிடம் ஆடம்பர செலவுக்காக பணம் மற்றும் நகை வேண்டும் என்று கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன், மாணவியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், மாணவியின் ஆபாச படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இது பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
விசாரணையில் பிளஸ்-2 மாணவர் நகை, பணம் கேட்டு மாணவியை மிரட்டி இருப்பது தெரிந்தது. இதையடுத்து மாணவனை போலீசார் கைது செய்தனர். அவரை செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்த்து உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன பஸ்கள் மோதிய விபத்தில் 10 பெண்கள் காயம் அடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றி கொண்டு ஒரே நிறுவனத்தை சேர்ந்த 2 பஸ்கள் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சுங்குவார்சத்திரம் நோக்கி சென்றது.
2 பஸ்களில் 40 பெண் ஊழியர்கள் பயணம் செய்தனர். சுங்குவார்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது டிரைவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முந்திச்செல்வதற்காக அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு சென்றனர்.
அப்போது பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் விபத்துகுள்ளாகி சாலையோர பள்ளத்தில் இறங்கியது.
இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 10 பெண்கள் காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். விபத்து நடந்த சமயத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து மற்றும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த விபத்தால் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வண்டிக்காரத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 64). ஓய்வுபெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மனைவி பார்வதி (62). தியாகராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தனது மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
நேற்று காலை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தியாகராஜனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சென்னையில் உள்ள தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அவரது வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
உத்திரமேரூர் பகுதியை சுற்றி அடிக்கடி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சின்ன காஞ்சீபுரத்தில் தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
காஞ்சீபுரம்:
சின்ன காஞ்சீபுரம் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பு. தனியார் பட்டு நிறுவன விற்பனையகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரேணுகா (வயது 40) என்ற மனைவியும், சங்கீதா (21), புவனா (17) என்ற மகள்களும் உள்ளனர்.
ரேணுகா அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். தாய் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியுறுவதை பார்த்த இளைய மகள் புவனா கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.
நேற்று அன்பு வேலைக்கு சென்று விட்டார். சங்கீதா அருகாமையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மதிய உணவுக்கு வந்த அன்பு நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் தனது உறவினர் ஒருவருடன் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது மின்விசிறி கொக்கியில் சேலையின் ஒருபுறம் ரேணுகாவும், மறுபுறம் புவனாவும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தாய், மகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாயின் மீது அதிக பாசம் கொண்டதால் தாயுடன் இணைந்து மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரமேரூர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி திருட்டுத்தனமாக அதிக விலைக்கு உத்திரமேரூர் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. போலீசார் இது சம்பந்தமாக உத்திரமேரூர் பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது காவனூர் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்த சுதாகர் (வயது 37), அதே ஊரை சேர்ந்த திருமலை (45), உத்திரமேரூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுமதி (25), கம்மாளம்பூண்டி கிராமம் பழத்தோட்டத்தை சேர்ந்த பொன்னி (47), படூர் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் (48) ஆகியோர் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.






