search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சுங்குவார்சத்திரம் அருகே ஓவிய ஆசிரியரை கொன்று உடல் புதைப்பு - மனைவி, கள்ளக்காதலன் கைது

    சுங்குவார்சத்திரம் அருகே ஓவிய ஆசிரியரை கொன்று உடல் புதைக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது மனைவி, கள்ளக்காதலன், அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சிவபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 53). இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவருக்கு சோபனா (30) என்ற மனைவியும், அன்பரசி (10) என்ற மகளும், கோவேஷ் (2) என்ற மகனும் உள்ளனர்.

    கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி முதல் அன்பழகன், அவரது மனைவி சோபனா மற்றும் மகள், மகனை காணவில்லை. இது குறித்து அன்பழனின் உறவினர் சுங்குவார் சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். விசாரணையில் சோபனா தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அவர் முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்ததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் சோபனாவை துருவி துருவி விசாரித்தனர்.

    விசாரணையில் சோபனா கள்ளக்காதலன் தர்மராஜ் மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து கணவர் அன்பழகனை கொன்று சிவபுரம் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றங்கரை ஓரம் குழி தோண்டி புதைத்து விட்டு தலைமறைவானது தெரிய வந்தது.

    போலீசார் சோபனா, தர்மராஜ், விக்னேஷ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் இன்று (புதன்கிழமை) ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முன்னிலையில் அன்பழகனி்ன் உடலை தோண்டி எடுக்க உள்ளனர்.

    போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×