என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தியதன் பேரில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான நசரத்பேட்டையை சேர்ந்த சக்திவேல் (வயது 23), அப்பு என்ற விக்னேஷ் (24) ஆகியோர் தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை போலீஸ் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் மேற்படி 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சீபுரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி ஏரிக்கரையில் அந்த பகுதியை சேர்ந்த மலர் (40) என்பவர் மாடு மேய்த்துவிட்டு வேப்பமரத்தடியில் அமர்ந்துகொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் மலரின் கழுத்து மற்றும் வாயை அழுத்தி பிடித்ததில் அவர் மயக்கம் அடைந்தார். அப்போது அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துச் கொண்டு மர்ம நபர் தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து மலரின் மகன் வினோத்குமார் பாலுச்செட்டிசத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் முசரவாக்கம், ரேணுகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்த சீராளன் (வயது 39) என்பவர் மலரின் தங்க நகைகளை பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதையொட்டி தனிப்படை போலீசார் சீராளனை கைது செய்து அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.
இந்த வழக்கில் சிறப்பாகவும் புலன் விசாரணை மேற்கொண்டு மற்றும் விரைவாகவும் செயல்பட்டு வழிப்பறி வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்ய உதவிய பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலைய தனிப்பிரிவு சோமசுந்தரம் மற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் அவரது குழுவினரை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெகுவாக பாராட்டினார்.
சுங்குவார்சத்திரம் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த கீரநல்லூர் பகுதியில் புதிதாக அரசு மதுக்கடை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று கீரநல்லூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மதுக்கடையை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அந்த வழியாகதான் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. மதுக்கடையால் அந்த வழியாக செல்லும் பெண்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இது குறித்து ஏற்கனவே காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்திருந்தோம். இருப்பினும் அரசு மதுபான கடை மண்டல மேலாளர் இதற்கு அனுமதி அளித்துள்ளதாக கூறினர்.
உத்திரமேரூர் அருகே கிணற்றில் துணி துவைக்க சென்ற பெண் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் பேரூராட்சி வேடபாளையத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 39). திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று மாலை மகேஸ்வரி வயலில் உள்ள கிணற்றில் துணி துவைப்பதற்காக சென்றார்.
அப்போது கால் வழுக்கி திடீரென கிணற்றில் விழுந்தவர் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கினார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டத்தில் அமைக்கப்படும் 1292 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியலை வெளியிட்டார்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டத்தில் அமைக்கப்படும் 1292 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியலை வெளியிட்டார்.
இதுதொடர்பாக கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக வளர்ச்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராம ஊராட்சிகளில் வார்டு வாரியாக அமைக்கப்பட இருக்கும் 1,292 வாக்குச் சாவடிகளின் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இது பொதுமக்களின் தகவலுக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு) மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் 7.8.2021க்குள் அதன் விவரத்தினை அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்கான அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களான வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சிகளிடம் எழுத்துப்பூர்வமாகவும், மேலும் 7.8.2021 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுக்காக நடைபெறும் கூட்டத்திலும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டத்தில் அமைக்கப்படும் 1292 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியலை வெளியிட்டார்.
இதுதொடர்பாக கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக வளர்ச்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராம ஊராட்சிகளில் வார்டு வாரியாக அமைக்கப்பட இருக்கும் 1,292 வாக்குச் சாவடிகளின் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இது பொதுமக்களின் தகவலுக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு) மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் 7.8.2021க்குள் அதன் விவரத்தினை அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்கான அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களான வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சிகளிடம் எழுத்துப்பூர்வமாகவும், மேலும் 7.8.2021 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுக்காக நடைபெறும் கூட்டத்திலும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சப்தமாதர்கள் சிற்பத்தொகுப்பு கண்டெடுக்கப்பட்டது.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கிராமத்தில் சோழர் காலத்தை சேர்ந்த 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய எழுவர் அன்னையர் எனப்படும் சப்தமாதர்கள் சிற்பத்தொகுப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் கொற்றவை ஆதன் தலைமையில் அனுமந்தண்டலம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட போது அணைக்கட்டு செல்லும் சாலையில் இந்த சிற்பத்தொகுப்பு கண்டெடுக்கப்பட்டது.இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறுகையில்:-
நாங்கள் கண்டெடுத்த இந்த சிற்பத்தொகுப்பானது ஒரே பலகைக்கல்லில் 1½ அடி உயரம், 4½ அடி நீளம் கொண்ட எழுவர் அன்னை எனப்படும் சப்த மாதர்கள் தொகுப்பு ஆகும்.
இவர்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமர்ந்த நிலையில் இரு கரங்களுடன் இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டபடி காணப்படுகிறார்கள். முதலில் பிராமியும், 2-வதாக மகேஸ்வரியும் 3-வதாக கவுமாரியும் 4-வதாக வைஷ்ணவியும் 5-வதாக வராகியும் 6-வதாக இந்திராணியும், 7-வதாக சாமுண்டியும் அவரவர்களுக்குரிய ஆயுதங்கள், சின்னங்கள் மற்றும் அணிகலன்களுடன் காட்சியளிக்கிறார்கள்.
பொதுவாக இவர்களுடன் கணபதி மற்றும் வீரபத்திரர் இருப்பார்கள். ஆனால் இங்கு அவர்கள் காணப்படவில்லை. இவ்வூர் மக்கள் இதை அலையாத்தி அம்மன் என்கிறார்கள். ஆனால் இது எழுவர் அன்னையர் எனப்படும் சப்தமாதர்கள் ஆகும்.
இது தாய்த்தெய்வ வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கமாகும். உலகெங்கிலும் தாய் தெய்வ வழிபாடு என்பது நீக்கமற நிறைந்துள்ளது.
வளமையின் அடையாளமாக வேளாண்மை செழிக்க, செல்வ வளம் பெருக, குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ, வெற்றியின் அடையாளமாக மன்னர்கள் நாட்டை வென்றிட இன்ன பிற நன்மைகள் வேண்டி மன்னர் முதல் மக்கள் வரை வழிபட்டது தாய்வழி வழிபாடாகும்.
இதன் முதல் வழிபாடாக முக்கியத்துவம் வாய்ந்த வழிபாடாக இந்த எழுவர் அன்னையர் வழிபாடு உள்ளது. பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் வரை சிறந்த வழிபாடாக இந்த எழுவர் கன்னியர் வழிபாடு தொடர்கிறது. காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவிலில் இந்த சிற்பங்கள் இன்றைக்கும் காட்சியளிக்கின்றன. சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, திருமந்திரம் போன்ற நூல்களில் எழுவர் அன்னையர் வழிபாடு குறித்த குறிப்புகள் காண கிடைக்கின்றன. கி.பி. 6-ம் நூற்றாண்டில் பிருகத்சம்கிதை என்ற நூலில் எழுவர் அன்னையர் தோற்றம் குறித்த குறிப்புகள் உள்ளது.
நாங்கள் கண்டெடுத்த இந்த புடைப்பு சிற்பதொகுப்பானது சோழர் காலத்தை சேர்ந்த 1,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும்.
கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு பறைசாற்றும் அடையாளமாக விளங்கி கொண்டிருக்கும் இந்த பக்தி வரலாற்று கலைபொக்கிஷங்களை பாதுகாப்பது நம் கடமையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலைகள் மற்றும் பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள். இவர்கள் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலைகளை செய்தனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக சென்று கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்தது.
இதன்காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்காக செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் தேங்கிக்கிடக்கின்றன. இதனால் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலைகள் மற்றும் பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு 25 தொழிற்கூடங்களும் உள்ளன. இவர்கள் கடந்த ஆண்டு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் வைத்து வழிபட விநாயகர் சிலைகளை செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.5 கோடி மதிப்புள்ள ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் லட்சக்கணக்கிலான விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேங்கின.
இந்த சிலைகள் மற்றும் பொம்மைகள் பல இடங்களில் மழை நீரால் சேதம் அடைந்தன. இதனால் இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடைபெறவில்லை. இதனால் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
இதுகுறித்து சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறியதாவது:-
ஆண்டு முழுவதும் தொழில் செய்தாலும் எங்களால் விநாயகர் சதுர்த்தியின்போது மட்டுமே வருமானம் ஈட்டமுடியும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது தனிநபர்கள், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விநாயகர் சதுர்த்தி விழா நடத்தும் அமைப்பினர் பொது இடங்களில் கொரோனா விதிகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் வைக்கவும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும்.
ஏற்கனவே சிலைகள் தேங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கிடைக்குமா? என்பது தெரியாமல் சிலைகளை தயாரிக்காமல் உள்ளோம். தற்போது தலைவர்களின் சிலைகள், நவராத்திரி கொலு பொம்மைகளை தயாரிக்கும் பணிகளில் மட்டும் ஈடுபட்டுள்ளோம். இதையும் விற்பனை செய்ய போதிய வாய்ப்புகள் இல்லாமல் அவதிப்படுகிறோம். சிலைகளை விற்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதுடன் கொரோனா விதிகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி கூறுகையில், ‘கொரோனா 3-வது அலை பரவினால் மக்கள் கூட்டம் கூடும் நிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்குவது குறித்து சூழ் நிலைக்கு ஏற்றவாறு அரசு தான் கொள்கை முடிவு எடுக்கும்.
பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பட அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம். அவர்கள் செய்யும் பொம்மைகளை மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கைவினை பொருட்களாக விற்பனை செய்ய அந்த துறை செயலாளரிடம் பேசியுள்ளேன். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் பொம்மைகளை விற்பனை செய்ய இடம் ஒதுக்கி தருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்றார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள். இவர்கள் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலைகளை செய்தனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக சென்று கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்தது.
இதன்காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்காக செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் தேங்கிக்கிடக்கின்றன. இதனால் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலைகள் மற்றும் பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு 25 தொழிற்கூடங்களும் உள்ளன. இவர்கள் கடந்த ஆண்டு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் வைத்து வழிபட விநாயகர் சிலைகளை செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.5 கோடி மதிப்புள்ள ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் லட்சக்கணக்கிலான விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேங்கின.
இந்த சிலைகள் மற்றும் பொம்மைகள் பல இடங்களில் மழை நீரால் சேதம் அடைந்தன. இதனால் இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடைபெறவில்லை. இதனால் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
இதுகுறித்து சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறியதாவது:-
ஆண்டு முழுவதும் தொழில் செய்தாலும் எங்களால் விநாயகர் சதுர்த்தியின்போது மட்டுமே வருமானம் ஈட்டமுடியும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது தனிநபர்கள், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விநாயகர் சதுர்த்தி விழா நடத்தும் அமைப்பினர் பொது இடங்களில் கொரோனா விதிகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் வைக்கவும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும்.
ஏற்கனவே சிலைகள் தேங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கிடைக்குமா? என்பது தெரியாமல் சிலைகளை தயாரிக்காமல் உள்ளோம். தற்போது தலைவர்களின் சிலைகள், நவராத்திரி கொலு பொம்மைகளை தயாரிக்கும் பணிகளில் மட்டும் ஈடுபட்டுள்ளோம். இதையும் விற்பனை செய்ய போதிய வாய்ப்புகள் இல்லாமல் அவதிப்படுகிறோம். சிலைகளை விற்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதுடன் கொரோனா விதிகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி கூறுகையில், ‘கொரோனா 3-வது அலை பரவினால் மக்கள் கூட்டம் கூடும் நிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்குவது குறித்து சூழ் நிலைக்கு ஏற்றவாறு அரசு தான் கொள்கை முடிவு எடுக்கும்.
பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பட அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம். அவர்கள் செய்யும் பொம்மைகளை மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கைவினை பொருட்களாக விற்பனை செய்ய அந்த துறை செயலாளரிடம் பேசியுள்ளேன். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் பொம்மைகளை விற்பனை செய்ய இடம் ஒதுக்கி தருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்றார்.
கள்ளக்காதல் விவகாரத்தில் பாட்டிலால் குத்தி வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த சதாவரம் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி ஷீலா (வயது 37) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஷீலாவுக்கும் காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த கோணி வியாபாரி கனகராஜ் (47) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக தெரிகிறது.
வரதன் பலமுறை எடுத்துக்கூறியும் ஷீலா கள்ளக்காதலை விடுவதாக இல்லை, இதனால் வரதன் தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு தேனம்பாக்கம் பகுதியில் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்த ஷீலாவின் தம்பி ராஜீவ்காந்தி என்ற டோரி (30), தனது நண்பரான உதயமாங்குளத்தை சேர்ந்த உதயகுமார் என்ற உதயா (31) என்பவருடன் சேர்ந்து சகோதரியின் கள்ளக்காதலன் கனகராஜை தீர்த்து கட்ட திட்டமிட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ராஜிவ்காந்தி, உதயா, கனகராஜ் ஆகியோர் ஒன்றாக மது குடித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜிவ்காந்தி நண்பர் உதயாவுடன் சேர்ந்து பீர் பாட்டிலை உடைத்து கனகராஜை கழுத்து உள்ளிட்ட பல பகுதியில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின்னர் அருகில் இருந்த அம்மிக்கல்லால் கனகராஜ் முகத்தை சிதைத்து விட்டு தப்பிச்சென்று விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் மேற்பார்வையில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காஞ்சீபுரத்தின் பல்வேறு பகுதிகளில் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஓரிக்கை மேம்பாலம் அருகே பதுங்கியிருந்த ராஜீவ்காந்தி, உதயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த சதாவரம் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி ஷீலா (வயது 37) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஷீலாவுக்கும் காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த கோணி வியாபாரி கனகராஜ் (47) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக தெரிகிறது.
வரதன் பலமுறை எடுத்துக்கூறியும் ஷீலா கள்ளக்காதலை விடுவதாக இல்லை, இதனால் வரதன் தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு தேனம்பாக்கம் பகுதியில் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்த ஷீலாவின் தம்பி ராஜீவ்காந்தி என்ற டோரி (30), தனது நண்பரான உதயமாங்குளத்தை சேர்ந்த உதயகுமார் என்ற உதயா (31) என்பவருடன் சேர்ந்து சகோதரியின் கள்ளக்காதலன் கனகராஜை தீர்த்து கட்ட திட்டமிட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ராஜிவ்காந்தி, உதயா, கனகராஜ் ஆகியோர் ஒன்றாக மது குடித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜிவ்காந்தி நண்பர் உதயாவுடன் சேர்ந்து பீர் பாட்டிலை உடைத்து கனகராஜை கழுத்து உள்ளிட்ட பல பகுதியில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின்னர் அருகில் இருந்த அம்மிக்கல்லால் கனகராஜ் முகத்தை சிதைத்து விட்டு தப்பிச்சென்று விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் மேற்பார்வையில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காஞ்சீபுரத்தின் பல்வேறு பகுதிகளில் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஓரிக்கை மேம்பாலம் அருகே பதுங்கியிருந்த ராஜீவ்காந்தி, உதயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொரோனா பெருந்தொற்றுப் பரவலை தவிர்க்கும் நோக்கில் காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் கலெக்டர் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
காஞ்சிபுரம்:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 31-ந் தேதியன்று கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார வார துவக்க விழாவை சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கொரோனா விழிப்புணர்வு மாபெரும் கையெழுத்து இயக்க பதாகையில் கையெழுத்திட்டு, பொதுமக்களுக்கு முக கவசங்கள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களையும் கபசுர குடிநீரும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடம் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம், கிருமி நாசினி மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருக்கும் முறையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதன் பின்னர் அவர் பொதுமக்களுக்கு கட்டாயம் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், பொது இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்த்தல், போன்ற அரசு அறிவித்த கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 31-ந் தேதியன்று கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார வார துவக்க விழாவை சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கொரோனா விழிப்புணர்வு மாபெரும் கையெழுத்து இயக்க பதாகையில் கையெழுத்திட்டு, பொதுமக்களுக்கு முக கவசங்கள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களையும் கபசுர குடிநீரும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடம் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம், கிருமி நாசினி மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருக்கும் முறையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதன் பின்னர் அவர் பொதுமக்களுக்கு கட்டாயம் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், பொது இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்த்தல், போன்ற அரசு அறிவித்த கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பணப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வெள்ளகொண்டான் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் சிவகாமி நாதன் (வயது 22) இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் தங்கியிருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் படப்பையில் இருந்து ஒரகடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பணப்பாக்கம் அருகே செல்லும் போது நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சிவகாமிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
படப்பை அருகே வழிப்பறி வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை டேவிட் நகர் பகுதியை சேர்ந்தவர் அமனுல்லா (வயது 22). இவர் மீது மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்குகள் இருந்து வந்த நிலையில் இவரை பிடிக்க மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் படப்பை அருகே பதுங்கி இருந்த அமனுல்லாவை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மதூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (56). இவருக்கு சங்கரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
மதூர் கிராமத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த இவர், தற்போது காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. விவசாயிகளின் அணி துணை அமைப்பாளராக உள்ளார்.
குழந்தைகள் படிப்புக்காக வாலாஜாபாத் பகுதியில் வீடு எடுத்து குடும்பத்துடன் அங்கு தங்கி இருக்கிறார். நேற்று இரவு இவர் வாலாஜாபாத்தில் இருந்து சொந்த கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இரவு 11 மணியளவில் மதூர் கிராமம் அருகே சென்ற போது ஒரு கும்பல் சண்முகத்தை வழிமறித்தது. திடீரென்று அவர்கள் இரும்புக் கம்பியால் அவரை சரமாரியாக தாக்கினார்கள். அவர் அலறி துடித்தார்.
இதற்குள் அவரை தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த சண்முகம் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி சங்கரி தாளவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
சண்முகம் மதூர் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். அந்த பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. தற்போது புதிதாக ஒரு கல்குவாரி தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த கல்குவாரி தொடங்க சண்முகம்தான் காரணம் என்று சிலர் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மதூர் கிராமம் பகுதியைச் சேர்ந்த 6 பேரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றார்கள். விரைவில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மதூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (56). இவருக்கு சங்கரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
மதூர் கிராமத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த இவர், தற்போது காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. விவசாயிகளின் அணி துணை அமைப்பாளராக உள்ளார்.
குழந்தைகள் படிப்புக்காக வாலாஜாபாத் பகுதியில் வீடு எடுத்து குடும்பத்துடன் அங்கு தங்கி இருக்கிறார். நேற்று இரவு இவர் வாலாஜாபாத்தில் இருந்து சொந்த கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இரவு 11 மணியளவில் மதூர் கிராமம் அருகே சென்ற போது ஒரு கும்பல் சண்முகத்தை வழிமறித்தது. திடீரென்று அவர்கள் இரும்புக் கம்பியால் அவரை சரமாரியாக தாக்கினார்கள். அவர் அலறி துடித்தார்.
இதற்குள் அவரை தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த சண்முகம் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி சங்கரி தாளவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
சண்முகம் மதூர் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். அந்த பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. தற்போது புதிதாக ஒரு கல்குவாரி தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த கல்குவாரி தொடங்க சண்முகம்தான் காரணம் என்று சிலர் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மதூர் கிராமம் பகுதியைச் சேர்ந்த 6 பேரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றார்கள். விரைவில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.






