என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,292 வாக்குச்சாவடி வரைவு பட்டியல்- கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டார்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டத்தில் அமைக்கப்படும் 1292 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியலை வெளியிட்டார்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டத்தில் அமைக்கப்படும் 1292 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியலை வெளியிட்டார்.
இதுதொடர்பாக கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக வளர்ச்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராம ஊராட்சிகளில் வார்டு வாரியாக அமைக்கப்பட இருக்கும் 1,292 வாக்குச் சாவடிகளின் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இது பொதுமக்களின் தகவலுக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு) மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் 7.8.2021க்குள் அதன் விவரத்தினை அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்கான அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களான வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சிகளிடம் எழுத்துப்பூர்வமாகவும், மேலும் 7.8.2021 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுக்காக நடைபெறும் கூட்டத்திலும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டத்தில் அமைக்கப்படும் 1292 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியலை வெளியிட்டார்.
இதுதொடர்பாக கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக வளர்ச்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராம ஊராட்சிகளில் வார்டு வாரியாக அமைக்கப்பட இருக்கும் 1,292 வாக்குச் சாவடிகளின் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இது பொதுமக்களின் தகவலுக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு) மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் 7.8.2021க்குள் அதன் விவரத்தினை அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்கான அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களான வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சிகளிடம் எழுத்துப்பூர்வமாகவும், மேலும் 7.8.2021 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுக்காக நடைபெறும் கூட்டத்திலும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






