என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு- கலெக்டர் பங்கேற்பு
Byமாலை மலர்3 Aug 2021 10:59 AM GMT (Updated: 3 Aug 2021 10:59 AM GMT)
கொரோனா பெருந்தொற்றுப் பரவலை தவிர்க்கும் நோக்கில் காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் கலெக்டர் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
காஞ்சிபுரம்:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 31-ந் தேதியன்று கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார வார துவக்க விழாவை சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கொரோனா விழிப்புணர்வு மாபெரும் கையெழுத்து இயக்க பதாகையில் கையெழுத்திட்டு, பொதுமக்களுக்கு முக கவசங்கள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களையும் கபசுர குடிநீரும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடம் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம், கிருமி நாசினி மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருக்கும் முறையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதன் பின்னர் அவர் பொதுமக்களுக்கு கட்டாயம் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், பொது இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்த்தல், போன்ற அரசு அறிவித்த கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 31-ந் தேதியன்று கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார வார துவக்க விழாவை சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கொரோனா விழிப்புணர்வு மாபெரும் கையெழுத்து இயக்க பதாகையில் கையெழுத்திட்டு, பொதுமக்களுக்கு முக கவசங்கள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களையும் கபசுர குடிநீரும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடம் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம், கிருமி நாசினி மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருக்கும் முறையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதன் பின்னர் அவர் பொதுமக்களுக்கு கட்டாயம் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், பொது இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்த்தல், போன்ற அரசு அறிவித்த கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X