என் மலர்
செய்திகள்

கொலை
உத்திரமேரூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அடித்து கொலை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மதூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (56). இவருக்கு சங்கரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
மதூர் கிராமத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த இவர், தற்போது காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. விவசாயிகளின் அணி துணை அமைப்பாளராக உள்ளார்.
குழந்தைகள் படிப்புக்காக வாலாஜாபாத் பகுதியில் வீடு எடுத்து குடும்பத்துடன் அங்கு தங்கி இருக்கிறார். நேற்று இரவு இவர் வாலாஜாபாத்தில் இருந்து சொந்த கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இரவு 11 மணியளவில் மதூர் கிராமம் அருகே சென்ற போது ஒரு கும்பல் சண்முகத்தை வழிமறித்தது. திடீரென்று அவர்கள் இரும்புக் கம்பியால் அவரை சரமாரியாக தாக்கினார்கள். அவர் அலறி துடித்தார்.
இதற்குள் அவரை தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த சண்முகம் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி சங்கரி தாளவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
சண்முகம் மதூர் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். அந்த பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. தற்போது புதிதாக ஒரு கல்குவாரி தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த கல்குவாரி தொடங்க சண்முகம்தான் காரணம் என்று சிலர் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மதூர் கிராமம் பகுதியைச் சேர்ந்த 6 பேரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றார்கள். விரைவில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மதூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (56). இவருக்கு சங்கரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
மதூர் கிராமத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த இவர், தற்போது காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. விவசாயிகளின் அணி துணை அமைப்பாளராக உள்ளார்.
குழந்தைகள் படிப்புக்காக வாலாஜாபாத் பகுதியில் வீடு எடுத்து குடும்பத்துடன் அங்கு தங்கி இருக்கிறார். நேற்று இரவு இவர் வாலாஜாபாத்தில் இருந்து சொந்த கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இரவு 11 மணியளவில் மதூர் கிராமம் அருகே சென்ற போது ஒரு கும்பல் சண்முகத்தை வழிமறித்தது. திடீரென்று அவர்கள் இரும்புக் கம்பியால் அவரை சரமாரியாக தாக்கினார்கள். அவர் அலறி துடித்தார்.
இதற்குள் அவரை தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த சண்முகம் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி சங்கரி தாளவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
சண்முகம் மதூர் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். அந்த பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. தற்போது புதிதாக ஒரு கல்குவாரி தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த கல்குவாரி தொடங்க சண்முகம்தான் காரணம் என்று சிலர் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மதூர் கிராமம் பகுதியைச் சேர்ந்த 6 பேரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றார்கள். விரைவில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
Next Story






