என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் அருகே மூட்டை தூக்கும் தொழிலாளியை மர்ம நபர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த விப்பேடு பள்ளிக்கூடம் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 25). இவர் அங்குள்ள ஒரு தனியார் அரிசி ஆலையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் பிரேம்குமார் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சென்றார். இரவு 11 மணி அளவில் பிரேம்குமாரை மர்ம கும்பல் அவரது தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதியில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றது. இதில் பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் தாலுகா போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த கொலை வழக்கு முன்விரோதம் சம்பந்தமாக நடந்துள்ளதாக தெரிய வருகிறது. விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குற்ற வழக்குகளில் தொடர்புடையவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தியதிற்கிணங்க காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவரான காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தை அடுத்த நேரு நகரை சேர்ந்த துரைபாபு (30) தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தினார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தினார். இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தாலுகா ஜெயராமன் (வயது24), வெங்கடேசன் (22), கார்த்தி என்ற கார்த்திகேயன் (29), கோபு (36), வெங்கடேசன் (38), வேல்முருகன் (27), ராஜேஷ் (38) ஆகியோரை ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேண்டுகோளின்படி ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. ஒரு ஆண்டுக்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்தார்.
நில அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டார்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா களக்காட்டூர் அடுத்த வேடல் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவர் மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி தலைவராக உள்ளார். இவர் தனக்கும் தனது தம்பிக்கும் சொத்தை பிரித்து கொள்வது சம்பந்தமாக நிலத்தை அளவீடு செய்து தரும்படி வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் கடந்த 2019- ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக நில அளவை தடை ஏற்பட்டது
சரவணன் பலமுறை வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கு நில அளவையராக பணிபுரியும் இந்துமதி (வயது 35) என்பவரை சந்தித்து இது குறித்து கேட்டு வந்தார்.
நில அளவையர் இந்துமதி பல்வேறு காரணங்களை கூறி தவிர்த்து வந்தார். இந்த நிலையில் சரவணன் தனது நண்பர் மூலம் இந்துமதியிடம் பேசியபோது பணியை முடித்து கொடுக்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் இந்துமதியை சந்தித்த சரவணனிடம் முதல் தவணையாக ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக தனது உதவியாளர் சுதன் (26) என்பவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.
லஞ்சம் கேட்பது குறித்து சரவணன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் சரவணன், இந்துமதியை சந்தித்து லஞ்சப்பணம் ரூ.10 ஆயிரத்தை அளித்தார். அதனை தனது உதவியாளர் சுதனிடம் இந்துமதி அளித்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக இந்துமதியையும், அவரது உதவியாளரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா களக்காட்டூர் அடுத்த வேடல் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவர் மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி தலைவராக உள்ளார். இவர் தனக்கும் தனது தம்பிக்கும் சொத்தை பிரித்து கொள்வது சம்பந்தமாக நிலத்தை அளவீடு செய்து தரும்படி வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் கடந்த 2019- ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக நில அளவை தடை ஏற்பட்டது
சரவணன் பலமுறை வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கு நில அளவையராக பணிபுரியும் இந்துமதி (வயது 35) என்பவரை சந்தித்து இது குறித்து கேட்டு வந்தார்.
நில அளவையர் இந்துமதி பல்வேறு காரணங்களை கூறி தவிர்த்து வந்தார். இந்த நிலையில் சரவணன் தனது நண்பர் மூலம் இந்துமதியிடம் பேசியபோது பணியை முடித்து கொடுக்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் இந்துமதியை சந்தித்த சரவணனிடம் முதல் தவணையாக ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக தனது உதவியாளர் சுதன் (26) என்பவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.
லஞ்சம் கேட்பது குறித்து சரவணன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் சரவணன், இந்துமதியை சந்தித்து லஞ்சப்பணம் ரூ.10 ஆயிரத்தை அளித்தார். அதனை தனது உதவியாளர் சுதனிடம் இந்துமதி அளித்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக இந்துமதியையும், அவரது உதவியாளரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
படப்பை குணாவை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து சிறையில் அடைத்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவை பெற்று சென்று அடியாட்களை விட்டு மிரட்டியதாக படப்பை குணா மீது சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், ரவுடி படப்பை குணா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த படப்பை குணாவை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து சிறையில் அடைத்தார்.
படப்பை குணா மீது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி என 24 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவை பெற்று சென்று அடியாட்களை விட்டு மிரட்டியதாக படப்பை குணா மீது சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், ரவுடி படப்பை குணா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த படப்பை குணாவை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து சிறையில் அடைத்தார்.
படப்பை குணா மீது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி என 24 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சீபுரம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். வாலாஜாபாத் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருக்குப்பேட்டை கிராமத்தில் சூதாட்டம் நடந்து வருவதாக வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் கருக்குப்பேட்டை பகுதியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏகனாம்பேட்டை கிராமம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவகுமார் (வயது 31) என்பவரை கைது செய்தனர்.
குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர் தானும் தற்கொலைக்கு முயன்றார்.
வாலாஜாபாத்:
நெல்லை மாவட்டம் சிவகிரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 27). இவரும் நெல்லை மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த அனு (21) என்பவரும் காதலித்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பாலமுருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பதும், தன்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டதும் அனுவுக்கு தெரியவந்தது. மேலும் பாலமுருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்து வந்தார்.
இதன் காரணமாக குடும்பம் நடத்த முடியாமல் அனுவுக்கும், பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் அனு பாலமுருகனை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
அனு தனக்கும், தன் குழந்தைக்கும் பிழைக்க வருமானம் வேண்டி வேலை தேடிய நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. வேலைக்கு செல்வதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கைக்குழந்தையை தாயின் வீட்டில் விட்டுவிட்டு ஒரகடம் வந்தார்.
தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் செயல்பட்டுவரும் தொழிற்சாலையின் பெண்கள் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இதை அறிந்து கொண்ட கணவர் பாலமுருகன் புளியம்பாக்கத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்து மனைவியை வெளியே அழைத்து சமாதானம் செய்ய முயன்றார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென அனுவின் கழுத்தை சரமாரியாக அறுத்து விட்டு தானும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார். கழுத்து அறுபட்ட அனு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உடனடியாக தங்கும் விடுதி காவலர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகனம் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வேர்க்கடலை வியாபாரம் செய்து வந்தார். நேற்று ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடி அருகே மணிகண்டன் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டன் மீது மோதி நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பாலியனார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
படப்பை அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
உத்தரபிரதேசம் மாநிலம் மிர்ஜாபூர் ராஜ்கார் பகுதியை சேர்ந்தவர் மவுனித்குமார். இவருடைய மகன் அபிநய் (வயது 20). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகா படப்பை அடுத்த எருமையூர் பகுதியில் உள்ள எம்.சேண்ட் கிரஷரில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். இதே கிரஷரில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் (18) என்பவரும் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பிரசாந்த் அருகில் உள்ள தொழிலாளர்கள் தங்கியிருக்கும் அறைக்கு சென்று உணவு சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தார். அப்போது அபிநய் எந்திர கன்வேயர் பெல்ட்டுக்கு கீழ் உள்ள நீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்து கிடந்தார். இதை பார்த்த பிரசாந்த் அவரை தூக்க அருகில் சென்ற போது மின்கசிவு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு ஓடிச்சென்று மற்ற தொழிலாளர்களை அழைத்து வந்தார். பின்னர் மின் இணைப்பை துண்டித்து அபிநய்யை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அபிநய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்று உடலை எரித்த மனைவி போலீசில் சரண் அடைந்தார்.
படப்பை:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 44). இவருடைய மனைவி விமலா ராணி (35). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 14 வயதில் மகன் உள்ளார். இவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள ஆத்தனஞ்சேரி பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தனர்.
தங்கவேல் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 31 -ந்தேதி தங்கவேலின் தந்தை திருமலையாண்டி (70) மற்றும் சகோதரர் சக்திவேல் (47) ஆகியோர் தங்கவேலின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது தங்கவேலின் மனைவி போனை எடுத்து சரியான பதில் கூறாமல் போனை வைத்துள்ளார். அதன் பின்னர் சக்திவேலின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த தங்கவேலின் தந்தை திருமலையாண்டி, மகன் சக்திவேல் மற்றும் உறவினர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஆத்தனஞ்சேரி பகுதியில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளனர்.
அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டில் தங்கவேல், அவருடைய மனைவி, மகன் ஆகியோர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் மகன் தங்கவேல், மருமகள், பேரன் மாயமானதாக தங்கவேலின் தந்தை திருமலையாண்டி புகார் செய்தார். மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கவேலின் மனைவி விமலா ராணி மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து விமலா ராணியை போலீசார் கைது செய்தனர்.
பின்பு விசாரணையில் விமலா ராணி கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-
விமலா ராணிக்கும் அவருடைய கணவருக்கும் கடந்த மாதம் 28-ந் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கணவரின் கழுத்தை வெட்டி கொன்று சேலத்தை சேர்ந்த கள்ளக்காதலன் ராஜா என்பவருடன் அச்சரப்பாக்கம் அருகே வனப்பகுதியில் உடலை எரித்துள்ளார்.
விமலா ராணிக்கும் சேலம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் இந்த கொலை நடந்துள்ளது.
கடந்த 2-ந்தேதி அச்சரப்பாக்கம் அருகே எரிந்த நிலையில் கரிக்கட்டையாக உடல் கண்டெடுக்கப்பட்டது. அது தங்கவேலின் உடலா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து ராஜா மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம் அருகே கொடுத்த நகையை திருப்பி தராததால் நிலத்தரகரை கொல்ல முயன்ற நண்பர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த சந்தவேலூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 40). நிலத்தரகராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் காமராஜர் நகரை சேர்ந்த சிவராஜ் (32). இவரிடம் அவசர தேவைக்காக அய்யப்பன் 5 பவுன் நகையை வாங்கியுள்ளார்.
இதனை சிவராஜ் பலமுறை கேட்டும் கொடுக்காததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் அய்யப்பன் காஞ்சீபுரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்க நகையை வாங்கி்கொண்டு வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஓட்டிவந்த சிவராஜ், அய்யப்பன் மீது வேண்டுமென்றே மோதி விபத்து ஏற்படுத்தி பின்னர் ஆம்புலன்சில் வைத்திருந்த கட்டையால் அய்யப்பனை தலை மற்றும் வலது கையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அய்யப்பன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அய்யப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரகடம் அருகே விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மலைப்பட்டு பாலகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 26). இவர் ஒரகடம் பகுதியில் உள்ள நண்பரை பார்க்க நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வல்லம் சந்திப்பு அருகே செல்லும் போது, எதிரே வந்த மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கார்த்திக்கும், மொபட்டில் வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த டிசோதிப் மெஹந்தி (38), ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






