என் மலர்
காஞ்சிபுரம்
அரசு உத்தரவின்படி கோவாக்சின் தடுப்பூசி முதல் தவணை செலுத்தி கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை தடுப்பூசியை தவறாமல் செலுத்தி கொள்ளவேண்டும்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு தற்போது கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. கொரோனா நோய்த்தொற்று மீண்டும் பரவாமல் இருக்க அரசால் அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகள் தீவிரமாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.மேலும் ஒவ்வொரு தனி நபரும் கொரோனா நோயால் பாதிக்கப்படாமல் இருக்க நமக்குள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. நமது மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதலில் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு ஆரம்பித்து 60 வயதுக்கு மேற்பட்டோர். 18 வயதிற்கு மேற்பட்டோர் என படிப்படியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், தொற்றாநோய் பாதிப்புடையோர் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 1,824 நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 2 தவணைகளும் செலுத்தி கொண்டவர்கள் 50 ஆயிரத்து 146 பேர் ஆவர். கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 2 தவணை தடுப்பூசிகள் போட்டு கொண்டவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.
2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே 90 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். முதல் தவணை தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவான அளவிலேயே கிடைக்கும். எனவே அனைவரும் 2 தவணை தடுப்பூசிகளை தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் என நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
அரசு உத்தரவின்படி கோவாக்சின் தடுப்பூசி முதல் தவணை செலுத்தி கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை தடுப்பூசியை தவறாமல் செலுத்தி கொள்ளவேண்டும். தற்சமயம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாம்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே முதல் தவணை கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 84 நாட்களுக்கு பிறகு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆரம்ப சுகாதாரநிலையம் அல்லது சிறப்பு மருத்துவ முகாம்களில் தவறாமல் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்.
பொதுமக்களின் வசதிக்கேற்ப தடுப்பூசி செலுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் அனைத்து நாட்களிலும் இலவசமாக தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட பஸ் நிலையங்கள், காய்கறி சந்தைகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் போன்ற இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். மேற்படி தடுப்பூசி செலுத்தப்படும் சிறப்பு முகாம்களின் விவரங்களை மாவட்ட இணையதளமான www.kancheepuram.nic.in மற்றும் மாவட்ட கலெக்டரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமான @kanchicollector மற்றும் முகநூல் பக்கமான District Collector Kancheepuram போன்றவற்றில் வெளியிடப்படுகிறது.
பொதுமக்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 2 தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், முக கவசம் அணிந்து வெளியே செல்லுமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 40). இவர் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து படப்பை அருகே ஏகாம்பரத்தை மணிமங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சின்ன காஞ்சீபுரத்தில் கடன் தொல்லையால் தி.மு.க. நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம்:
சின்ன காஞ்சீபுரம் நசரத்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 60). முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர். தி.மு.க. நிர்வாகியான இவருக்கு உமா என்ற மனைவி, 3 மகள், ஒரு மகன் உள்ளனர்.
இவர் சொந்தமாக தேங்காய், வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். மேலும் ஆட்டோக்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.
கொரோனா தொற்று காலத்தில் ஆட்டோக்கள் சரி வர இயங்காததால், போதிய வருமானம் இன்றி கடன் தொல்லையால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தார்.
இந்த நிலையில் மனவருத்தத்தில் இருந்து வந்த அவர் வீட்டின் மாடிக்கு சென்று விஷம் குடித்துவிட்டு மாடிப்படி வழியாக கீழே இறங்கும் போது மயக்கம் அடைந்தார்.
இதை பார்த்த கபிலேஷ் தந்தையிடம் கேட்கவே, அவர் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார். உடனடியாக கருணாநிதியை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சின்ன காஞ்சிபுரத்தில் கடன் தொல்லையால் தி.மு.க. நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.
காஞ்சிபுரம்:
சின்ன காஞ்சிபுரம் நசரத்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 60). முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர். தி.மு.க. நிர்வாகியான இவருக்கு உமா என்ற மனைவி, 3 மகள், ஒரு மகன் உள்ளனர்.
இவர் சொந்தமாக தேங்காய், வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். மேலும் ஆட்டோக்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.
கொரோனா தொற்று காலத்தில் ஆட்டோக்கள் சரி வர இயங்காததால், போதிய வருமானம் இன்றி கடன் தொல்லையால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தார்.
இந்த நிலையில் மனவருத்தத்தில் இருந்து வந்த அவர் வீட்டின் மாடிக்கு சென்று விஷம் குடித்துவிட்டு மாடிப்படி வழியாக கீழே இறங்கும்போது மயக்கம் அடைந்தார்.
இதை பார்த்த கபிலேஷ் தந்தையிடம் கேட்கவே, அவர் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார். உடனடியாக கருணாநிதியை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சின்ன காஞ்சிபுரம் நசரத்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 60). முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர். தி.மு.க. நிர்வாகியான இவருக்கு உமா என்ற மனைவி, 3 மகள், ஒரு மகன் உள்ளனர்.
இவர் சொந்தமாக தேங்காய், வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். மேலும் ஆட்டோக்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.
கொரோனா தொற்று காலத்தில் ஆட்டோக்கள் சரி வர இயங்காததால், போதிய வருமானம் இன்றி கடன் தொல்லையால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தார்.
இந்த நிலையில் மனவருத்தத்தில் இருந்து வந்த அவர் வீட்டின் மாடிக்கு சென்று விஷம் குடித்துவிட்டு மாடிப்படி வழியாக கீழே இறங்கும்போது மயக்கம் அடைந்தார்.
இதை பார்த்த கபிலேஷ் தந்தையிடம் கேட்கவே, அவர் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார். உடனடியாக கருணாநிதியை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அருகே செவிலிமேடு வடிவேல் நகரில் அசோக்குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அசோக்குமார் குடும்பத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் உறவினர் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் பதறியடித்து கொண்டு வீட்டுக்குள் சென்று பீரோவை சோதனை செய்தபோது, அதிலிருந்த 20 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து, காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் ராஜகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வண்டலூர் பூங்காவில் அனைத்து சிங்கங்களும் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளன. பரிசோதனையில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம்:
கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் வண்டலூர் பூங்கா கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நேற்று முதல் பூங்காக்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் வண்டலூர் பூங்காவும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று பூங்கா திறக்கப்படவில்லை. அரசிடம் இருந்து உரிய உத்தரவு கிடைத்ததும் வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வண்டலூர் பூங்காவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்று காரணமாக 9 வயதான நீலா, 12 வயதான பத்மநாபன் ஆகிய 2 சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
மேலும் 9 சிங்கங்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இருந்தது. இதையடுத்து பூங்கா ஊழியர்கள் சிங்கங்களை தனியாக பிரித்து தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
தற்போது அனைத்து சிங்கங்களும் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளன. பரிசோதனையில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பார்வைக்காக இந்த வார இறுதியில் வண்டலூர் பூங்காவை திறக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அப்போது நோய் தொற்றில் இருந்து மீண்ட சிங்கங்களை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்படாது.
இதுதொடர்பாக வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வண்டலூர் பூங்கா இந்த வார இறுதியில் திறக்கப்படும். கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட சிங்கங்களை பார்க்க அனுமதி கிடையாது. சுற்றுலா பயணிகளுக்கு நிலையான வழிகாட்டு முறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
‘சிங்கம் சபாரி’ மூடப்பட்டிருக்கும் விலங்குகளுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. மேலும் காற்றோட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் விலங்குகளின் பாதுகாப்பிற்காகவும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளும் நல்ல நிலையில் உள்ளன. 24 மணி நேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் வண்டலூர் பூங்கா கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நேற்று முதல் பூங்காக்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் வண்டலூர் பூங்காவும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று பூங்கா திறக்கப்படவில்லை. அரசிடம் இருந்து உரிய உத்தரவு கிடைத்ததும் வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வண்டலூர் பூங்காவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்று காரணமாக 9 வயதான நீலா, 12 வயதான பத்மநாபன் ஆகிய 2 சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
மேலும் 9 சிங்கங்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இருந்தது. இதையடுத்து பூங்கா ஊழியர்கள் சிங்கங்களை தனியாக பிரித்து தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
தற்போது அனைத்து சிங்கங்களும் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளன. பரிசோதனையில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பார்வைக்காக இந்த வார இறுதியில் வண்டலூர் பூங்காவை திறக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அப்போது நோய் தொற்றில் இருந்து மீண்ட சிங்கங்களை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்படாது.
இதுதொடர்பாக வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வண்டலூர் பூங்கா இந்த வார இறுதியில் திறக்கப்படும். கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட சிங்கங்களை பார்க்க அனுமதி கிடையாது. சுற்றுலா பயணிகளுக்கு நிலையான வழிகாட்டு முறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
‘சிங்கம் சபாரி’ மூடப்பட்டிருக்கும் விலங்குகளுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. மேலும் காற்றோட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் விலங்குகளின் பாதுகாப்பிற்காகவும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளும் நல்ல நிலையில் உள்ளன. 24 மணி நேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம் அருகே மூட்டை தூக்கும் தொழிலாளியை மர்ம நபர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த விப்பேடு பள்ளிக்கூடம் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 25). இவர் அங்குள்ள ஒரு தனியார் அரிசி ஆலையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் பிரேம்குமார் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சென்றார். இரவு 11 மணி அளவில் பிரேம்குமாரை மர்ம கும்பல் அவரது தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதியில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றது. இதில் பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் தாலுகா போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த கொலை வழக்கு முன்விரோதம் சம்பந்தமாக நடந்துள்ளதாக தெரிய வருகிறது. விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குற்ற வழக்குகளில் தொடர்புடையவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தியதிற்கிணங்க காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவரான காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தை அடுத்த நேரு நகரை சேர்ந்த துரைபாபு (30) தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தினார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தினார். இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தாலுகா ஜெயராமன் (வயது24), வெங்கடேசன் (22), கார்த்தி என்ற கார்த்திகேயன் (29), கோபு (36), வெங்கடேசன் (38), வேல்முருகன் (27), ராஜேஷ் (38) ஆகியோரை ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேண்டுகோளின்படி ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. ஒரு ஆண்டுக்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்தார்.
நில அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டார்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா களக்காட்டூர் அடுத்த வேடல் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவர் மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி தலைவராக உள்ளார். இவர் தனக்கும் தனது தம்பிக்கும் சொத்தை பிரித்து கொள்வது சம்பந்தமாக நிலத்தை அளவீடு செய்து தரும்படி வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் கடந்த 2019- ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக நில அளவை தடை ஏற்பட்டது
சரவணன் பலமுறை வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கு நில அளவையராக பணிபுரியும் இந்துமதி (வயது 35) என்பவரை சந்தித்து இது குறித்து கேட்டு வந்தார்.
நில அளவையர் இந்துமதி பல்வேறு காரணங்களை கூறி தவிர்த்து வந்தார். இந்த நிலையில் சரவணன் தனது நண்பர் மூலம் இந்துமதியிடம் பேசியபோது பணியை முடித்து கொடுக்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் இந்துமதியை சந்தித்த சரவணனிடம் முதல் தவணையாக ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக தனது உதவியாளர் சுதன் (26) என்பவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.
லஞ்சம் கேட்பது குறித்து சரவணன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் சரவணன், இந்துமதியை சந்தித்து லஞ்சப்பணம் ரூ.10 ஆயிரத்தை அளித்தார். அதனை தனது உதவியாளர் சுதனிடம் இந்துமதி அளித்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக இந்துமதியையும், அவரது உதவியாளரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா களக்காட்டூர் அடுத்த வேடல் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவர் மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி தலைவராக உள்ளார். இவர் தனக்கும் தனது தம்பிக்கும் சொத்தை பிரித்து கொள்வது சம்பந்தமாக நிலத்தை அளவீடு செய்து தரும்படி வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் கடந்த 2019- ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக நில அளவை தடை ஏற்பட்டது
சரவணன் பலமுறை வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கு நில அளவையராக பணிபுரியும் இந்துமதி (வயது 35) என்பவரை சந்தித்து இது குறித்து கேட்டு வந்தார்.
நில அளவையர் இந்துமதி பல்வேறு காரணங்களை கூறி தவிர்த்து வந்தார். இந்த நிலையில் சரவணன் தனது நண்பர் மூலம் இந்துமதியிடம் பேசியபோது பணியை முடித்து கொடுக்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் இந்துமதியை சந்தித்த சரவணனிடம் முதல் தவணையாக ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக தனது உதவியாளர் சுதன் (26) என்பவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.
லஞ்சம் கேட்பது குறித்து சரவணன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் சரவணன், இந்துமதியை சந்தித்து லஞ்சப்பணம் ரூ.10 ஆயிரத்தை அளித்தார். அதனை தனது உதவியாளர் சுதனிடம் இந்துமதி அளித்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக இந்துமதியையும், அவரது உதவியாளரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
படப்பை குணாவை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து சிறையில் அடைத்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவை பெற்று சென்று அடியாட்களை விட்டு மிரட்டியதாக படப்பை குணா மீது சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், ரவுடி படப்பை குணா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த படப்பை குணாவை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து சிறையில் அடைத்தார்.
படப்பை குணா மீது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி என 24 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவை பெற்று சென்று அடியாட்களை விட்டு மிரட்டியதாக படப்பை குணா மீது சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், ரவுடி படப்பை குணா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த படப்பை குணாவை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து சிறையில் அடைத்தார்.
படப்பை குணா மீது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி என 24 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சீபுரம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். வாலாஜாபாத் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருக்குப்பேட்டை கிராமத்தில் சூதாட்டம் நடந்து வருவதாக வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் கருக்குப்பேட்டை பகுதியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏகனாம்பேட்டை கிராமம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவகுமார் (வயது 31) என்பவரை கைது செய்தனர்.






