search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் கடத்தல்
    X
    மணல் கடத்தல்

    உத்திரமேரூர் அருகே மணல் கடத்தல்- 2 பேர் கைது

    உத்திரமேரூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் பெருநகர் பகுதியில் லாரிகளில் மணல் கடத்துவதாக பெருநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தண்டரை சேர்ப்பாக்கம் சாலையில் வந்த 2 லாரியை மறித்து சோதனை செய்ததில் லாரியில் அனுமதியின்றி மண் ஏற்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக தண்டரை கிராமத்தை சேர்ந்த ராபின் (வயது 31), பெருநகர் சிங்காள தெருவை சேர்ந்த தவமணி (36) ஆகியோரை போலீசார் கைது செய்து, 2 மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×