என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்19 July 2021 12:08 PM GMT (Updated: 19 July 2021 12:08 PM GMT)
காஞ்சீபுரம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர், வடமங்கலம், சுங்குவார் சத்திரம் அடுத்த கீழ்பொடவூர் போன்ற இடங்களில் மர்மநபர்கள் திருட்டுத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின்பேரில் ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் மேற்பார்வையில், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசாரின் சோதனையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 30), வடமங்கலம் பகுதியை சேர்ந்த மற்றொரு மணிகண்டன் (32), சுங்குவார்சத்திரம் அடுத்த கீழ்பொடவூர் பகுதியை சேர்ந்த கண்ணபிரான் (35) ஆகியோர் திருட்டுத்தனமாக மது விற்றது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 347 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X