search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.60 ஆயிரம் குட்கா பறிமுதல்- 52 பேர் கைது

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.60 ஆயிரம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக போலீசார் 52 பேரை கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காஞ்சீபுரம் சரக காவல் துணை தலைவர் சத்யபிரியா அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின்படி காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான குட்கா போதை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இது சம்பந்தமாக போலீசார் 52 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×