என் மலர்
காஞ்சிபுரம்
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.
தற்போது உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
கடந்த 23-ந் தேதி எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நேற்று தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி பேசினார்.
இன்று காலை எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் சுகுமாரி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சிமன்றத் தலைவர், வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் நூற்றுக்கணக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.
பின்னர் நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஆட்சிக்கு வந்தவுடனேயே வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றார். ஆனால் தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்.
எனவே பொதுமக்கள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மிகவும் விழிப்புணர்வுடன் வாக்களித்து அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்ய வேண்டும்.
அ.தி.மு.க. பொறுப்பாளர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் அ.தி.மு.க. வெற்றிக்காக இரவு- பகல் பாராமல் கடுமையாக உழைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.
9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்றது என்ற செய்தி நமது காதில் விழவேண்டும். அந்த அளவுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த சாவித்திரி மணிகண்டன் (வயது 43) என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து அவரது மாமியார் ஜெயலட்சுமி லோகநாதன் (வயது 61) என்பவரும் போட்டியிடுகிறார்.
காஞ்சீபுரம்:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் இன்று (20-ந் தேதி) முதல் 30-ந் தேதி வரை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், மத்திய அரசை கண்டித்து தங்களது வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. சாலவாக்கத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.
இதில் ஒன்றிய செயலாளர் சாலவாக்கம் குமார், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இதே போல் காஞ்சீபுரத்தை அடுத்த சிறுவேடலில் எம்.பி. ஜி.செல்வம் தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கமலக் கண்ணன் தலைமையில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாபு, நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், திருலோகசந்தர், ராமதாஸ், கருணாகரன், சுரேஷ், சீனு, அஜித் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் பூண்டி ஒன்றியம் நாராயணபுரம் கிராமத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கிளை செயலாளர் கே.வி.எஸ். குபேரன் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.
பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், பழவேற்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் தங்களது வீடுகளில் முன்பாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ், சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், அத்திப்பட்டு ஊராட்சி செயலாளர் எம்.டி.ஜி. கதிர்வேல், பழவேற்காட்டில் முகமது அலவி, மீஞ்சூரில் தமிழ் உதயன், வேம்பாக்கம் மாவட்ட தகவல் தொழில் நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் சீனு, பொன்னேரி நகர இளைஞரணி அமைப்பாளர் தீபன் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் தி.மு.க.வினர் தங்களது வீடுகள் முன்பு மத்திய அரசுக்கு எதிராக கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படியுங்கள்...கர்நாடக மாநிலத்தில் மோடி அலையால் மட்டும் பா.ஜனதா ஜெயிக்கவில்லை - எடியூரப்பா
காஞ்சிபுரம் மகாத்மா காந்திநகர் சலவைத் தொழிலாளி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 32). பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார்.
ஆறுமுகம் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வீட்டில் பெற்றோரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவும் அவர் பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் தூங்க சென்று விட்டார். இந்த நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் ஆறுமுகத்தின் அறை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






