என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்காடி வாக்கம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவரது மகள் பார்வதி (வயது 30). இவர் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி குமாரவேல் என்பவரை திருமணம் செய்து கொண்டு, 6 மாத கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். பார்வதி தனது வாக்காளர் அடையாள அட்டையை பிறந்த ஊரான சிங்காடிவாக்கத்தில் இருந்து உத்திரமேரூர் பகுதிக்கு மாற்றாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தனது பிறந்த ஊரான சிங்காடி வாக்கத்தில் உள்ள தனது ஓட்டை செலுத்துவதற்காக கைக்குழந்தையுடன் வாக்குசாவடி மையத்திற்கு சென்றார். பார்வதி செல்வதற்கு முன்பே அவரது ஓட்டை கள்ள ஓட்டாக மற்றொருவர் பதிவு செய்து விட்டு சென்று விட்டார் என்பது தெரியவந்தது. இதை அறிந்த பார்வதி அதிர்ச்சி அடைந்து வாக்குப்பதிவு மைய அலுவலரிடமும், வேட்பாளர்களின் முகவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து பார்வதி, நடிகர் விஜய் நடித்த சர்க்கார் பட பாணியில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வதியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சர்க்கார் படத்தில் விஜய் ஓட்டை செலுத்தியதை போல 49 பி படிவத்தை பார்வதிக்கு வழங்கி சேலஞ்ச் ஓட்டை பதிவு செய்ய வைத்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் காஞ்சீபுரம் அடுத்த அவலூர் கிராமத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது:-
சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றுவதால் எதுவும் ஆகபோவதில்லை அது வெறும் காகித பேப்பர் தான்.ஆனால் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் நிச்சயம் நிறைவேற்றியாக வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுகின்றது. பா.ம.க. கட்சி அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதற்காகவும், தி.மு.க. என்பதற்காகவும், உருவாக்கப்படவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என உருவாக்கப்பட்ட கட்சி.
அதற்கான நேரம் தான் இது. அனைவரும் ஆட்சிக்கு வந்துவிட்டனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. பல ஆண்டுகளாக உழைத்த ஸ்டாலினும் ஆட்சிக்கு வந்துவிட்டார், ஸ்டாலினின் ஆசை நிறைவேறியது.

அடுத்து ஆட்சி பா.ம.க. ஆட்சி தான் அதற்கான முன்னோட்டம் தான் இந்த தேர்தல்.
10.5 சதவீத இட ஒதுக்கீடு, ஜாதி பிரச்சனையோ, ஓட்டு பிரச்சினையோ, அரசியல் பிரச்சினையும் இல்லை, இது சமூக நீதி பிரச்சனை.
அ.தி.மு.க. ஒரு சட்டம் கொண்டு வந்தால் தி.மு.க. எதிர்க்கும், திமுக ஒரு சட்டம் கொண்டு வந்தால் அ.தி.மு.க. எதிர்க்கும், ஆனால் இந்த சட்டத்திற்கு இரு கட்சிகளும் ஏற்று அமல்படுத்துவதற்கு காரணம் மருத்துவர் ராமதாஸ்.
மாற்றம் என்பது இந்த உள்ளாட்சியில் இருந்து தொடங்கட்டும். இந்த வெற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சிக்கான வெற்றி.
54 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. மாற்றி மாற்றி ஆட்சி அமைத்தது போதும்.
மேலும் கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் கட்சி, அரசியல், தேர்தல், எல்லாவற்றையும் விட உங்கள் உயிர் முக்கியம், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், அனைவரும் தடுப்பூசி கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்...தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
காஞ்சிபுரத்தில் உள்ள யமஹா மோட்டார் என்.டி.டி.எப். பயிற்சி மையம் (ஒய்.என்.டி.சி.) தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் இருந்து 27 மாணவர்கள் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றதாக இந்தியா யமஹா மோட்டார் (ஐ.வை.எம்.) இன்று அறிவித்தது. ஒய்.என்.டி.சி. என்பது நாட்டின் முதல் ஜப்பான்-இந்தியா உற்பத்தி நிறுவனம் ஆகும். இதன் நோக்கம் ஜப்பானிய பாணி உற்பத்தி மற்றும் வேலைமுறைகளைப் பயிற்றுவிப்பதாகும்.
இந்தியாவில் இளைஞர்களுக்கான தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட கல்வி அறக்கட்டளையான நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி அறக்கட்டளை (என்.டி.டி.எப்.) உடன் இணைந்து உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஒய்.என்.டி.சி. நான்கு ஆண்டு திட்டத்தை நடத்துகிறது.
ஒய்.என்.டி.சி. மற்றும் என்.டி.டி.எப். வழங்கிய பாடத்திட்டம் தேசிய வேலைவாய்ப்பு மேம்பாட்டு மிஷனின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தனிநபர்களுக்கான வேலைவாய்ப்பு நடைமுறை பயிற்சி மூலம் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் அரசு திட்டமாகும்.

நிகழ்ச்சியில் பேசிய யமஹா மோட்டார் இந்தியா இயக்குநர் யுகிஹிகோ தடா, “இந்த இளம் திறமைகள் உற்பத்தித் துறைக்கு பங்களிக்க தயாராக இருப்பதை யமஹா கண்டு கொள்வது பெருமையான தருணம். திறன் இந்தியா மேம்பாட்டுத் திட்டத்தில் பங்களிப்பதற்காக ஒய்.என்.டி.சி. அமைக்கப்பட்டது. இன்று இந்த மாணவர்களின் வெற்றி, உற்பத்தித் தொழிலுக்கு பயிற்சி பெற்ற மனிதவளத்தை உருவாக்குவதற்கான எங்கள் பணியை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த திசையில் இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, ஜப்பானிய உற்பத்தி முறைகள் மற்றும் நுட்பங்களில் அவர்களின் அறிவையும் திறமையையும் மேம்படுத்துவதன் மூலம் நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம் என தெரிவித்தார்.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.
தற்போது உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
கடந்த 23-ந் தேதி எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நேற்று தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி பேசினார்.
இன்று காலை எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் சுகுமாரி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சிமன்றத் தலைவர், வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் நூற்றுக்கணக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.
பின்னர் நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஆட்சிக்கு வந்தவுடனேயே வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றார். ஆனால் தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்.
எனவே பொதுமக்கள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மிகவும் விழிப்புணர்வுடன் வாக்களித்து அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்ய வேண்டும்.
அ.தி.மு.க. பொறுப்பாளர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் அ.தி.மு.க. வெற்றிக்காக இரவு- பகல் பாராமல் கடுமையாக உழைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.
9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்றது என்ற செய்தி நமது காதில் விழவேண்டும். அந்த அளவுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த சாவித்திரி மணிகண்டன் (வயது 43) என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து அவரது மாமியார் ஜெயலட்சுமி லோகநாதன் (வயது 61) என்பவரும் போட்டியிடுகிறார்.






