என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தி.மு.க.- அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்க பா.ம.க. உருவாக்கப்படவில்லை: அன்புமணி ராமதாஸ்
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் காஞ்சீபுரம் அடுத்த அவலூர் கிராமத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது:-
சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றுவதால் எதுவும் ஆகபோவதில்லை அது வெறும் காகித பேப்பர் தான்.ஆனால் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் நிச்சயம் நிறைவேற்றியாக வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுகின்றது. பா.ம.க. கட்சி அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதற்காகவும், தி.மு.க. என்பதற்காகவும், உருவாக்கப்படவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என உருவாக்கப்பட்ட கட்சி.
அதற்கான நேரம் தான் இது. அனைவரும் ஆட்சிக்கு வந்துவிட்டனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. பல ஆண்டுகளாக உழைத்த ஸ்டாலினும் ஆட்சிக்கு வந்துவிட்டார், ஸ்டாலினின் ஆசை நிறைவேறியது.
அடுத்து ஆட்சி பா.ம.க. ஆட்சி தான் அதற்கான முன்னோட்டம் தான் இந்த தேர்தல்.
10.5 சதவீத இட ஒதுக்கீடு, ஜாதி பிரச்சனையோ, ஓட்டு பிரச்சினையோ, அரசியல் பிரச்சினையும் இல்லை, இது சமூக நீதி பிரச்சனை.
அ.தி.மு.க. ஒரு சட்டம் கொண்டு வந்தால் தி.மு.க. எதிர்க்கும், திமுக ஒரு சட்டம் கொண்டு வந்தால் அ.தி.மு.க. எதிர்க்கும், ஆனால் இந்த சட்டத்திற்கு இரு கட்சிகளும் ஏற்று அமல்படுத்துவதற்கு காரணம் மருத்துவர் ராமதாஸ்.
மாற்றம் என்பது இந்த உள்ளாட்சியில் இருந்து தொடங்கட்டும். இந்த வெற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சிக்கான வெற்றி.
54 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. மாற்றி மாற்றி ஆட்சி அமைத்தது போதும்.
மேலும் கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் கட்சி, அரசியல், தேர்தல், எல்லாவற்றையும் விட உங்கள் உயிர் முக்கியம், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், அனைவரும் தடுப்பூசி கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்...தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்