என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் 53 பழங்குடியின மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் என்.சி.எல்.டி. அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் ஆர்த்தி மாணவர்களிடம் நேரடியாக உரையாடி கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அரசின் திட்டங்களை பற்றி எடுத்துக் கூறி அவர்களின் குறைகளை கேட்டு அவை உடனடியாக தீர்த்து வைக்கப்படும் எனக் கூறினார்.
மேலும் மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்வதாக கூறினார். இம்மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் தொடர்பான கோரிக்கைகள் முறையாக பரிசீலித்து வழங்கப்படும் என்றார்.
மாணவர்களை தொடர்ந்து கல்வி பயில வேண்டும் எனவும் அவர்களின் அருகில் உள்ள குழந்தைகளையும் பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தும்படி கூறினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாணவர்களை தொடர்ந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் எனக் கூறி அரசின் திட்டங்களை விளக்கி கூறினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா மற்றும் அதை சார்ந்த ஒமைக்ரான் தொற்றை தடுப்பதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (சனிக்கிழமை) காஞ்சிபுரம் மாவட்டத்தில் 400 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்கள சுகாதார பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 8,739 பேர் உள்ளனர், 2-வது தவணை தடுப்பூசி செலுத்திய மேற்கண்ட பயனாளிகள் 39 வாரங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 723 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது மட்டுமல்லாமல் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும், 2-வது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு இலக்கையே எட்டியுள்ளது.
2-வது தவணை தடுப்பூசி செலுத்தாத நிலையில் உள்ளவர்களை நேரடியாக மற்றும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறுஞ்செய்தி அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும். இதன் மூலமே நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக கிடைக்கும். 2 தவணை தடுப்பூசி போடப்பட்டிருந்தால் மட்டுமே கொரோனா மற்றும் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என இந்திய மருத்துவ கழகம் அறிவித்துள்ளது.
நம்முடைய குடும்பத்தினர் பாதுகாப்பாக இருக்க நாம் ஒவ்வொருவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகபெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும்.
எனவே இன்று நடைபெற உள்ள முகாமுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டு பயன் பெறுங்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள், குன்றத்தூர் நகராட்சி 30 வார்டுகள்.
மாங்காடு நகராட்சி 27 வார்டுகள், வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள், உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் என மொத்தம் 156 வார்டுகளில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசிநாள் என்பதால் வேட்புமனு அளிக்கும் இடங்களில் வேட்பாளர்கள் குவிந்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, உத்திரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணும் மையமாக காஞ்சிபுரம் காரப்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர், மாவட்ட கலெக்டர்களின் நேர்முக உதவியாளர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் 550 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர். நேற்று மட்டும் 436 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து இருக்கிறார்கள்.
நேற்று வரை காஞ்சிபுரம் மாநகராட்சியில் 180 பேர், குன்றத்தூர் நகராட்சி 108 பேர், மாங்காடு நகராட்சி 79 பேர், வாலாஜாபாத் பேரூராட்சி 59 பேர், உத்திரமேரூர் பேரூராட்சி 53 பேர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 71 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்து உள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிக அளவில் வந்து இருந்தனர்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 53-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி காஞ்சிபுரத்தில் அண்ணா வாழ்ந்து மறைந்த அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருஉருவ சிலைக்கு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. சாலவாக்கத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன், அண்ணா நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நகர செயலாளர் சன் பிரான்ட் ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சேகரன், இளைஞரணி அமைப்பாளர் துணை செயலாளர்கள் யுவராஜ், டாக்டர் சோபன்குமார், மாணவரணி அமைப்பாளர் அபுசாலி, ஏ.வி.சுரேஷ்குமார், ராம்பிரசாத், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், சாலவாக்கம் குமார், ஞானசேகரன், பூபாலன், வி.எஸ்.ராமகிருஷ்ணன் எம்.எஸ்.சுகுமார், தசரதன், நகர அவைத்தலைவர் சந்துரு, துணைசெயலாளர் ஜெகன்னாதன் கருணா நிதி, பொருளாளர் வெங்கடேசன் மற்றும் எஸ்.கே.பி.சீனிவாசன், சாட்சி சண்முக சுந்தரம் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் எழிலரசன் எம்.எல்.ஏ. திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் பவள விழா மாளிகையில் உள்ள அண்ணா, கலைஞர் கருணாநிதி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சி பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அண்ணா நினைவில்லத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமையில் நகர செயலாளர் மகேஷ், ஏகாம்பரம், அருள், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நினைவில்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் நிர்வாகிகள் ஏகாம்பரம், குமார், வனஜா மரியாதை செலுத்தினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தப்பேட்டை பகுதியில் இன்று காலை வேளாண்மைத் துறை உதவி அலுவலர் தேவசேனாபதி தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.7 லட்சம் ரொக்கம் இருந்தது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதால் பணத்தை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான நாராயணனிடம் ஒப்படைத்தனர்.
சோழிங்கநல்லூர்:
சென்னை, பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி முருமா. கணவன்-மனைவி இருவரும் பாரிமுனை செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணியளவில் பெரும்பாக்கம் பஸ் பணிமனைக்கு வந்தனர்.
அவர்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தனர். அந்த பஸ் காலை 5.10 மணிக்கு புறப்பட வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் காலை 5.30 மணி ஆகியும் வண்டியை டிரைவர் எடுக்கவில்லை.
இதனை செந்திலும் அவரது மனைவி முருமாவும் கண்டித்தனர். இதனால் ஆத்திரம்அடைந்த டிரைவர் அவர்களை அவதூறாக பேசி 2 பேரையும் சரமாரியாக தாக்கினார். இதில் முருமா மயங்கி கீழே விழுந்தார்.
இதனை கண்ட மற்ற பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகளும் அங்கிருந்த பொதுமக்கள் ஏராளமானோர் டிரைவரை கண்டித்து பஸ்நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் அங்கிருந்த பஸ் ஊழியர்களை தாக்கத் தொடங்கினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பயணிகள் மீது தாக்குதல் நடத்திய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து கலெக்டர் ஆர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 156 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 384 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.இவற்றில் பதற்றமான 88 வாக்குச் சாவடிகள் வெப் ஸ்டீரிமிங் எனப்படும் இணையவழியில் கண்காணிக்கப்படும்.
இவை தவிர மீதமுள்ள 296 வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 3,64,086 பேர் வாக்களிக்க உள்ளனர்.1536 பேர் வாக்குப்பதிவு அலு வலர்களாக செயல்பட உள்ளனர்.
மாவட்டத்தில் ஒரு குழுவுக்கு 8 பேர் வீதம் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.இதில் காஞ்சிபுரம் நகராட்சிக்கு 2 பறக்கும் படைகளும், மற்ற இடங்களுக்கு தலா ஒரு பறக்கும் படையும் செயல்பட்டு வருகிறது.
தேர்தல் பணிகளை கண்காணிக்க இணை இயக்குநர், துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் உள்ளூர் தேர்தல் பார்வையாளர்களாக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டுள்ளது.
புகார்கள் மற்றும் குறைகளை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். தேர்தல் நேரத்தில் கொரோனா தொற்று தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என கண்காணிக்க சுகாதாரத் துறையின் மாவட்ட துணை இயக்குநர் சித்ர சேனா செயல்படுவார்.
வீடுவீடாக சென்று 3 பேர் மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும், அரசியல் கட்சியினர் உள்ளரங்கத்தில் கூட்டம் நடத்துவதாக இருந்தால் 50 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். அந்த இடத்தின் விபரங்களை கொரோனா கட்டுப்பாட்டு அலுவலரிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.
வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்கு எண்ணும் அரசுப் பணியாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறோம்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான முதல் கூட்டம் மார்ச் மாதம் 2-ந் தேதியும், மேயர் மற்றும் நகர் மன்ற தலைவர்கள் தேர்வு வரும் மார்ச் மாதம் 4-ந் தேதியும் நடத்தப்படும். காஞ்சிபுரம் மாநகராட்சியில் இதுவரை 2 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறினார்.
உத்திரமேரூர் ஒன்றியம் ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி. இவரது மகன் அஸ்வித் (வயது 11). இவர் களியாம்பூண்டியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று அஸ்வித் ராவத்தநல்லூரிலிருந்து சைக்கிளில் காரணி மண்டபம் என்னும் பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது பின்னால் வந்த கார் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக திருப்பியபோது அஸ்வித் ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அஸ்வித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுபற்றி பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 156 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 384 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பதற்றமான 88 வாக்குச்சாவடிகள் வெப் ஸ்டீரிமிங் எனப்படும் இணையவழியில் கண்காணிக்கப்படும்.
மாவட்டத்தில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் காஞ்சிபுரம் நகராட்சிக்கு 2 பறக்கும் படைகளும், மற்ற இடங்களுக்கு தலா ஒரு பறக்கும் படையும் என 7 பறக்கும்படை செயல்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 3 பேரூராட்சிகள் ஆகியனவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நடைபெறும்.
குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை அருகே சிறுகளத்தூரில் உள்ள மாதா பொறியியல் கல்லூரியில் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






