என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் கலெக்டர்
பள்ளிக்கு செல்லாத 59 பழங்குடியினர் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கலெக்டர் நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் 53 பழங்குடியின மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் என்.சி.எல்.டி. அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் 53 பழங்குடியின மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் என்.சி.எல்.டி. அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் ஆர்த்தி மாணவர்களிடம் நேரடியாக உரையாடி கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அரசின் திட்டங்களை பற்றி எடுத்துக் கூறி அவர்களின் குறைகளை கேட்டு அவை உடனடியாக தீர்த்து வைக்கப்படும் எனக் கூறினார்.
மேலும் மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்வதாக கூறினார். இம்மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் தொடர்பான கோரிக்கைகள் முறையாக பரிசீலித்து வழங்கப்படும் என்றார்.
மாணவர்களை தொடர்ந்து கல்வி பயில வேண்டும் எனவும் அவர்களின் அருகில் உள்ள குழந்தைகளையும் பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தும்படி கூறினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாணவர்களை தொடர்ந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் எனக் கூறி அரசின் திட்டங்களை விளக்கி கூறினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகளுக்கான அறிவுரை மற்றும் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
பள்ளி செல்லாத குழந்தைகளில் பழங்குடியினர் குழந்தைகளை இனம் கண்டு பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுவதற்காக இந்த கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் 53 பழங்குடியின மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் என்.சி.எல்.டி. அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் ஆர்த்தி மாணவர்களிடம் நேரடியாக உரையாடி கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அரசின் திட்டங்களை பற்றி எடுத்துக் கூறி அவர்களின் குறைகளை கேட்டு அவை உடனடியாக தீர்த்து வைக்கப்படும் எனக் கூறினார்.
மேலும் மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்வதாக கூறினார். இம்மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் தொடர்பான கோரிக்கைகள் முறையாக பரிசீலித்து வழங்கப்படும் என்றார்.
மாணவர்களை தொடர்ந்து கல்வி பயில வேண்டும் எனவும் அவர்களின் அருகில் உள்ள குழந்தைகளையும் பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தும்படி கூறினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாணவர்களை தொடர்ந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் எனக் கூறி அரசின் திட்டங்களை விளக்கி கூறினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story






