என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர் நியமனம் - கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உள்ளூர் அளவிலான பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் பணிகளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக கண்காணிக்கும் பொருட்டு, 5 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உள்ளூர் அளவிலான பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ஆர். பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர், காஞ்சிபுரம் செல்போன்-9445000903, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு எஸ். மதுராந்தகி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் 1, சிப்காட், ஸ்ரீபெரும்புதூர் செல்போன்-7305955670 , உத்திரமேரூர் பேரூராட்சிக்கு பாபு, மாவட்ட வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், காஞ்சிபுரம் செல்போன்- 9445000168, வாலாஜாபாத் பேரூராட் சிக்கு பிரகாஷ்வேல், மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின நல அலுவலர், காஞ்சிபுரம் செல்போன்-7338801259),
மாங்காடு நகராட்சிக்கு சீனிவாசராவ், திட்ட இயக்குநர், மகளிர்திட்டம், காஞ்சீபுரம் செல்போன் எண்.- 9444094280, குன்றத்தூர் நகராட்சிக்கு கோபி, உதவி இயக்குநர் (தணிக்கை), காஞ்சீபுரம் செல்போன் எண்- 7402606006) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






