என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்கு எண்ணும் மைய ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X
    வாக்கு எண்ணும் மைய ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    காஞ்சிபுரத்தில் வாக்கு எண்ணும் மைய ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    காஞ்சிபுரம் மாநகராட்சி, உத்திரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணும் மையமாக காஞ்சிபுரம் காரப்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள், குன்றத்தூர் நகராட்சி 30 வார்டுகள்.

    மாங்காடு நகராட்சி 27 வார்டுகள், வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள், உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் என மொத்தம் 156 வார்டுகளில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசிநாள் என்பதால் வேட்புமனு அளிக்கும் இடங்களில் வேட்பாளர்கள் குவிந்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, உத்திரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணும் மையமாக காஞ்சிபுரம் காரப்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர், மாவட்ட கலெக்டர்களின் நேர்முக உதவியாளர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×