என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே விபசார அழகி மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் குறித்து காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 25வயது மதிக்கத்தக்க இளம்பெண் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் இறந்து கிடந்த இளம்பெண் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த பிரியா(25) என்பதும், இவர் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த விபச்சார தொழில் செய்யும் பெண் ஒருவருடன் சேர்ந்து விபச்சார தொழிலில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது.

    இந்த நிலையில் பிரியா மர்மமான இறந்து உள்ளார்.

    அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பாக பிரியாவின் காதலனான காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மற்றும் பெண் ஒருவரிடம் விசாரித்து வருகின்றனர்.
    கே.கே.நகரில் பஸ் மோதி நிலத்தரகர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை, அசோக் நகர் புதூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணகுமார் (வயது56). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

    இவர் நேற்று இரவு 8.30மணி அளவில் கே.கே நகர் காமராஜர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தி.நகரில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற மாநகர பஸ் (எண்49ஏ) எதிர்பாராத விதமாக லட்சுமணகுமார் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே லட்சுமண குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் சங்கரை கைது செய்தனர்.

    பட்டு சேலை உற்பத்திக்கு தேவையான கோரா உற்பத்தி விலை குறைப்பு செய்தால் மட்டுமே பட்டு நெசவை காப்பாற்ற முடியும் என நெசவாளர்கள் கூட்டத்தில் கோரிக்கைகளை வைத்தனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காந்தி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் பட்டு சேலை உற்பத்தி மூலப்பொருட்கள் 130 சதவீதம் விலை உயர்வு குறித்து ஆலோசனை கூட்டம் சி.ஐ.டி.யு. மாநில கைத்தறி சம்மேளன பொது செயலாளர் முத்துகுமார் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பட்டு நெசவு தொழில் நெருக்கடி குறித்து விவாதிக்க ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிற்சங்க அமைப்புகள், ஜவுளி வர்த்தகர்கள், கோறா வர்த்தகர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பட்டு சேலை உற்பத்திக்கு தேவையான கோரா உற்பத்தி விலை குறைப்பு செய்தால் மட்டுமே பட்டு நெசவை காப்பாற்ற முடியும் என பட்டு நெசவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அனைத்து பட்டு நெசவு உற்பத்தியாளர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் நிலையான விலை நிர்ணயித்தால் இப்பிரச்சினையில் இருந்து தீர்வு காணலாம் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

    பின்னர் சி.ஐ.டி.யூ மாநில கைத்தறி சம்மேளன பொதுச் செயலாளர் முத்துக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கைத்தறி நெசவுத் தொழிலில் கச்சா பட்டு 130 சதவீதம் விலை உயர்வை கண்டித்தும், மூலக்கூறுகள் விலை உயர்வை கண்டித்தும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிற்சங்க அமைப்புகள், ஜவுளி வர்த்தகர்கள், கோர பட்டு வர்த்தகர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம், கோயம்புத்தூர், பரமக்குடி உட்பட தமிழகம் முழுவதும் கைத்தறி நெசவு அனைத்து மையங்களில் மே 3ந் தேதி பட்டுசேலை விற்பனை கடை அடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கான முடிவு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பட்டு சரிகை சேலை உற்பத்தி சங்க செயலாளர் பெருமாள், வணிகர் வர்த்தக சங்கத் தலைவர் ரங்கநாதன், தொ.மு.ச. தஞ்சாவூர் தங்கவேலு, சி.ஐ.டி.யு. சங்க தலைவர் தஞ்சாவூர் நாகேந்திரன், முருகன் பட்டு கூட்டுறவு சங்க துணை தலைவர் இளங்கோவன் மற்றும் பருத்தி பட்டு நெசவு தொழிலாளர்கள், சி.ஐ.டி.யு. சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்க தலைவர்கள் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

    பட்டு நெசவு உற்பத்தியாளர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் நிலையான விலை நிர்ணயித்தால் இப்பிரச்சினையில் இருந்து தீர்வு காணலாம் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காந்தி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் பட்டு சேலை உற்பத்தி மூலப்பொருட்கள் 130 சதவீதம் விலை உயர்வு குறித்து ஆலோசனை கூட்டம் சி.ஐ.டி.யு. மாநில கைத்தறி சம்மேளன பொது செயலாளர் முத்துகுமார் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பட்டு நெசவு தொழில் நெருக்கடி குறித்து விவாதிக்க ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிற்சங்க அமைப்புகள், ஜவுளி வர்த்தகர்கள், கோறா வர்த்தகர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பட்டு சேலை உற்பத்திக்கு தேவையான கோரா உற்பத்தி விலை குறைப்பு செய்தால் மட்டுமே பட்டு நெசவை காப்பாற்ற முடியும் என பட்டு நெசவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அனைத்து பட்டு நெசவு உற்பத்தியாளர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் நிலையான விலை நிர்ணயித்தால் இப்பிரச்சினையில் இருந்து தீர்வு காணலாம் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

    பின்னர் சி.ஐ.டி.யூ மாநில கைத்தறி சம்மேளன பொதுச் செயலாளர் முத்துக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கைத்தறி நெசவுத் தொழிலில் கச்சா பட்டு 130 சதவீதம் விலை உயர்வை கண்டித்தும், மூலக்கூறுகள் விலை உயர்வை கண்டித்தும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிற்சங்க அமைப்புகள், ஜவுளி வர்த்தகர்கள், கோர பட்டு வர்த்தகர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம், கோயம்புத்தூர், பரமக்குடி உட்பட தமிழகம் முழுவதும் கைத்தறி நெசவு அனைத்து மையங்களில் மே 3ந் தேதி பட்டுசேலை விற்பனை கடை அடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கான முடிவு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பட்டு சரிகை சேலை உற்பத்தி சங்க செயலாளர் பெருமாள், வணிகர் வர்த்தக சங்கத் தலைவர் ரங்கநாதன், தொ.மு.ச. தஞ்சாவூர் தங்கவேலு, சி.ஐ.டி.யு. சங்க தலைவர் தஞ்சாவூர் நாகேந்திரன், முருகன் பட்டு கூட்டுறவு சங்க துணை தலைவர் இளங்கோவன் மற்றும் பருத்தி பட்டு நெசவு தொழிலாளர்கள், சி.ஐ.டி.யு. சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்க தலைவர்கள் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

    மாமல்லபுரம் அருகே அடையாளம் தெரியாத கார் மோதி மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்(வயது45).மீனவர். இவர் நேற்று இரவு கோவளத்தில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வருகிற 2022-2023ம் கல்வி ஆண்டிற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 147 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிகுலேசன், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) நுழைவு நிலை (எல்.கே.ஜி.) வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் 2036 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குழந்தைகளுக்கான இலவச கல்வி மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதன் பொருட்டு அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-14ம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். வருகிற 2022-2023ம் கல்வி ஆண்டிற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 147 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிகுலேசன், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) நுழைவு நிலை (எல்.கே.ஜி.) வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் 2036 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான வசதி ret.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் கைபேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தியாக அளிக்கப்படும். சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வழியே வருகிற 20-ந்தேதி முதல் மே 18ந் தேதிவரை விண்ணப்பிக்கலாம். முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

    நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிமாக விண்ணப்பங்கள் பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றவர், எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கள் நடத்துதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வளசரவாக்கத்தில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 33 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை வளசரவாக்கம் வேலன் நகர் 7வது தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (45) தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் இவரது மனைவி ரம்யா.

    தினேஷ்குமார் கடந்த வாரம் பணி நிமித்தமாக ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து ரம்யா வீட்டை பூட்டிவிட்டு ஆழ்வார் பேட்டையில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் தினேஷ்குமார் வீட்டிற்கு வந்த வேலைக்கார பெண் அம்சா வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி ரம்யாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரம்யா விரைந்து வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 33 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் கொள்ளையர்கள் சுருட்டி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    கோயில்களில் தமிழ் வழிபாடு ஊக்குவிக்கப்படுவதுடன், பொதுமக்களும் தாம் அறிந்த தமிழ்மொழி மூலம் அர்ச்சனை செய்யப்படுவதை கேட்டு அகமகிழ்வார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டம் முதல்- அமைச்சரால் 03.08.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் உள்ள 47 முதுநிலை கோயில்களில், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கோயில்களில் “அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டு, அதில் கோயில்களில், தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண், ஆகிய விவரங்கள் பத்தர்களுக்கு தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சங்க காலத்தில் பன்னிரு ஆழ்வார்களும், அறுபத்து மூன்று நாயன்மார்களும் தமிழ் மொழியிலேயே இறை வனைப் பாடிப்பரவினர். எனவே தாய் மொழியில் அர்ச்சனை செய்வதை ஊக்குவிக்கவும், அர்ச்சகர்கள் சொல்வதை பக்தர்கள் புரிந்து கொள்வதற்காகவும் போற்றி நூல்கள் உறுதுணையாக இருக்கும் என்பதாலும் தமிழில் போற்றி புத்தகங்கள் அச்சிடப்பட்டு கோயில்களுக்கு வழங்கப்படஉள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் கோயில்களில் தமிழ் வழிபாடு ஊக்குவிக்கப்படுவதுடன், பொதுமக்களும் தாம் அறிந்த தமிழ்மொழி மூலம் அர்ச்சனை செய்யப்படுவதை கேட்டு அகமகிழ்வார்கள். எனவே அடுத்தக்கட்டமாக 536 கோயில்களில் “அன்னை தமிழில் அர்ச்சனை” செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் நகர் தேவராஜ சுவாமி கோயிலில் “அன்னைத் தமிழில் அர்ச்சனை” திட்டமானது செவ்வனே நடைமுறைப்படுத்தப்பட்டு பக்தர்களின் பேராதரவைப் பெற்று, அனைத்து பக்தர்களும், இறைவனின் திருப்புகழை அறியும் வண்ணம், பக்தி தமிழை மென்மேலும் வளர்த்திடும் சீரிய நோக்குடன் இத்திட்டமானது சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

    இதனால் கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களும், இறைவனுக்கு, தங்களது தாய் மொழியாம் தமிழ் மொழியில், அர்ச்சனை செய்யப்படுவதை காது குளிரக் கேட்டு, அதன் பொருள் அறிந்து, மெய் மறந்து வழிபடுகின்றனர், இதனால் இத்திட்டம் பெறும் வரவேற்பைப் பெற்று, வெற்றித்திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீஸ்போல் நடித்து கூகுள்பே மூலம் பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் லூட்புர் ரகுமான். இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே காரணித்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார்.

    இவர் பணிமுடிந்து தான் தங்கி உள்ள இடத்திற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தாங்கள் போலீஸ்காரர்கள் என லூட்புர் ரகுமானிடம் கூறி மிரட்டி அவரை விசாரணைக்காக வலுக்கட்டாயமாக தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்

    சிறிது தூரம் சென்றதும் அவரை இறக்கிவிட்ட வாலிபர்கள் ‘கூகுள்பே’ மூலம் தங்களது வங்கி கணக்குக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பும்படி கூறி பறித்துக் கொண்டனர். பின்னர் லூட்புர் ரகுமானை அங்கேயே இறக்கி விட்டு மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து ஓரகடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் போலீஸ் போல் நடித்து பணம் பறிப்பில் ஈடுபட்டது வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்த சரவணன், காரணித்தாங்கள் சதீஷ்குமார் என்பது தெரிந்தது.

    அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். புகார் தெரிவித்த சில மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்து தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பாராட்டினார்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது30). இவருடைய மனைவி ரஞ்சிதா (28). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2ஆண்டுகள் ஆகின்றன.இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

    ரஞ்சித் குமார் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். கும்மிடிப்பூண்டி பகுதியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக ரஞ்சித் குமார் ரஞ்சிதாவிடம் போனில் தொடர்பு கொண்டு பேசாததால் ரஞ்சிதா மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கும்மிடிப்பூண்டியில் வேலை செய்யும் ரஞ்சித்குமார் இரண்டு நாட்களுக்கு பின்பு ரஞ்சிதாவுக்கு தொடர்ந்து போன்செய்தும் ரஞ்சிதா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ரஞ்சித் குமார் பக்கத்து வீட்டில் குடியிருப்பவருக்கு போன் செய்து ரஞ்சிதா போனை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

    பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரஞ்சிதா வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரஞ்சிதா புடவையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் பிணமாக காணப்பட்டார்.

    போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரஞ்சித்குமாருக்கும், ரஞ்சிதாவுக்கும் திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது.

    ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, முன்னதாக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார்.
    காஞ்சிபுரம்:

    பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோவிலில் , சித்ரா பௌர்ணமி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆந்திரா மாநில அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    அதிகாலையிலேயே குவிந்த மக்கள் நீண்ட வரிசையில் நின்று நெய்தீபம் ஏற்றி ஸ்ரீகர்ணகி சமேத ஸ்ரீசித்திர குப்தரை வணங்கினர்.

    தென்னிந்தியாவிலேயே, சித்ரகுப்தருக்கென்று தனி ஆலயம் காஞ்சிபுரம் நெல்லுக்கார தெருவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமியன்று இக்கோவில் திருவிழா சிறப்பாக நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  சித்ரகுப்தரை  மனமுறுகி தரிசனம் செய்வர்

    அந்தவகையில் இந்த ஆண்டும், சித்ரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி ஸ்ரீகர்ணகி சமேத ஸ்ரீசித்திர குப்தருக்கு அதிகாலை சிறப்பு ஹோமம், விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பிறகு வண்ண வண்ண மலர் அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார்.

    பிறகு கோவில் அர்ச்சகர்கள் சுவாமிக்கு கற்பூரம் தீபாராதனைகள் காண்பித்தனர். அப்போது திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் மனமுறுகி சுவாமி தரிசனம் செய்தனர்.

    சித்ரகுப்தர் கோவிலுக்கு அதிகாலையிலேயே, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா,  கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை புரிந்து  நீண்ட வரிசையில் நின்று நெய்தீபம் ஏற்றி ஸ்ரீகர்ணகி சமேத ஸ்ரீசித்திர குப்தரை வணங்கிவிட்டு சென்றனர்.

    அமைச்சர் ரோஜா:

    ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா ஆந்திரா மாநிலத்தில் இருந்து கார் மூலம் இன்று காலை காஞ்சீபுரம் வருகை புரிந்தார். 

    சித்ரா பௌர்ணமியையோட்டி

    சித்ரகுப்தர் கோவிலுக்கு சென்ற அவர் சித்ரகுப்தரை மனமுறுகி சுவாமி தரிசனம் செய்தார். நடிகை ரோஜாவிற்கு அர்ச்சகர் மாலை அணிவித்து கோவில் பிரசாரத்தை வழங்கினர்.

    வீ.வள்ளிநாயகம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கழக பொருளாளர் வக்கீல் வீ. வள்ளிநாயகம் ஏற்பாட்டின் பேரில்,  லட்சக்கணக்கான பக்தர்களுக்கு, சாம்பார் சாதம், அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அப்போது நடிகை ரோஜா பங்கேற்று வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    பிறகு நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது :

    சித்ரா பௌர்ணமியையொட்டி 

    இன்று சித்ரகுப்தர் கோவிலுக்கு வந்திருந்தேன், சித்ரகுப்தரை  நன்றாக சுவாமி தரிசனம் செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    இந்த அன்னதானம் நிகழ்ச்சியில், மாவட்ட கழக பொருளாளர் வீ.வள்ளிநாயகம் அவரது துணைவியார் சுசீலாவள்ளிநாயகம் ஆகியோர் குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள்.இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம்,  பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வி.பாலாஜி, காஞ்சீபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் குட்டி என்கிற சண்முகானந்தம், அஉள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காமாட்சி அம்மன் கோவில்:

    ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, முன்னதாக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார். கருவறையில் உள்ள காமாட்சியம்மனை மனமுறுகி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் குங்குமம் பிரசாதங்களை வழங்கினார்கள்.

    பாதுகாப்பு:

    காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா ஆந்திரா மாநிலத்தில் இருந்து கார் மூலம் இன்று காலை காஞ்சிபுரம் வருகை புரிந்தார். 

    சித்ரா பௌர்ணமியையோட்டி சித்ரகுப்தர் கோவிலுக்கு சென்ற அவர் சித்ரகுப்தரை மனமுறுகி சுவாமி தரிசனம் செய்தார். நடிகை ரோஜாவிற்கு அர்ச்சகர் மாலை அணிவித்து கோவில் பிரசாரத்தை வழங்கினர்.

    வீ.வள்ளிநாயகம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கழக பொருளாளர் வக்கீல் வீ. வள்ளிநாயகம் ஏற்பாட்டின் பேரில்,  லட்சக்கணக்கான பக்தர்களுக்கு, சாம்பார் சாதம், அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அப்போது நடிகை ரோஜா பங்கேற்று வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    பிறகு நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது :

    சித்ரா பௌர்ணமியையொட்டி இன்று சித்ரகுப்தர் கோவிலுக்கு வந்திருந்தேன், சித்ரகுப்தரை  நன்றாக சுவாமி தரிசனம் செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    இந்த அன்னதானம் நிகழ்ச்சியில், மாவட்ட கழக பொருளாளர் வீ.வள்ளிநாயகம் அவரது துணைவியார் சுசீலாவள்ளிநாயகம் ஆகியோர் குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள்.இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம்,  பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வி.பாலாஜி, காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் குட்டி என்கிற சண்முகானந்தம், அஉள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காமாட்சி அம்மன் கோவில்:

    ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, முன்னதாக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார். கருவறையில் உள்ள காமாட்சியம்மனை மனமுறுகி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் குங்குமம் பிரசாதங்களை வழங்கினார்கள்.

    பாதுகாப்பு:

    காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    யார் மீதாவது புகார் வந்தால் அவர்கள் கட்சிப் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் புதிய கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு பொறுப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, பொதுக்குழு கூட்டம் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரங்கில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி பேசினார்.

    பா.ம.க. நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும், நேர்மையுடன் இருக்க வேண்டும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருப்பவர்கள் கட்சியை விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள், யார் மீதாவது புகார் வந்தால் அவர்கள் கட்சிப் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ள கருத்து, இந்தியை கற்றுக்கொண்டால் ஒற்றுமைக்கு உதவும் என தெரிவித்துள்ளார். அதற்கு நேர் எதிரான விளைவு தான் வரும்.

    இந்தி திணிப்பு கூடாது, இந்தி தேசிய மொழி கிடையாது. அது வெறும் அலுவல் மொழிதான். அது போல தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் உள்ளது. 2-வது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளது.

    அதே நேரத்தில் மும்மொழி கொள்கை என சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை தான் உள்ளது. உத்தரபிரதேசத்தில் மும்மொழி கொள்கை வைத்திருக்கிறார்களா? இந்தியும், ஆங்கிலமும் மட்டும்தான் வைத்திருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் தமிழை கற்றுக்கொடுப்பார்களா?

    முதலில் பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் தவிர கூடுதலாக வேறு ஒரு மொழியை கற்றுக்கொடுக்க சொல்லுங்கள். எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. அது ஒற்றுமைக்கு உதவாது வேற்றுமையை தான் வளர்க்கும்.

    இதைத்தான் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பார்த்தார்கள். அந்த நிலை வரக்கூடாது. மொழி என்பது வெறும் மொழி கிடையாது. அதில் நமது கலாச்சாரம் பண்பாடு எல்லாம் அடங்கி இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவம் இருக்கிறது.

    தனித்துவத்தில் மொழி என்பது முதலாவது இடத்தில் இருக்கிறது. அதிலே எந்த மொழியையும் யாரிடமும் திணிக்கக் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×