என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாமல்லபுரம் விபத்து"
- சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அடுத்தடுத்து நின்ற 2 ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியது.
- இதில் அருகில் நின்ற சாம்ப லால், உண்ணாமலை ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த தேவநேரி பகுதியில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் சாம்ப லால் (வயது40). வட மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
வாயலூர் கிராமத்தை சேர்ந்த உண்ணாமலை(52). இன்று காலை இவர்கள் இருவரும் தேவநேரி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வேலைக்கு செல்ல ஷேர் ஆட்டோவுக்காக காத்திருந்தனர்.
அப்போது ஒன்றன்பின் ஒன்றாக 2 ஆட்டோக்கள் பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றன. அதில் இருந்த டிரைவர்களிடம் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
அந்த நேரத்தில் சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அடுத்தடுத்து நின்ற 2 ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் அருகில் நின்ற சாம்ப லால், உண்ணாமலை ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் ஆட்டோக்களில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சொகுசு காரில் 3 பேர் இருந்ததாக தெரிகிறது. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்