என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிலை கண்டெடுப்பு"
- எந்திரம் மூலம் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
- சிலை கண்டெடுக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கூவத்தூர் கிராமம் மேல தெருவில் 400 ஆண்டு பழமையான பிரசித்தி பெற்ற வரலாறு சிறப்புமிக்க விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த சிவாலயம் சிதலமடைந்து ஆக்கிரமிப்பு காரணமாக பராமரிப்பு இல்லாமல் கிடந்தது.
அதை ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து விஸ்வநாதர் கோவில் கட்டுவதாக முடிவெடுத்து கோவில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எந்திரம் மூலம் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சிலை ஊர் பொதுமக்களுடைய பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பாள், விநாயகர் மற்றும் சாமி சிலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிலை கண்டெடுக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் இந்த கோவில் கட்டும் பணிகளை ஊர் பொதுமக்களே செய்ய முன் வந்தது சிறப்பாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்