search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் திருப்பணி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சாமி கோவிலின் உபகோயிலாக இணைக்கப்பட்டது.
    • கோவிலை பழுது பார்த்து புனரமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் திரு முக்கூடலூரில் அகஸ்தீஸ்வரர் சாமி கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் அகஸ்தீஸ்வரர், இறைவி, அஞ்சனாச்சியம்மன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.

    நிதி வசதி இல்லாத இக்கோவில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சாமி கோவிலின் உபகோயிலாக இணைக்கப்பட்டது.

    இக்கோவிலின் அகஸ்தீஸ்வரர் மணலால் பிடிக்கப்பட்டவர் எனவும், இங்கு அகத்திய முனிவர் வழிபட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.இக்கோவிலின் மதில் சுவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முழுவதும் சேதம் அடைந்தது. சோழ மன்னர்கள் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் தொடர்பாக கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகிறது .திருக்கோயில் உள்ள பழமையான கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலை பழுது பார்த்து புனரமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இந்த நிதி மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதி, அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்பாள் சன்னதி, மடப் பள்ளி, ராஜகோபுரம் ஆகியவற்றில் புனரமைப்பு பணிகளும், சோபனா மண்டபம், வசந்த மண்டபம், அபிஷேக மண்டபம், சுப்பிரமணியர் சன்னதி ஆகியவற்றில் மீள கட்டுதல் பணிகளும், உப சந்நிதிகளில் வர்ணம் பூசும் பணிகளும், மேற்கு வடக்கு கிழக்கு மதில் சுவர்கள் பழுது பார்த்து புதுப்பித்தல் பணியும் நடைபெற உள்ளது.

    இந்த பணிகள் அனைத்தும் 24 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.

    அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    2022-23-ம் நிதி ஆண்டில் 113 கோயில்கள் ரூ.154.90 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 நிதி ஆண்டில் 84 திருக்கோயில்கள் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்கு பின் திருப்பணி களுக்கு மானியமாக ரூ.200 கோடி தமிழக அரசு வழங்கி உள்ளது.

    இதுவரை ஆயிரம் ஆண்டுகள் பழமையான 12 கோயில்கள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 13 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. மேலும் வரலாற்றில் படித்த ராஜ ராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் கோவிலுக்கான திருப்பணிகள் நடைபெற்றது போல தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இவ்வாறு அவர் பெருமிதத்துடன் கூறினார்.

    • சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் சொல்லி யாக பூஜை நடத்தினர்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது.

    இங்கு கருணாம்பிகை சமேத அவினாசிலிங்கேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் பல்வேறு கல்வெட்டுகள் உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனாரால் பதிகம்பாடி முதலை உண்ட பாலகனை உயிருடன் மீட்ட அதிசயம் நடந்த திருத்தலமும் இதுவே.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். சிறப்பு வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது

    அதன்படி கோவில் பரிவார சன்னதி விமானங்கள் பாலாலய பூஜை நேற்று இரவு 7 மணி அளவில் கோவில் மண்டபத்தில் யாகபூஜை நடந்தது.

    கோவில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் சொல்லி யாக பூஜை நடத்தினர்.

    இதில் குமரகுருபர சுவாமிகள், அவினாசி காமாட்சி தாச சுவாமிகள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் டாக்டர்ஆ.சக்திவேல், அறங்காவலர்கள் பொன்னுசாமி, ரவி, பிரகாஷ் ஆறுமுகம், கார்த்திகா, உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 6-ந்தேதி பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மக்கள் திரளாக கலந்துகொண்டு அங்காளம்மனை வழிபட்டனர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா மாட்டூர் என சுந்தரமூர்த்தி நாயன்மாரால் தேவார வைப்புத்தலமாக பாடல் பெற்றதும் நடுச்சிதம்பரம் என ஆன்மிகப் பெரியோர்களால் போற்றத்தக்கதுமான சேவூரில் வாலியினால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீவாலிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புடைய, ஆன்மிக தலமான சேவூரில், தென்கரையில் பழங்கால தெய்வமான அங்காளம்மன் கோவில் உள்ளது. சேவூர் அங்காளம்மன் கோவில் குறித்து அதன் பரம்பரை பூசாரி பொ.ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:-

    சேவூரின் தென்கரையில் பல குலத்தவருக்கு வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்து வரும் சுமார் 850 ஆண்டுகளுக்கு முற்பட்ட தெய்வமான அங்காளம்மன் கோவிலில் பரிவார மூர்த்திகளாக விநாயகர், முருகர், பேச்சியம்மன், வராகி, வீரபத்திரர், கன்னிமார், அகோர வீரபத்திரர் ஆகிய மூர்த்திகள் அமையப்பெற்றது சிறப்பு வாய்ந்ததாகும்.

    அங்காளம்மனை வழிபடுவோருக்கு பசி பிணியை நீக்கி பசுமை வரம் அளிப்பவள். இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கடந்த மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. இதில் திருப்பணி தொடங்கி விரைவில் கும்பாபிஷேகம் செய்வதற்காக, ஜூலை 6-ந் தேதி பாலாலய சிறப்பு பூஜை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 6-ந்தேதி கோவில் குடமுழுக்கு திருப்பணி செய்வதற்கான பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஷ்வக்சேன ஆராதனம், புண்ணியாவாசனை, கலச ஆவாஹனம், சுதர்சனஹோமம், திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி, சாற்றுமுறை, மஹாதீபாராதனை நடைபெற்று பாலாயம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், குலதெய்வத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து சமுதாய மக்கள் திரளாக கலந்துகொண்டு அங்காளம்மனை வழிபட்டனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.
    • 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் கோவில் நிதியில் இருந்து 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக திருப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆய்வு செய்து ராஜகோபுரம் அமைக்கும் பணி யை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து கோவில் சார்பில் ராஜகோபுர பணிக்காக உபயதாரர்களின் உதவியை நாடினர். கோவை, திருப்பூர், ஈரோடு பகுதி உபயதாரர்கள் ராஜகோபுரம் அமைப்பதற்காக ரூ.5 கோடியே 30 லட்சம் நன்கொடை வழங்கினர்.

    இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின், 7 நிலை ராஜகோபுர திருப்பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.முரளிதரன் வழிகாட்டுதலின் பேரில், செயற்பொறியாளர் மதிவாணன், கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் மண்டல ஸ்தபதி ராமகிருஷ்ணன் தலைமையில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ராஜகோபுர ்பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கற்கள் கொண்டு வரப்பட்டு 2-வது பகுதி பாத வர்க்கம் அமைப்பதற்காக கற்களில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வரி நேர்த்தியாக அமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
    • யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு நடைபெற்று பாலாலயம் நடைபெற்றது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப்பட இருக்கிறது. இதையொட்டி, திருப்பணிகளை தொடங்கிடும் வகையில், பாலாலயம் பூஜை கோவிலில் கடந்த 5-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    அன்றைய தினம் பகவத் பிரார்த்தனை புண்ணியாவாஜனம், யாகம், பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து நேற்று முன்தினம் காலை புண்ணியாவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், யாகம், பூர்ணாகுதியும், மாலையில் மகா சாந்தி யாகம், மகா சாந்தி திருமஞ்சன யாகம் மற்றும் பூர்ணாகுதி நடைபெற்றது.

    நேற்று அக்னி பிரவேசம், மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு நடைபெற்று பாலாலயம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து, கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பணிகள் முடிந்து கோவிலின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அம்பாள் சன்னதி வெளிபிரகார பணிகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாதர் கோவில் உள்ளது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் மங்களநாதர் மற்றும் மங்களநாயகி அம்மன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது. மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஆண்டு முழுவதும் இந்த சிலையின் மீது சந்தன கவசம் பூசப்பட்டு வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனம் களைந்து பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும்.

    இந்த மங்களநாதர் கோவில் சுவாமி சன்னதி முதல் பிரகாரம் கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக முழுமை பெறாமல் காட்சி அளித்து வந்தது. குறிப்பாக சுவாமி சன்னதி பிரகாரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியிலும், வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலும் பெரும்பாலான தூண்கள் மற்றும் மேல் தளங்களில் கற்கள் இல்லாமலும் முழுமை பெறாமலேயே காட்சி அளித்து வந்தது.

    இந்தநிலையில் சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் நன்கொடை மூலம் ரூ.1 கோடியே 80 லட்சம் நிதியில் திருப்பணிகள் நடைபெற்று 4 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவடைந்தன. தற்போது மங்களநாயகி அம்பாள் சன்னதி உள்பிரகாரம் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் சேதமடையாமல் அதன் தன்மை குறையாமல் சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்டவைகளை கொண்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த சீரமைப்பு பணிக்காக தேவைப்படும் மணல் தஞ்சையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பணிகள் முடிந்து கோவிலின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கிழக்கு ராஜகோபுரம், அம்மன் சன்னதி கோபுரம், நடராஜர் சன்னதி கோபுரம், ராஜ கோபுரம் ஆகியவற்றில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்பாள் சன்னதி வெளிபிரகார பணிகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நந்தி மண்டப பிரகாரம் அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி முடிவடைந்துள்ளது.

    திருஉத்தரகோசமங்கை கோவிலின் மராமத்து மற்றும் சீரமைப்பு பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து வரும் நவம்பர் அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் சார்பில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    • துறையூர் பெருமாள்மலை கோவிலில் கோபுர கலசம் சாய்ந்த நிலையில் உள்ளது.
    • கோவிலுக்கு செல்லும் சாலையும் சேதமடைந்து, பாறைகள் சாலையில் உருண்டு கிடக்கிறது.

    துறையூரை அடுத்துள்ள பெருமாள் மலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து மலைக்கு சென்று வரும் பாதை மிகவும் சேதமடைந்தும், பாறைகள் சாலையில் உருண்டு கிடக்கும் நிலையிலும் உள்ளது. இதுவரை சாலையை சரி செய்வதற்காக எந்த முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. வாகனங்கள் சென்று வர முடியாத அளவிற்கு சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மலையில் இருந்து பாறைகள் உருண்டு சாலையின் குறுக்கே கிடக்கின்றன. மீண்டும் மழை பெய்தால் அந்த பாறைகள் உருண்டு சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் அல்லது கார்களின் மீது விழக்கூடிய அபாய நிலை உள்ளது. மேலும் கோவிலின் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக பழுதடைந்து சாய்ந்து, கீழே விழும் நிலையில் உள்ளது. இது பற்றி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் இது பற்றி கூறுகையில், கலசம் ஒரு கோவிலுக்கு மிகவும் முக்கியமானது ஆகும். கலசம் சாய்ந்த நிலையில் இருக்கும் போது கோவிலில் தினமும் அர்ச்சனைகள் உள்ளிட்டவை செய்து வருகிறார்கள். கோவிலில் திருவிழாக்கள் மட்டும் நடத்துவது போதாது. கோவிலை பராமரிக்கவும் வேண்டும். கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆனபோதும், மீண்டும் பராமரிப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

    குரங்குகள் குடிநீர் தொட்டியில் குளித்து அசிங்கம் செய்து வருகிறது. பக்தர்கள் யாரும் குடிநீர் மற்றும் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் அன்னதான திட்டம் தற்போது அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. மலை உச்சிக்கு ஒரு நாளைக்கு குறைந்த அளவே பக்தர்கள் சென்று வருகின்றனர். இதனால் பலர் உணவருந்த முடியாத நிலை உள்ளது. ஏனெனில் பக்தர்கள் சென்று வருவதற்கு போதிய போக்குவரத்து வசதி கிடையாது. பக்தர்கள் செல்ல வேண்டுமென்றால் படிக்கட்டுகளிலோ அல்லது இருசக்கர வாகனங்களில் மட்டுமே கோவிலுக்கு செல்ல முடியும். புரட்டாசி மாதத்தில் மட்டும் தனியார் வேன்கள் இயக்கப்படுகின்றன.

    திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் அனைவரும் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த பெருமாள் மலைக்கு வந்துதான், தங்களது காணிக்கையை செலுத்துகிறார்கள். அதிக அளவில் வருமானமுள்ள கோவிலாக இருந்தும், இந்த கோவிலுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் சாய்ந்த நிலையில் இருக்கும்போது, கும்பாபிஷேகத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து அவற்றை புனரமைக்காமல் திருவிழா நடத்துவது வருத்தம் அளிக்கிறது.பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டும், ஆகம விதியை கடைப்பிடித்தும் அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும். அன்னதானத்தை மீண்டும் அடிவாரத்திலேயே செயல்படுத்த வேண்டும். மேலும் கோவில் கோபுரத்தை சரி செய்து, புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நோய் தீர்க்கும் புண்ணிய தீர்த்த குளமாக போற்றி பாதுகாத்து வந்தனர்.
    • லெட்சுமி தீர்த்தகுளம் 25 அடி உயரத்தில் 66 மீட்டர் நீளமும், 66 மீட்டர் அகலமும் கொண்டது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 25 அடி உயரத்தில் 66 மீட்டர் நீளமும், 66 மீட்டர் அகலமும் கொண்ட லெட்சுமி தீர்த்தகுளம் அமைந்து உள்ளது.இந்த குளமானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெய்வானை அம்பாளுக்காக உருவாக்கப்பட்டதாக செவிவழி செய்தி கூறுகிறது. ஒரு காலத்தில் இந்த குளம் வற்றாத புனித தீர்த்தக் குளமாக இருந்து வந்துள்ளது.

    குறிப்பாக தேமல், பருவு உள்ளவர்கள் இந்த லெட்சுமி தீர்த்தக்குளத்தில் உப்பு வாங்கி போட்டு நோயை குணமாக்கி வந்துள்ளனர். ஆகவே நோய் தீர்க்கும் புண்ணிய தீர்த்த குளமாக போற்றி பாதுகாத்து வந்தனர்.

    இத்தகைய சிறப்பு பெற்ற லெட்சுமி தீர்த்த குளத்தின் சுற்றுச்சுவர் சமீபத்தில் அடுத்தடுத்து 3 முறைக்கு மேல் இடிந்து விழுந்தது. இதனையொட்டி கோவில் நிர்வாகம் லெட்சுமி தீர்த்த குளத்தை சீரமைப்பது என்று முடிவு செய்தனர். அதன்படியே ரூ.6½ கோடியில் பழமை மாறாமல் அதிநவீன தொழில் நுட்பத்துடன் குளத்தின் 3 பக்கமும் கற்கள் கொண்டு சுற்றுச்சுவரும், மற்றொரு பக்கத்தில் கான்கிரீட்டிலான சுவரும் கட்டப்பட உள்ளது.

    மேலும் கோடைகாலத்திலும் வற்றாத நீர் நிலையாக தண்ணீர் தேங்குவதற்கு வசதியாக குளம் ஆழமாக தூர்வாரப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக இந்து சமய அறநிலையதுறை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டு பணிக்கான டெண்டர் விடப்பட்டு தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதிப்பீடு மற்றும் தொழில்நுட்ப அனுமதி கமிஷனரிடம் கோரப்பட்டுள்ளது. உரியஅனுமதி கிடைத்தவுடன் ஒரு சில வாரத்தில் லெட்சுமி தீர்த்த குளம் தூர்வாரும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 6 ஆண்டுகளுக்கு பின்னர் ராஜகோபுர திருப்பணிகள் தொடங்க உள்ளது.
    • 2017-ம் ஆண்டு கோவில் நிதியில் இருந்து ரூ.2½ கோடியில் ஏழுநிலை ராஜகோபுர திருப்பணிகள் தொடங்கியது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவிகோட்டத்தில் பழமைவாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அம்மன் திருத்தலங்களில் பிரசித்திபெற்று விளங்கும் இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு கோவில் நிதியில் இருந்து ரூ.2½ கோடியில் ஏழுநிலை ராஜகோபுர திருப்பணிகள் தொடங்கியது. தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திடீரென இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி ஆகியோர் நன்கொடையாளர்களை சந்தித்து திருப்பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் திருப்பூரைச் சேர்ந்த நன்கொடையாளர்கள் திருப்பணிக்கு நன்கொடையாக ரூ.6 கோடி நிதியை வழங்கிட முன்வந்தனர்.

    இதுகுறித்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து ராஜகோபுர திருப்பணிகள் தொடங்க இந்து சமய அறநிலையத்துறையும் ஒப்புதல் அளித்து விட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா கூறுகையில், வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுர திருப்பணிக்கு நன்கொடை அளிக்க உபயதாரர்கள் முன்வந்ததால், 6 ஆண்டுகளுக்கு பின்னர் ராஜகோபுர திருப்பணிகள் தொடங்க உள்ளது. ரூ.6 கோடியில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இந்த பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.

    • கோவிலில் கணபதி ஹோமத்துடன் பாலாலய பூஜை நடைபெற்றது.
    • விரைவில் கும்பாபிேஷகம் செய்யப்படுமெனஅறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

    அவிநாசி :

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின், உப கோவிலாக, கிழக்கு ரத வீதியில் காசி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷகம் நடந்து 29 ஆண்டு ஆகி விட்டது. இதனால்கும்பாபிேஷகம் செய்ய வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.அதையடுத்து கும்பாபிஷேக திருப்பணிகள் நடத்த அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர்.

    அதற்காக கோவிலில் கணபதி ஹோமத்துடன் பாலாலய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூலவ மூர்த்திக்கு பாலாலயம் செய்யப்பட்டு, வாஸ்து சாந்தி ஹோமம் நடைபெற்றது.கோவிலில் திருப்பணிகள் நடத்தப்பட்டு, விரைவில் கும்பாபிேஷகம் செய்யப்படுமெனஅறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

    மதுரையை அடுத்த அழகர்மலை நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்காக பாலாலய பூஜையுடன் திருப்பணி தொடங்கியது.
    மதுரையை அடுத்த அழகர்மலை உச்சியில் கள்ளழகர் கோவிலின் உபகோவிலான பிரசித்தி பெற்ற ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வற்றாத நீரூற்றாக வழிந்து கொண்டிருப்பது நூபுர கங்கை எனும் புனித தீர்த்தமாகும். ராக்காயி அம்மன் திருப்பாதம் பகுதியில் மேற்கு திசைபார்த்து வழிந்து கொண்டிருக்கும் தீர்த்தம் அபூர்வமானது. இந்த திருத்தலத்தில் கும்பாபிஷேகம் நடத்த அரசும், அறநிலையத் துறையும் முடிவு செய்தது. அதன்படி பல ஆண்டு காலத்திற்கு பின்பு நேற்று முன்தினம் இந்த கோவிலில் பூர்வாங்க பூஜைகள் நடந்தன.

    இதை தொடர்ந்து நேற்று காலையில் புண்யாகவாசனம், மகாபூர்ணாகுதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், வேத மந்திரங்கள், மேள தாளம் முழங்க தொடங்கியது, மேலும் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த நூபுர கங்கை புனித தீர்த்த குடங்களை கோவில் உள் பிரகாரத்திலே ஊர்வலமாக பட்டர்கள் எடுத்து சென்றனர். பின்னர் பாலாலய பூஜைகள், முகூர்த்தக்கால் நடும் பணியும் நடந்தது. இதை தொடர்ந்து திருப்பணி தொடங்கியது. இந்த பூஜைகள் நிகழ்வின்போது பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் காலை 11 மணிக்கு பிறகு காத்திருந்த ஏராளமான பக்தர்கள் நூபுர கங்கையில் நீராட ேகாவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    நீண்ட வரிசையில் சென்று நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடி, பாலாலய பூஜைகள் நடைபெற்ற யாகசாலையையும் பார்த்து தரிசனம் செய்து சென்றனர். விழாவில் முன்னதாக துணை ஆணையர் ராமசாமி, நகை சரிபார்க்கும் அலுவலர் சுவாமிநாதன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதிபா, அருள்செல்வன், மற்றும் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    வாலாந்தூர் அங்காள பரமேசுவரி கோவில் ராஜ கோபுரத்திற்கு ரூ. 35 லட்சத்தில் கதவு தயார் செய்யப்பட்டு உள்ளது. இதனை ஊர்வலமாக எடுத்துச்சென்று பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வாலாந்தூர். இந்த ஊரில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அங்காளபரமேசுவரி கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக அந்த கோவிலில் கட்டப்பட்ட ராஜ கோபுரத்திற்கு ரூ.35 லட்சம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்ட கதவை நாட்டாமங்கலத்தில் இருந்து ஆதிகால வழக்கப்படி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அப்போது பெண்கள் கையில் வேப்பிலையுடன் ஆடி வந்தனர்.

    மேலும் கொண்டுவரப்பட்ட கதவிற்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மஞ்சள் நீரை தெளித்து வரவேற்றனர். அதன் பின்னர் ராஜகோபுரத்தில் அந்த கதவை பொருத்தி ஏராளமான பக்தர்கள் வணங்கி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    ×