search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருப்பணி 24-ந்தேதி தொடங்குகிறது
    X

    அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருப்பணி 24-ந்தேதி தொடங்குகிறது

    • இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் ஆகிறது.
    • காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றது.

    அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதும் சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடியதுமான பல சிறப்புகள் பெற்றதாக விளங்குகிறது.

    இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் ஆகிறது. எனவே கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலை யத்துறையின் மூலம் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி வருகிற 24-ந் தேதி காலை 7 மணி அளவில் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடக்க விழா நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×