என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்து பலி
கே.கே.நகரில் பஸ் மோதி நிலத்தரகர் பலி
கே.கே.நகரில் பஸ் மோதி நிலத்தரகர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை, அசோக் நகர் புதூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணகுமார் (வயது56). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இவர் நேற்று இரவு 8.30மணி அளவில் கே.கே நகர் காமராஜர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது தி.நகரில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற மாநகர பஸ் (எண்49ஏ) எதிர்பாராத விதமாக லட்சுமணகுமார் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே லட்சுமண குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் சங்கரை கைது செய்தனர்.
Next Story






