என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்து
காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை பஸ் மீது லாரி மோதல்- 19 பேர் படுகாயம்
காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இன்று காலை ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் 35 பேரை ஏற்றிக்கொண்டு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பஸ் வந்து கொண்டிருந்தது. தாமல் அருகே சென்று கொண்டிருந்தபோது பஸ்சை முந்தி சென்ற டாராஸ் லாரியின் பின்னால் திடீரென பஸ் மோதியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 19 தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து பாலுசெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இன்று காலை ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் 35 பேரை ஏற்றிக்கொண்டு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பஸ் வந்து கொண்டிருந்தது. தாமல் அருகே சென்று கொண்டிருந்தபோது பஸ்சை முந்தி சென்ற டாராஸ் லாரியின் பின்னால் திடீரென பஸ் மோதியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 19 தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து பாலுசெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






