என் மலர்
ஈரோடு
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் ஆசிரியர்கள் முழு கவச உடையுடன் பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் வெளியூர் மாணவர்களுடன் ஒருவர் வர அனுமதிக்கப்படுவார். மாணவருடன் வருபவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும். அங்கு ஆசிரியர்கள் முழு கவச உடையுடன் பணிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தனியார் பள்ளியில் படிக்கும் வெளியூரை சேர்ந்த மாணவர்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது.
இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனத்தில் தேர்வு எழுத வருபவர்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும். சூழ்நிலை காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு வைப்பது குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
தேவைப்பட்டால் மறு தேர்வுக்கும் ஏற்பாடு செய்யப்படும். மலை பகுதியில் உள்ள மாணவர்களுக்கும் தேர்வு குறித்த அட்டவணை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் வெளியூர் மாணவர்களுடன் ஒருவர் வர அனுமதிக்கப்படுவார். மாணவருடன் வருபவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும். அங்கு ஆசிரியர்கள் முழு கவச உடையுடன் பணிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தனியார் பள்ளியில் படிக்கும் வெளியூரை சேர்ந்த மாணவர்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது.
இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனத்தில் தேர்வு எழுத வருபவர்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும். சூழ்நிலை காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு வைப்பது குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
தேவைப்பட்டால் மறு தேர்வுக்கும் ஏற்பாடு செய்யப்படும். மலை பகுதியில் உள்ள மாணவர்களுக்கும் தேர்வு குறித்த அட்டவணை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு அருகே வியாபாரியை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு குமலன்குட்டை குமணன் நகரை சேர்ந்தவர் செந்தில் (வயது 39). பழ வியாபாரி. இவரது வீட்டின் எதிரே குடியிருப்பவர் பாவாயி (39). இவருக்கும், செந்திலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இரவு பாவாயி தன் உறவினர்களான பிரபாகரன் (25), நந்தகோபால் (22) ஆகியோருடன் சென்று செந்திலை தகாத வார்த்தைகளால் திட்டி உதைத்ததாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த செந்திலை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பவாயி, பிரபாகரன், நந்தகோபால் ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
பவானியில் ரூ.10 கோடி மதிப்பிலான குச்சி பைகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
பவானி:
உலக அளவில் ஜமுக்காள உற்பத்திக்கு பெயர் பெற்ற பவானி நகரம் தற்போது ஜமுக்காள உற்பத்தியில் பெரும் சரிவை கண்டுள்ளது. கைத்தறி ஜமுக்காளத்தை உற்பத்தி செய்து வந்த தொழிலாளர்கள் பலர் கடந்த 2 ஆண்டுகளாக மாற்று தொழிலை நாடி சென்றுவிட்டனர். அதன் ஒருபகுதியாக ஜவுளி பைகள் உற்பத்தி செய்யும் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால், ஜவுளிக்கடைகளில் குச்சி பைகளின் பயன்பாடு அதிகரித்தது. இதனால் பவானியில் தற்போது உற்பத்தி செய்யும் பைகளுக்கு தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜவுளி கடைகளுக்கு தேவையான குச்சி பைகள் அதிகமாக தயாரித்து கொடுக்கப்படுகின்றன. தினமும் சுமார் ரூ.7½ லட்சம் மதிப்பிலான பைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பைகளை உற்பத்தி செய்ய 15 பெரிய நிறுவனங்களும், 500-க்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அங்கு சுமார் 1,500 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இதன் துணை தொழில்களான பிரிண்டிங், குச்சி பை தைக்கும் தையல் தொழிலாளர்கள், பார்சல் நிறுவனங்கள் மூலமாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள். இந்த தொழில் மூலமாக அவர்களும் தினமும் ரூ.200 முதல் ரூ.300 வரை வருமானம் ஈட்டி வந்தனர்.
பவானியில் உற்பத்தியாகும் பைகள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள ஜவுளி கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கால் மக்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். இதன் பாதிப்பு குச்சி பை தொழிலாளர்களையும் விட்டு வைக்கவில்லை. ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டதால், கடந்த 1½ மாதங்களாக குச்சி பைகள் ஜவுளிக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது. மேலும், உற்பத்தி செய்யும் பணியும் நிறுத்தப்பட்டு உள்ளதால், உரிமையாளர்களில் இருந்து தொழிலாளர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து குச்சி பை தயாரிப்பு நிறுவன தொழில் அதிபர் எஸ்.கே.டி.செல்வம் கூறியதாவது:-
தமிழக அரசு அஸ்தர் பைகளை பயன்படுத்த தடை விதித்ததால் அஸ்தர் பைக்கு மாற்றாக காடா மற்றும் காட்டன் பைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். இந்த துணிகளுக்கான 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை மத்திய, மாநில அரசுகளுக்கு வரியாக செலுத்தப்பட உள்ளது. இதை சமாளிக்க முடியாமல் நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம்.
இந்த சூழ்நிலையில் ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்கு மேல் தொழில் முடக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த தொழிலை நம்பியுள்ள ஏராளமானோர் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த தொழிலை மேம்படுத்த தேவையான சலுகைகளை கொடுக்க வேண்டும்.
ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான பைகள் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தேக்கம் அடைந்து உள்ளது. பவானியில் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான குச்சி பைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உலக அளவில் ஜமுக்காள உற்பத்திக்கு பெயர் பெற்ற பவானி நகரம் தற்போது ஜமுக்காள உற்பத்தியில் பெரும் சரிவை கண்டுள்ளது. கைத்தறி ஜமுக்காளத்தை உற்பத்தி செய்து வந்த தொழிலாளர்கள் பலர் கடந்த 2 ஆண்டுகளாக மாற்று தொழிலை நாடி சென்றுவிட்டனர். அதன் ஒருபகுதியாக ஜவுளி பைகள் உற்பத்தி செய்யும் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால், ஜவுளிக்கடைகளில் குச்சி பைகளின் பயன்பாடு அதிகரித்தது. இதனால் பவானியில் தற்போது உற்பத்தி செய்யும் பைகளுக்கு தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜவுளி கடைகளுக்கு தேவையான குச்சி பைகள் அதிகமாக தயாரித்து கொடுக்கப்படுகின்றன. தினமும் சுமார் ரூ.7½ லட்சம் மதிப்பிலான பைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பைகளை உற்பத்தி செய்ய 15 பெரிய நிறுவனங்களும், 500-க்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அங்கு சுமார் 1,500 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இதன் துணை தொழில்களான பிரிண்டிங், குச்சி பை தைக்கும் தையல் தொழிலாளர்கள், பார்சல் நிறுவனங்கள் மூலமாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள். இந்த தொழில் மூலமாக அவர்களும் தினமும் ரூ.200 முதல் ரூ.300 வரை வருமானம் ஈட்டி வந்தனர்.
பவானியில் உற்பத்தியாகும் பைகள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள ஜவுளி கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கால் மக்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். இதன் பாதிப்பு குச்சி பை தொழிலாளர்களையும் விட்டு வைக்கவில்லை. ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டதால், கடந்த 1½ மாதங்களாக குச்சி பைகள் ஜவுளிக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது. மேலும், உற்பத்தி செய்யும் பணியும் நிறுத்தப்பட்டு உள்ளதால், உரிமையாளர்களில் இருந்து தொழிலாளர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து குச்சி பை தயாரிப்பு நிறுவன தொழில் அதிபர் எஸ்.கே.டி.செல்வம் கூறியதாவது:-
தமிழக அரசு அஸ்தர் பைகளை பயன்படுத்த தடை விதித்ததால் அஸ்தர் பைக்கு மாற்றாக காடா மற்றும் காட்டன் பைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். இந்த துணிகளுக்கான 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை மத்திய, மாநில அரசுகளுக்கு வரியாக செலுத்தப்பட உள்ளது. இதை சமாளிக்க முடியாமல் நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம்.
இந்த சூழ்நிலையில் ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்கு மேல் தொழில் முடக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த தொழிலை நம்பியுள்ள ஏராளமானோர் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த தொழிலை மேம்படுத்த தேவையான சலுகைகளை கொடுக்க வேண்டும்.
ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான பைகள் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தேக்கம் அடைந்து உள்ளது. பவானியில் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான குச்சி பைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா காரணமாக சீசன் நேரத்தில் ‘ரிக்’ வாகனங்கள் வேலை இல்லாமல் நிறுத்தப்பட்டு உள்ளதாக வாகன உரிமையாளர் கூறினார்.
ஈரோடு:
இந்திய அளவில் ஆழ்குழாய் கிணறு தோண்டும் ‘ரிக்’ வாகனங்கள் அதிக அளவில் உள்ள பகுதி திருச்செங்கோடு, ஈரோடு, ராசிபுரம். திருச்செங்கோட்டில் உள்ள ‘ரிக்’ வாகனங்கள் பெரும்பாலும் வடமாநிலங்களில் ஆழ்குழாய் தோண்டும் பணியில் இருக்கும். ஈரோடு, ராசிபுரம் பகுதிகளில் இருந்து தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களில் ஆழ்குழாய்கள் தோண்டி வருகின்றன. தற்போது ஈரோட்டில் உள்ள ‘ரிக்’ வாகனங்கள் அனைத்தும் வேலை இன்றி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி ‘ரிக்’ வாகன உரிமையாளர் லோகநாதன் என்பவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 25 ‘ரிக்’ வண்டிகள் உள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு தோண்டும் பணியில் இங்கிருந்து செல்லும் வாகனங்கள்தான் ஈடுபடுகின்றன. வழக்கமாக கோடை காலம் தொடங்கி விட்டால் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு ‘ரிக்’ வாகனம் மூலம் 3 ஆழ்குழாய் கிணறுகள் தோண்டும் பணி நடைபெறும். ஆண்டு சராசரி பார்த்தால் ஒரு வாகனம் மூலம் 200 ஆழ்குழாய்களாவது தோண்டும் பணி நடைபெறும்.
தற்போது கோடை காலம் உச்ச நிலையில் உள்ளது. இது ‘ரிக்’ வாகனம் வைத்து இருப்பவர்களுக்கு உச்சகட்ட பணி நடைபெறும் நேரமாகும். ஆனால் கொரோனா காரணமாக 2 மாதங்களாக ஒரு ஆழ்குழாய் கிணறுகூட தோண்டவில்லை. இது ‘ரிக்’ உரிமையாளர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு ‘ரிக்’ வாகனம் ரூ.1 கோடியே 80 லட்சம் விலையாகிறது. இது முழுமையாக வங்கிக்கடனில் வாங்கப்படுகிறது. ஒரு ‘ரிக்’ வாகனத்துக்கு டிரைவர் உள்பட 10 பேர் பணியில் இருப்பார்கள். ‘ரிக்’ இயங்கினால் மட்டுமே இவர்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுத்து, கடன் தவணையும் செலுத்த முடியும். தற்போதைய நிலவரப்படி ஆழ்குழாய் கிணறு தோண்ட ஒரு அடிக்கு ரூ.62 கட்டணம் உள்ளது. 500 அடிக்கு மேல் ஒவ்வொரு 100 அடிக்கும் ஒரு அடிக்கு தலா ரூ.10 முதல் ரூ.30 வரை கட்டண உயர்வு இருக்கும்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இடத்துக்கு தகுந்தபடி தண்ணீர் கிடைக்கும் ஆழம் வேறுபடும். சராசரியாக 600 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும். தற்போது வேலை இல்லாததால் வங்கி தவணை செலுத்த முடியவில்லை. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் சிரமமாக இருக்கிறது.
தொழில் நடந்து கொண்டு இருந்தால் பாதிப்பு தெரியாது. ஆனால், இப்போது மிகவும் சிரமமாக இருக்கிறது. இப்போது கோடை என்பதால் ஓய்வு இல்லாமல் வேலை செய்ய வேண்டிய நேரம். ஆனால் கொரோனா காரணமாக இதுவரை ஒரு வேலையும் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அளவில் ஆழ்குழாய் கிணறு தோண்டும் ‘ரிக்’ வாகனங்கள் அதிக அளவில் உள்ள பகுதி திருச்செங்கோடு, ஈரோடு, ராசிபுரம். திருச்செங்கோட்டில் உள்ள ‘ரிக்’ வாகனங்கள் பெரும்பாலும் வடமாநிலங்களில் ஆழ்குழாய் தோண்டும் பணியில் இருக்கும். ஈரோடு, ராசிபுரம் பகுதிகளில் இருந்து தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களில் ஆழ்குழாய்கள் தோண்டி வருகின்றன. தற்போது ஈரோட்டில் உள்ள ‘ரிக்’ வாகனங்கள் அனைத்தும் வேலை இன்றி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி ‘ரிக்’ வாகன உரிமையாளர் லோகநாதன் என்பவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 25 ‘ரிக்’ வண்டிகள் உள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு தோண்டும் பணியில் இங்கிருந்து செல்லும் வாகனங்கள்தான் ஈடுபடுகின்றன. வழக்கமாக கோடை காலம் தொடங்கி விட்டால் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு ‘ரிக்’ வாகனம் மூலம் 3 ஆழ்குழாய் கிணறுகள் தோண்டும் பணி நடைபெறும். ஆண்டு சராசரி பார்த்தால் ஒரு வாகனம் மூலம் 200 ஆழ்குழாய்களாவது தோண்டும் பணி நடைபெறும்.
தற்போது கோடை காலம் உச்ச நிலையில் உள்ளது. இது ‘ரிக்’ வாகனம் வைத்து இருப்பவர்களுக்கு உச்சகட்ட பணி நடைபெறும் நேரமாகும். ஆனால் கொரோனா காரணமாக 2 மாதங்களாக ஒரு ஆழ்குழாய் கிணறுகூட தோண்டவில்லை. இது ‘ரிக்’ உரிமையாளர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு ‘ரிக்’ வாகனம் ரூ.1 கோடியே 80 லட்சம் விலையாகிறது. இது முழுமையாக வங்கிக்கடனில் வாங்கப்படுகிறது. ஒரு ‘ரிக்’ வாகனத்துக்கு டிரைவர் உள்பட 10 பேர் பணியில் இருப்பார்கள். ‘ரிக்’ இயங்கினால் மட்டுமே இவர்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுத்து, கடன் தவணையும் செலுத்த முடியும். தற்போதைய நிலவரப்படி ஆழ்குழாய் கிணறு தோண்ட ஒரு அடிக்கு ரூ.62 கட்டணம் உள்ளது. 500 அடிக்கு மேல் ஒவ்வொரு 100 அடிக்கும் ஒரு அடிக்கு தலா ரூ.10 முதல் ரூ.30 வரை கட்டண உயர்வு இருக்கும்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இடத்துக்கு தகுந்தபடி தண்ணீர் கிடைக்கும் ஆழம் வேறுபடும். சராசரியாக 600 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும். தற்போது வேலை இல்லாததால் வங்கி தவணை செலுத்த முடியவில்லை. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் சிரமமாக இருக்கிறது.
தொழில் நடந்து கொண்டு இருந்தால் பாதிப்பு தெரியாது. ஆனால், இப்போது மிகவும் சிரமமாக இருக்கிறது. இப்போது கோடை என்பதால் ஓய்வு இல்லாமல் வேலை செய்ய வேண்டிய நேரம். ஆனால் கொரோனா காரணமாக இதுவரை ஒரு வேலையும் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊரடங்கால் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளதால் கோடை காலத்திலும் மண்பாண்ட தொழிலாளர்கள் வருமானமின்றி வாடி வருகிறார்கள்.
அந்தியூர்:
அந்தியூர் புதுப்பாளையம், வேம்பத்தி, தவிட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மண்பாண்டம் செய்யும் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு மண்பானைகள், அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் மண்பானைகள் கோடை காலத்தில் குளிர்ந்த தண்ணீரை பருகுவதற்காகவும், கோவில் திருவிழாவின்போது அக்னி சட்டி எடுத்து வருவதற்காகவும், பொங்கல் பானைகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் கார்த்திகை மாதம் அகல் விளக்குகள் அதிகமாகவும் தயாரிக்கப்படுகிறது. எனவே சீசனுக்கு ஏற்றப்படி மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் கடந்த 1½ மாதமாக வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இதனால் மற்ற தொழில்களை போலவே மண்பாண்டங்களின் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் மண்பானைகளின் விற்பனை அதிகமாக காணப்படும். ஆனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடப்பதால், மண்பானைகளை வாங்க ஆட்கள் இல்லை.
இதுகுறித்து மண்பாண்டங்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், மண்பானைகள் செய்வதற்கு தேவையான மண்ணை வெளியில் இருந்து எடுத்து வரவும், உற்பத்தி செய்த மண்பானைகளை வெளியூர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லவும் முடிவதில்லை. மேலும் கிராம மக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கி இருப்பதால், யாரும் அவர்களது கிராமத்தை விட்டு வெளியே வருவதில்லை. பொதுவாக கோடை காலம் தொடங்கியது என்றாலே, ஈரோடு, கோபிசெட்டிபாளையம், ஆப்பக்கூடல், பர்கூர் என பல்வேறு இடங்களில் இருந்து மண்பானைகளை வாங்கி செல்வார்கள். தற்போது மண்பானைகளை வாங்குவதற்கு கூட ஆட்கள் இல்லை.
ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட மண்பானைகள் தேக்கம் அடைந்து உள்ளது. இதனால் மேற்கொண்டு மண்பானைகளை உற்பத்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு அரசின் சார்பில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அந்தியூர் புதுப்பாளையம், வேம்பத்தி, தவிட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மண்பாண்டம் செய்யும் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு மண்பானைகள், அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் மண்பானைகள் கோடை காலத்தில் குளிர்ந்த தண்ணீரை பருகுவதற்காகவும், கோவில் திருவிழாவின்போது அக்னி சட்டி எடுத்து வருவதற்காகவும், பொங்கல் பானைகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் கார்த்திகை மாதம் அகல் விளக்குகள் அதிகமாகவும் தயாரிக்கப்படுகிறது. எனவே சீசனுக்கு ஏற்றப்படி மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் கடந்த 1½ மாதமாக வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இதனால் மற்ற தொழில்களை போலவே மண்பாண்டங்களின் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் மண்பானைகளின் விற்பனை அதிகமாக காணப்படும். ஆனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடப்பதால், மண்பானைகளை வாங்க ஆட்கள் இல்லை.
இதுகுறித்து மண்பாண்டங்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், மண்பானைகள் செய்வதற்கு தேவையான மண்ணை வெளியில் இருந்து எடுத்து வரவும், உற்பத்தி செய்த மண்பானைகளை வெளியூர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லவும் முடிவதில்லை. மேலும் கிராம மக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கி இருப்பதால், யாரும் அவர்களது கிராமத்தை விட்டு வெளியே வருவதில்லை. பொதுவாக கோடை காலம் தொடங்கியது என்றாலே, ஈரோடு, கோபிசெட்டிபாளையம், ஆப்பக்கூடல், பர்கூர் என பல்வேறு இடங்களில் இருந்து மண்பானைகளை வாங்கி செல்வார்கள். தற்போது மண்பானைகளை வாங்குவதற்கு கூட ஆட்கள் இல்லை.
ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட மண்பானைகள் தேக்கம் அடைந்து உள்ளது. இதனால் மேற்கொண்டு மண்பானைகளை உற்பத்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு அரசின் சார்பில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோடு அருகே குளியல் அறைக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். அந்த பாம்பு சுமார் 7 அடி நீளம் கொண்டதாக இருந்தது.
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது வீட்டில் உள்ள குளியல் அறைக்கு காலையில் சென்றார். அப்போது அங்கு ஒரு பாம்பு இருப்பதை பார்த்தார். அச்சம் அடைந்த அவர் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். நிலைய அதிகாரி மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ராஜா சுட்டிக்காட்டிய பகுதியில் வீரர்கள் பார்த்தபோது ஒரு பெரிய பாம்பு சுருண்டு படுத்து இருந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிப்பதற்கான கருவியை கொண்டு வந்து பாம்பை பிடித்தனர்.
அந்த பாம்பு சுமார் 7 அடி நீளம் கொண்டதாக இருந்தது. அது கோதுமை நாகம் என்ற வகையை சேர்ந்தது. பிடிபட்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள், வனத்துறையிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்தனர். மேலும், தற்போது கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பாம்புகள் குளிரான இடத்தை தேடி வரும். வீட்டின் வெளியே குளியல் அறை இருப்பவர்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதுடன், விஷ ஜந்துகள் உள்ளே புகுந்துவிடாதபடி பாதுகாப்பாக கதவுகளை பூட்டி வைக்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டும் என்று தீயணைப்புப்படை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது வீட்டில் உள்ள குளியல் அறைக்கு காலையில் சென்றார். அப்போது அங்கு ஒரு பாம்பு இருப்பதை பார்த்தார். அச்சம் அடைந்த அவர் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். நிலைய அதிகாரி மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ராஜா சுட்டிக்காட்டிய பகுதியில் வீரர்கள் பார்த்தபோது ஒரு பெரிய பாம்பு சுருண்டு படுத்து இருந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிப்பதற்கான கருவியை கொண்டு வந்து பாம்பை பிடித்தனர்.
அந்த பாம்பு சுமார் 7 அடி நீளம் கொண்டதாக இருந்தது. அது கோதுமை நாகம் என்ற வகையை சேர்ந்தது. பிடிபட்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள், வனத்துறையிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்தனர். மேலும், தற்போது கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பாம்புகள் குளிரான இடத்தை தேடி வரும். வீட்டின் வெளியே குளியல் அறை இருப்பவர்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதுடன், விஷ ஜந்துகள் உள்ளே புகுந்துவிடாதபடி பாதுகாப்பாக கதவுகளை பூட்டி வைக்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டும் என்று தீயணைப்புப்படை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
ஊரடங்கு சற்று தளர்த்தியபோதே ஈரோடு போக்குவரத்து நெரிசலில் ஈரோடு சிக்கி உள்ளது.
ஈரோடு:
கொரோனா ஊரடங்கின்போது ஈரோடு மாநகர் பகுதியில் சுற்றி வந்தவர்களுக்கு அத்தனை சாலைகளும் எத்தனை பிரமாண்டமாக இருக்கிறது என்று வியப்பை ஏற்படுத்தியது. காரணம் அப்படி எந்த வாகனங்களும் ஓடாமல் ஈரோட்டில் சாலைகளை பார்க்கவே முடியாது. வாகனங்கள் ஓடுவது மட்டுமின்றி, எந்த சாலையோரத்திலும் வாகனங்கள் நிறுத்தப்படாமல் பார்ப்பதே அபூர்வம்.
ஆனால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதிக்கு பின்னர் கடந்த வாரம் ஊரடங்கு விதிகள் தளர்வு வரை அனைத்து ரோடுகளும் வெறுமையாக காட்சி அளித்தன. ஈரோட்டில் எத்தனை சந்துகள் இருக்கின்றன. அவற்றில் வாகனங்கள் செல்ல தகதியான ரோடு எவை, வாகன நிறுத்தம் மட்டுமே செய்ய தகுதியான ரோடுகள் எவை என்று துல்லியமாக கண்டறியும் வாய்ப்பும் இருந்தது. அந்ந அளவுக்கு சற்றும் பரபரப்பு இல்லாத சாலைகள் காட்சி அளித்தன.
ஆனால் ஊரடங்கு விதிகள் சற்று தளர்த்திய பிறகு, வாகன போக்குவரத்து அதிகரிக்கத்தொடங்கியது. நேற்று வழக்கமான நாட்களில் ஓடும் வாகனங்கள் அளவுக்கு போக்குவரத்து இருந்தது. பயணிகள் போக்குவரத்து பஸ் தவிர அனைத்து வகையான வாகனங்களும் இயங்கின. மணிக்கூண்டில் இருந்து எல்லை மாரியம்மன் கோவில் செல்லும் நேதாஜி ரோடு பகுதியில் மதிய நேரத்தில் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மார்க்கெட் செயல்படாத நிலையிலும் ஆர்.கே.வி. ரோட்டில் வாகனங்கள் தொடர்ச்சியாக சென்று கொண்டு இருந்தன. சுவஸ்திக் கார்னர் பகுதியிலும் வாகனங்கள் ஊர்வலம் போன்று சென்றன. பஸ் நிலையம் முழுமையாக அடைக்கப்பட்ட நிலையிலும் மேட்டூர் ரோடு, நாச்சியப்பாவீதி, சத்தி ரோடு உள்ளிட்ட சாலைகள் பரபரப்பாகவே இருந்தன.
இத்தனைக்கும் 50 சதவீதம் மக்கள் இன்னும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வரவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பெரும்பாலானவர்கள் வருகிறார்கள். கடைகள், அலுவலகங்கள் திறப்பு காரணமாக சற்று அதிகமாக மக்கள் வருகிறார்கள். இந்த நேரத்திலேயே ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமான இயல்பு வாழ்க்கைக்கு ஈரோடு திரும்பி வருவதை காட்டுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று மேம்பாலத்தின் அடியில் இடைவெளி இன்றி வாகனங்களை உரிமையாளர்கள் நிறுத்திச்சென்று இருந்தனர்.
கொரோனா ஊரடங்கின்போது ஈரோடு மாநகர் பகுதியில் சுற்றி வந்தவர்களுக்கு அத்தனை சாலைகளும் எத்தனை பிரமாண்டமாக இருக்கிறது என்று வியப்பை ஏற்படுத்தியது. காரணம் அப்படி எந்த வாகனங்களும் ஓடாமல் ஈரோட்டில் சாலைகளை பார்க்கவே முடியாது. வாகனங்கள் ஓடுவது மட்டுமின்றி, எந்த சாலையோரத்திலும் வாகனங்கள் நிறுத்தப்படாமல் பார்ப்பதே அபூர்வம்.
ஆனால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதிக்கு பின்னர் கடந்த வாரம் ஊரடங்கு விதிகள் தளர்வு வரை அனைத்து ரோடுகளும் வெறுமையாக காட்சி அளித்தன. ஈரோட்டில் எத்தனை சந்துகள் இருக்கின்றன. அவற்றில் வாகனங்கள் செல்ல தகதியான ரோடு எவை, வாகன நிறுத்தம் மட்டுமே செய்ய தகுதியான ரோடுகள் எவை என்று துல்லியமாக கண்டறியும் வாய்ப்பும் இருந்தது. அந்ந அளவுக்கு சற்றும் பரபரப்பு இல்லாத சாலைகள் காட்சி அளித்தன.
ஆனால் ஊரடங்கு விதிகள் சற்று தளர்த்திய பிறகு, வாகன போக்குவரத்து அதிகரிக்கத்தொடங்கியது. நேற்று வழக்கமான நாட்களில் ஓடும் வாகனங்கள் அளவுக்கு போக்குவரத்து இருந்தது. பயணிகள் போக்குவரத்து பஸ் தவிர அனைத்து வகையான வாகனங்களும் இயங்கின. மணிக்கூண்டில் இருந்து எல்லை மாரியம்மன் கோவில் செல்லும் நேதாஜி ரோடு பகுதியில் மதிய நேரத்தில் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மார்க்கெட் செயல்படாத நிலையிலும் ஆர்.கே.வி. ரோட்டில் வாகனங்கள் தொடர்ச்சியாக சென்று கொண்டு இருந்தன. சுவஸ்திக் கார்னர் பகுதியிலும் வாகனங்கள் ஊர்வலம் போன்று சென்றன. பஸ் நிலையம் முழுமையாக அடைக்கப்பட்ட நிலையிலும் மேட்டூர் ரோடு, நாச்சியப்பாவீதி, சத்தி ரோடு உள்ளிட்ட சாலைகள் பரபரப்பாகவே இருந்தன.
இத்தனைக்கும் 50 சதவீதம் மக்கள் இன்னும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வரவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பெரும்பாலானவர்கள் வருகிறார்கள். கடைகள், அலுவலகங்கள் திறப்பு காரணமாக சற்று அதிகமாக மக்கள் வருகிறார்கள். இந்த நேரத்திலேயே ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமான இயல்பு வாழ்க்கைக்கு ஈரோடு திரும்பி வருவதை காட்டுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று மேம்பாலத்தின் அடியில் இடைவெளி இன்றி வாகனங்களை உரிமையாளர்கள் நிறுத்திச்சென்று இருந்தனர்.
பண்ணாரி சோதனைச்சாவடி அருகில் சாலையை புள்ளிமான்கள் கடந்து சென்றன.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதில் மான் இனங்களில் புள்ளிமான், கடமான், வெளிர்மான் ஆகியவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. தற்போது பண்ணாரி வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் யானை, மான் போன்ற வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வர தொடங்கியுள்ளன. இதில் மான்கள் கூட்டம் கூட்டமாக சாலையோரம் உள்ள புற்களை மேய்ந்தபடி சுற்றித்திரிகின்றன. மேலும் அவ்வப்போது சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றன.
அதேபோல் நேற்று காலை தண்ணீர் தேடி பண்ணாரி வனப்பகுதியில் இருந்து ஏராளமான புள்ளிமான்கள் வெளியேறின. பின்னர் இந்த மான்கள் கூட்டமாக கூட்டமாக பண்ணாரி சோதனைச்சாவடி அருகில் தேசிய நெடுஞ் சாலையை கடந்து சென்றன. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.
சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டு துள்ளி ஓடிய புள்ளிமான்கள் கூட்டத்தை வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தனர். ஒரு சிலர் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மான்கள் ரோட்டை கடந்து சென்றதும் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் பகல் நேரத்தில் சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதில் மான் இனங்களில் புள்ளிமான், கடமான், வெளிர்மான் ஆகியவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. தற்போது பண்ணாரி வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் யானை, மான் போன்ற வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வர தொடங்கியுள்ளன. இதில் மான்கள் கூட்டம் கூட்டமாக சாலையோரம் உள்ள புற்களை மேய்ந்தபடி சுற்றித்திரிகின்றன. மேலும் அவ்வப்போது சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றன.
அதேபோல் நேற்று காலை தண்ணீர் தேடி பண்ணாரி வனப்பகுதியில் இருந்து ஏராளமான புள்ளிமான்கள் வெளியேறின. பின்னர் இந்த மான்கள் கூட்டமாக கூட்டமாக பண்ணாரி சோதனைச்சாவடி அருகில் தேசிய நெடுஞ் சாலையை கடந்து சென்றன. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.
சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டு துள்ளி ஓடிய புள்ளிமான்கள் கூட்டத்தை வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தனர். ஒரு சிலர் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மான்கள் ரோட்டை கடந்து சென்றதும் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் பகல் நேரத்தில் சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நர்சிங் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள எண்ணமங்கலம் வாகைமரத்து கொடிக்கால் பகுதியை சேர்ந்தவர் கிட்டான். கூலித் தொழிலாளி. இவரது மகள் கார்த்திகா (20). இவர் கவுந்தப்பாடி அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் கார்த்திகா தனது வீட்டிற்கு வந்து இருந்தார். இந்த நிலையில் அவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள எண்ணமங்கலம் வாகைமரத்து கொடிக்கால் பகுதியை சேர்ந்தவர் கிட்டான். கூலித் தொழிலாளி. இவரது மகள் கார்த்திகா (20). இவர் கவுந்தப்பாடி அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் கார்த்திகா தனது வீட்டிற்கு வந்து இருந்தார். இந்த நிலையில் அவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அருகே பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
ஈரோடு:
ஈரோடு திருநகர் காலனி அருகே உள்ள ஜெயகோபால் வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடை தமிழக அரசின் உத்தரவின் பேரில் கடந்த 7,8-ந் தேதிகளில் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி 8-ந் தேதி மாலை கடை மூடப்பட்டது.
அப்போது டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் வேலுச்சாமி, விற்பனையாளர் முருசேகசன்ஆகியோர் கடை மூடுவதற்கு முன் மது பாட்டில்களை கணக்கு காண்பிக்காமல் எடுத்து அருகில் உள்ள பெட்டிக்கடையில் பதுக்கி வைத்தனர்.
பின்னர் இருவரும் பெட்டிக்கடை உரிமையாளரான கருங்கல் பாளையத்தை சேர்ந்த கணேசனிடம் மதுபானங்களை கொடுத்து அதிக விலைக்கு விற்க சொல்லி அதில் வரும் பணத்தை 3 பேரும் பிரித்து கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இளங்கோவிற்கு தகவல் தெரிவித்தனர். டாஸ்மாக் மேலாளர் கடைக்கு சென்று விற்பனை விவரங்களை சரிபார்த்தார். அப்போது கடையில் இருப்பு இருந்த ரூ. 56 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் கணக்கில் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்த போது டாஸ்மாக் மேற்பார்வையாளர் வேலுச்சாமி, விற்பனையாளர் முருகேசன் ஆகியோர் மதுபானங்களை எடுத்து அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு கொண்டு சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பெட்டிக்கடை உரிமையாளர் கணேசனும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் வேலுச்சாமி, விற்பனையாளர் முருகேசன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு திருநகர் காலனி அருகே உள்ள ஜெயகோபால் வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடை தமிழக அரசின் உத்தரவின் பேரில் கடந்த 7,8-ந் தேதிகளில் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி 8-ந் தேதி மாலை கடை மூடப்பட்டது.
அப்போது டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் வேலுச்சாமி, விற்பனையாளர் முருசேகசன்ஆகியோர் கடை மூடுவதற்கு முன் மது பாட்டில்களை கணக்கு காண்பிக்காமல் எடுத்து அருகில் உள்ள பெட்டிக்கடையில் பதுக்கி வைத்தனர்.
பின்னர் இருவரும் பெட்டிக்கடை உரிமையாளரான கருங்கல் பாளையத்தை சேர்ந்த கணேசனிடம் மதுபானங்களை கொடுத்து அதிக விலைக்கு விற்க சொல்லி அதில் வரும் பணத்தை 3 பேரும் பிரித்து கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இளங்கோவிற்கு தகவல் தெரிவித்தனர். டாஸ்மாக் மேலாளர் கடைக்கு சென்று விற்பனை விவரங்களை சரிபார்த்தார். அப்போது கடையில் இருப்பு இருந்த ரூ. 56 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் கணக்கில் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்த போது டாஸ்மாக் மேற்பார்வையாளர் வேலுச்சாமி, விற்பனையாளர் முருகேசன் ஆகியோர் மதுபானங்களை எடுத்து அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு கொண்டு சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பெட்டிக்கடை உரிமையாளர் கணேசனும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் வேலுச்சாமி, விற்பனையாளர் முருகேசன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவால் பிற மாவட்டங்களில் சிக்கியுள்ள 10- ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தில் இருந்தது. ஈரோடு மக்கள் ஒத்துழைப்பாலும் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாநகராட்சி ஆணையாளர் ,மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த அற்புத பணியாலும் தற்போது ஈரோடு மாவட்டம் பச்சை மாவட்டமாக மாறி உள்ளது. இன்று 29-வது நாளாக எந்தவொரு நோய்த்தொற்றும் ஏற்படவில்லை. இதற்காக பொதுமக்கள் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடு வளம்பெற மாவட்டம் சீராக இருக்க முதல்வர் பல்வேறு பணிகளை செய்து வந்தார். குறிப்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும், நேரடியாகவும் சென்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் காரணமாக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்காக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
10-ம் வகுப்பு பொது தேர்வை பொறுத்தவரை மாணவர்கள் பெற்றோர்கள் நலன் கருதியும் கல்வியாளர்கள் ஆலோசனை படியும் பரிசீலித்து முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளார். மற்ற மாநிலங்களில் ஏற்கனவே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று தேர்வுதாள் திருத்தும் பணியும் முடிவடையும் நிலையில் உள்ளது. 10-ம் வகுப்பு தேர்வை மாணவர்கள் பாதுகாப்புடன் எழுத அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேர்வு மையங்களில் சென்று பார்வையிட வேண்டும். பிற மாவட்டங்களில் சிக்கியுள்ள 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி அரசு பரிசீலித்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும்.
மேலும் இது தெளிவான அறிக்கை 19-ந் தேதி வெளியிடப்படும். ஊரடங்கு காலங்களிலும் மாணவர்கள் கல்வி பாதிக்காத வகையில் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாட்ஸ் அப், யூடியூப் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி ஏற்படுத்திய வரலாறு தமிழகத்தில் மட்டுமே உள்ளது. நீட் தேர்வுக்கு தற்போது ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் 3000 மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் தங்க வைத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சொந்த ஊருக்கு அழைத்து செல்வதாக கூறி அசாம் இளம்பெண்ணை தாக்கி பணம் மற்றும் செல்போனை வாலிபர் ஒருவர் பறித்து சென்றார்.
ஈரோடு:
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வடமாநில இளம்பெண் ஒருவர் மிகவும் சோர்வுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென அந்த பெண் மயங்கி விழுந்தார். அந்த பெண் முகத்தில் காயம் இருந்தது.
இதையடுத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கதிரவன் ஓடிச் சென்று அந்தப் பெண் மீது தண்ணீர் தெளித்து அவரை எழுப்பி விசாரித்தார். அந்தப் பெண் இந்தியில் பேசியதால் இந்தி பேசத் தெரிந்த போலீசார் வைத்து விசாரித்தனர். விசாரணையில் அந்தப் பெண் அசாம் மாநிலம் தேஜ்பூர் அமீன் பட்டியைச் சேர்ந்த அசீனா பேகம் (வயது 24) என தெரியவந்தது. இவர் திருப்பூரில் உள்ள ஒரு ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்தது தெரியவந்தது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையில்லாமல் இருந்த அவர் தனது சொந்த மாநிலத்துக்கு செல்வதற்காக திருப்பூரில் இருந்து கடந்த 2 நாட்கள் நடந்து வந்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணை திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறி உள்ளார். இதை நம்பி அப்பெண் வந்துள்ளார் வரும் வழியில் அந்த பெண்ணை தாக்கி செல்போன், பணம், ஆதார்கார்டு உள்ளிட்வைகளை பறித்து சென்றுவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கதிரவன் அந்த பெண்ணுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து தனது சொந்த பணம் ரூ.1000 கொடுத்தார். பின்னர் அந்தப் பெண்ணை கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் செயல்படும் ஆதரவற்றோர் முகாமில் கொண்டு போலீசார் சேர்த்தனர்.
தனியார் அறக்கட்ட ளையை சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணை தற்போது பராமரித்து வருகிறார்கள். ஊரடங்கு முடிந்த பிறகு அந்தப் பெண் சொந்த மாநிலத்திற்கு செல்ல அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






