என் மலர்
ஈரோடு
ஈரோடு திண்டல் மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 25). ஸ்கிரீன் பட்டறை உரிமையாளர். இவருக்கும், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த மோனிகா (21) என்பவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. மோனிகாவின் திருமணத்திற்கு பின்னர் அவரது தாய் ஒருமுறை கூட மோனிகாவை பார்க்க வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மோனிகா சம்பவத்தன்று கார்த்தியின் பட்டறையில் இருந்த ரசாயன மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மோனிகா நேற்று இறந்தார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 3 ஆண்டுகளில் மோனிகா தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த பள்ளியூத்து மெயின் வீதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 52). தொழிலாளி. இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு மோகன சங்கர் (29) தீனதயாளன் (27) என 2 மகன்கள் உள்ளனர்.
இதில் தீனதயாளனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஒரு எண்ணெய் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு தீனதயாளன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது தந்தை சங்கர் உனக்குப் பெண் பார்ப்பதில் நிறைய செலவாகிறது. இப்படி இருக்கும்போது நீ குடித்துவிட்டு வீண்செலவு செய்கிறாயே என்று கேட்டுள்ளார்.
இது தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தீனதயாளன் தந்தை சங்கரை கீழே தள்ளி நெஞ்சுப்பகுதியில் எட்டி உதைத்தார். இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்குபதிவு செய்து தீனதயாளனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்னிந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது.
இங்கு தாளவாடி, ஜூர்கள்ளி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், பவானிசாகர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.
இங்கு யானைகள், சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்கு ஆகிய வனவிலங்குகள் உள்ளன. இயற்கை எழில்கொஞ்சும் இந்த புலிகள் காப்பக பகுதிகள் தற்போது கடும் வறட்சியாக உள்ளது. வனப்பகுதியில் உள்ள மரம் செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் போதிய அளவு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் ஊருக்குள் புகுவது தொடர்கதை ஆகிவருகிறது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காட்டு தீ பற்ற தொடங்கி உள்ளது. தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட தமிழக-கர்நாடக எல்லை கும்பாரகுண்டி வனப்பகுதியில் நேற்று மாலை 3 மணிமுதல் காட்டு தீ பற்றியது. தகவல் அறிந்த வனதுறையினர் சுமார் 10க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வனப்பகுதியில் நடந்து சென்று தீ யை அணைத்தனர்.
அதே போல் ஆசனூர் அருகே வனப்பகுதியிலும் காட்டு தீ ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது சம்பவயிடத்திக்கு சென்ற ஆசனூர் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சிஅடித்து தீயை அணைத்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட மூலவாய்க்கால் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பெருந்துறை காஞ்சிக்கோயில் பகுதியை சேர்ந்த கருப்பண்ணசாமி என்பவரிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி கோபிசெட்டிபாளையம் தாலுகா அலவகத்தில் ஒப்படைந்தனர்.
விசாரணையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்படும் சிமெண்ட் கடைகளில் வசூல் செய்யப்பட்ட பணம் என்பதும், அதை சத்தியமங்கலத்தில் செயல்படும் தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைக்க கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

















தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரொக்கமாக ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் முறையான ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ரவுண்டானா பகுதியில் இரவு 12.45 மணியளவில் டி.என். பாளையம் வேளாண் அதிகாரி சரவணன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ. 4 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. இதற்கு பறக்கும் படை அதிகாரிகள் ஆவணங்கள் கேட்டனர். ஆனால் காரை ஓட்டி வந்த நம்பியூர் சக்தி கார்டன் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (36) என்பவர் தான் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதற்கான பணம் தான் என்று கூறினார். ஆனால் பணத்துக்கு எந்த ஆவணமும் காட்டவில்லை. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ரூ. 4 லட்சத்தை பறிமுதல் செய்து கோபி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 4 லட்சம் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அங்கு ஆவணங்களை காட்டி விட்டு பணத்தை பெற்று செல்லலாம் என்று தெரிவித்தனர்.






