என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாளவாடி அருகே தமிழக-கர்நாடக எல்லை வனப்பகுதியில் காட்டு தீ
Byமாலை மலர்8 March 2021 7:30 AM GMT (Updated: 8 March 2021 7:30 AM GMT)
ஆசனூர் அருகே வனப்பகுதியிலும் ஏற்பட்ட காட்டு தீயை தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சிஅடித்து அணைத்தனர்.
தாளவாடி:
தென்னிந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது.
இங்கு தாளவாடி, ஜூர்கள்ளி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், பவானிசாகர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.
இங்கு யானைகள், சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்கு ஆகிய வனவிலங்குகள் உள்ளன. இயற்கை எழில்கொஞ்சும் இந்த புலிகள் காப்பக பகுதிகள் தற்போது கடும் வறட்சியாக உள்ளது. வனப்பகுதியில் உள்ள மரம் செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் போதிய அளவு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் ஊருக்குள் புகுவது தொடர்கதை ஆகிவருகிறது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காட்டு தீ பற்ற தொடங்கி உள்ளது. தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட தமிழக-கர்நாடக எல்லை கும்பாரகுண்டி வனப்பகுதியில் நேற்று மாலை 3 மணிமுதல் காட்டு தீ பற்றியது. தகவல் அறிந்த வனதுறையினர் சுமார் 10க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வனப்பகுதியில் நடந்து சென்று தீ யை அணைத்தனர்.
அதே போல் ஆசனூர் அருகே வனப்பகுதியிலும் காட்டு தீ ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது சம்பவயிடத்திக்கு சென்ற ஆசனூர் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சிஅடித்து தீயை அணைத்தனர்.
தென்னிந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது.
இங்கு தாளவாடி, ஜூர்கள்ளி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், பவானிசாகர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.
இங்கு யானைகள், சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்கு ஆகிய வனவிலங்குகள் உள்ளன. இயற்கை எழில்கொஞ்சும் இந்த புலிகள் காப்பக பகுதிகள் தற்போது கடும் வறட்சியாக உள்ளது. வனப்பகுதியில் உள்ள மரம் செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் போதிய அளவு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் ஊருக்குள் புகுவது தொடர்கதை ஆகிவருகிறது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காட்டு தீ பற்ற தொடங்கி உள்ளது. தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட தமிழக-கர்நாடக எல்லை கும்பாரகுண்டி வனப்பகுதியில் நேற்று மாலை 3 மணிமுதல் காட்டு தீ பற்றியது. தகவல் அறிந்த வனதுறையினர் சுமார் 10க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வனப்பகுதியில் நடந்து சென்று தீ யை அணைத்தனர்.
அதே போல் ஆசனூர் அருகே வனப்பகுதியிலும் காட்டு தீ ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது சம்பவயிடத்திக்கு சென்ற ஆசனூர் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சிஅடித்து தீயை அணைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X