search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டு தீ"

    • இவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் போது ஏதோ தென்படுவதாக தெரிந்துள்ளது.
    • கிராம நிர்வாக அலுவலர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே திருநாரையூர் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற பொல்லா பிள்ளையார் கோவில் உள்ளது.இந்த ேகாவில் அருகே உத்ராபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் போது ஏதோ தென்படுவதாக தெரிந்துள்ளது. அதனை தோண்டி பார்த்த போது அடுத்தடுத்து சிலையாக 5-க்கும் மேற்பட்ட சிலைகள் கிடைத்தது. இத்தகவல் காட்டு தீ போல் பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி சோழன், வருவாய் தாசில்தார் தமிழ்ச்செல்வனுக்கு தகவல் தெரிவித்தார். பின்பு குமராட்சி இன்ஸ்பெக்டர் அமுதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சாமி சிலைகளை பார்வையிட்டனர். அங்கு மேலும் சிலைகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து தோண்டி வருகிறார்கள். இது குறித்து இந்து அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மண் தோண்டும் போது கிடைத்த சிலைகள் சுமார் 200 கிலோவுக்கு மேல் இருக்கும் எனவும் அவைகள் அனைத்தும் ஐம்பொன் சிலை எனவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.சம்பவ இடத்தை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் வேல்விழி மற்றும் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் கிராம நிர்வாக அலுவலர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் எங்கள் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பொள்ளாப் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சிலைகள் கூட இருக்கலாம் எனதெரிவித்தனர். மேலும் கிராமத்தில் தொடர்ந்து ஆய்வு பணிகள் நடத்த வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • காப்புக்காடு பகுதியில் மரம், செடி, கொடிகள் எரியும்போது பலத்த காற்று வீசியதால் தீ மேலும் வேகமாக பரவியது.
    • தடை செய்யப்பட்ட காப்புக்காடு பகுதியில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாடமி பயிற்சி மையம் எதிரே உள்ள வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு பகுதியில் நேற்று திடீரென செடி, கொடிகள், மரங்கள் கொழுந்து விட்டு எரிந்தது.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கும் ஓட்டேரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கு இடையே காப்புக்காடு பகுதியில் மரம், செடி, கொடிகள் எரியும்போது பலத்த காற்று வீசியதால் தீ மேலும் வேகமாக பரவியது.

    உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த செடி, கொடி, மரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை முழுமையாக அணைத்தனர். தடை செய்யப்பட்ட காப்புக்காடு பகுதியில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே போல சமூகவிரோதிகள் யாராவது காட்டுக்கு தீ வைத்தார்களா? என்று வனத்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீப்பற்றியது.
    • 2-வது நாளாக எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடுமையான வெயிலின் தாக்கம் காணப்பட்டு வரும் சூழலில் அங்குள்ள அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அவ்வப்போது தீப்பிடித்து எரிந்து வருகிறது.

    2-வது நாளாக தீ

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் மேக்கரையை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தீப்பற்றி 100 ஏக்கருக்கு மேலான வனப்பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியது.

    இந்தநிலையில் நேற்று மீண்டும் மேக்கரையை ஒட்டி உள்ள எருமை சாவடி பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தற்போது தீ தொடர்ந்து பரவி வருகிறது. காற்றின் வேகம் காரணமாக 2-வது நாளாக எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

    அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. அவை ஊருக்குள் புகாத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், வன உயிரினங்கள் எதுவும் தீ விபத்தில் சிக்காமல் இருக்கவும் அவர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே மழை இன்றி வனப்பகுதிகள் காய்ந்த நிலையில் காணப்படுவதால் அங்கு செல்வோர் தீ எளிமையாக பற்றும் வகையில் எந்த பொருளையும் எடுத்து ெசல்ல வேண்டாம் எனவும், வனப்பகுதிகளில் பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தடுக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை

    கன்னியாகுமாரி, பிப். 26 -

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை மற்றும் அதை சுற்றி கோதையாறு, தக்கமலை, குற்றியாறு, மோதிரமலை போன்ற மலை பகுதிகள் உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் வெயில் அதிக அளவில் உள்ளது. இதனால் வனப் பகுதிகளில் அடிக்கடி தீ பரவும் அபாயம் உள்ளது. காட்டு பகுதிகளில் விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. வெயில் காலங்களில் தீ அதிக அளவில் பரவி னால் விலை உயர்ந்த மரங்கள், வனவிலங்குகள் அழிந்துவிடும் அபாயம் உள்ளது.

    மாவட்டத்தில் மொத்த முள்ள நிலப்பரப்பில் சுமார் 33 சதவிகிதம் காடுகள் உள்ள நிலையில், ஆண்டு தோறும் கோடைகாலத்தில் காடுகளில் ஆங்காங்கே தீ பிடிப்பதால் வன வளம் அழிவதோடு, வன விலங்குகள் மற்றும் பறவைகளும் பாதிக்கப் படுகின்றன. மேலும் வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களும், ரப்பர் கழக தொழிலாளர்களும் காட்டுத் தீயால் பாதிக்கப் படுகின்றனர்.

    காடுகளில் மனிதர்களா லும், வெப்பத்தின் காரண மாக மூங்கில் மற்றும் புதற்கள் எரிவதாலும் தீ ஏற்படுகிறது. காடுகளில் ஏற்படும் தீயை கண்காணிக்கும் வகையில் காடுகளில் தீ தடுப்பு காவலர்கள் போதிய அளவில் அரசால் நியமிக்கப்பட வில்லை எனவும், தீ தடுப்பு காடுகள் வெட்டப் டப்படவில்லை எனவும் பழங்குடி மக்கள் மற்றும் ரப்பர் கழக தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மாவட்டத்தில் தற்போது காடுகளில் பல்வேறு இடங்களில் தீ ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கோதையாறு அருகே குற்றியாறு ராக் ஏரியா வனப்பகுதி மற்றும் ரப்பர் கழக பகுதிகளில் தீ ஏற்பட்டுள்ளது. காட்டுப் பகுதிகளில் உடனே சென்று தீயை அணைக்கும் வகையிலான தொழில் நுட்பங்கள் இல்லாத நிலையில் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் தற்போது கடும் வெயில் நிலவி வரும் நிலையில், வனப்பகுதிகள் மற்றும் ரப்பர் கழக பகுதிகளில் பல இடங்களில் தீ பிடித்து வருகிறது. குறிப்பாக காட்டுக்குள் ஏற்பட்டுள்ள தீ ரப்பர் கழக பகுதிகளில் பரவி ரப்பர் மரங்கள் கருகி வருகின்றன.

    இதே போன்று காட்டுக்குள் ஏற்பட்டு வரும் தீ காரணமாக விலை உயர்ந்த மரங்கள் கருகி வருவதுடன், வன விலங்குகளும் அச்சுறுத் தலுக்குள்ளாகி உள்ளன. இதே போன்று பழங்குடி மக்களும் அச்சப்பட்ட நிலையில் உள்ளனர். எனவே வனத்துறையினர் காட்டுக்குள் தீ ஏற்படாத வகையில் போதிய தீ தடுப்பு காவலர்களை நியமித்து தீ ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். மேலும் தனியார் வனப்பகுதி எல்கைகளில் தீ தடுப்பு கோடுகள் (பயர் லைன்ஸ்) வெட்ட வேண்டும். மேலும் தீ ஏற்பட்டால் அதை தடுக்க போதிய கருவிகளையும் கொடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தீயணைப்பு துறையினர் விரைந்து செயல் பட்டு தீயை அணைத்தனர்.
    • காய்ந்த சருகுகளுக்கு தீயணைப்பு துறையினரே தீ வைத்து எரித்தது தெரியவந்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே மாம்பழத்துறையாறு அணை உள்ளது.

    இந்த அணை அமைந்து உள்ளது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியாகும். இந்த மலையடிவாரத்தில் சிலர் வசித்து வருகின்றனர். மலை யில் ஏராளமான மரங்கள் செடிகள் உள்ள நிலையில், வெப்ப காலங்களில் இங்கு திடீரென தீ விபத்து ஏற்படுவது வழக்கம்.

    இதனை தடுக்க வனத் துறையினரும் தீயணைப்பு துறை யினரும் அடிக்கடி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மலைப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சுமார் 2 கி.மீட்டர் தூரத்திற்கு தீ பரவி எரிய தொடங்கியது. தீயணைப்பு துறையினர் விரைந்து செயல் பட்டு தீயை அணைத்தனர். இதுபற்றி விசாரித்த போது, மலையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் பாது காப்பு கருதி, காய்ந்த சருகு களுக்கு தீயணைப்பு துறை யினரே தீ வைத்து எரித்தது தெரியவந்தது.

    வெப்ப நேரங்களில் மலைப்பகுதியில் காய்ந்த சருகுகளில் தீ பிடித்தால், அது காட்டுத்தீயாக மாறி விடும். எனவே அந்த காலங்களில் மலையடிவாரத்தின் அருகே கிடக்கும் சருகுகளுக்கு தீ வைத்து அணைப்பது வழக்கமான ஓன்று தான். அது போல தான் தற்போதும் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×