என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணத்துக்கு பின்னர் தாய் பார்க்க வராததால் பெண் தற்கொலை
Byமாலை மலர்9 March 2021 10:17 AM GMT (Updated: 9 March 2021 10:17 AM GMT)
திருமணமாகி 3 ஆண்டுகளில் மோனிகா தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு:
ஈரோடு திண்டல் மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 25). ஸ்கிரீன் பட்டறை உரிமையாளர். இவருக்கும், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த மோனிகா (21) என்பவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. மோனிகாவின் திருமணத்திற்கு பின்னர் அவரது தாய் ஒருமுறை கூட மோனிகாவை பார்க்க வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மோனிகா சம்பவத்தன்று கார்த்தியின் பட்டறையில் இருந்த ரசாயன மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மோனிகா நேற்று இறந்தார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 3 ஆண்டுகளில் மோனிகா தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு திண்டல் மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 25). ஸ்கிரீன் பட்டறை உரிமையாளர். இவருக்கும், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த மோனிகா (21) என்பவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. மோனிகாவின் திருமணத்திற்கு பின்னர் அவரது தாய் ஒருமுறை கூட மோனிகாவை பார்க்க வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மோனிகா சம்பவத்தன்று கார்த்தியின் பட்டறையில் இருந்த ரசாயன மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மோனிகா நேற்று இறந்தார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 3 ஆண்டுகளில் மோனிகா தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X