என் மலர்tooltip icon

    ஈரோடு

    சிவகிரி அருகே கிணற்று தண்ணீர் பால்போல் வெள்ளையாக மாறியதால் அதை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ள அஞ்சூர் கரட்டாங்காட்டுபுதூரை சேர்ந்தவர் தங்கமணி (வயது 51). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிணறு உள்ளது. சுமார் 60 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் தற்போது 50 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    இந்தநிலையில் தங்கமணி நேற்று வழக்கம்போல் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது கிணற்று தண்ணீர் முழுவதும் பால்போல் வெள்ளை நிறத்துக்கு மாறியிருந்தது தெரிய வந்தது.

    இதனால் ஆச்சரியம் அடைந்த தங்கமணி பக்கத்து தோட்டத்து விவசாயிகள் சிலரிடம் இது குறித்து கூறினார். சிறிது நேரத்தில் அந்த பகுதி விவசாயிகள் அங்கு கூடினார்கள். அப்போது விஷமிகள் யாராவது கிணற்று தண்ணீரில் ரசாயனத்தை கலந்து விட்டார்களா? என்று சந்தேகித்து தண்ணீரை முகர்ந்து பார்த்தார்கள். ஆனால் தண்ணீரில் எந்த துர்நாற்றமும் அடிக்கவில்லை. நிறம் மட்டும் பால்போல் காணப்பட்டது. இதனால் தண்ணீரை குடித்து பார்த்தார்கள். ருசியும் மாறாமல் இருந்தது.

    இதனால் விவசாயிகள் இதுகுறித்து அஞ்சூர் ஊராட்சி தலைவரிடம் தகவல் தெரிவித்தார்கள். உடனே அவர் சம்பந்தப்பட்ட கிணற்றை வந்து பார்த்தார். பின்னர் இதுகுறித்து வருவாய் துறையினருக்கு தகவல் கூறியுள்ளார்.

    மேலும் சம்பந்தப்பட்ட நீர்மேலாண்மை துறை அதிகாரிகள் இந்த கிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளார்கள்.
    ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ரூ.200 கோடி துணிகள் தேக்கம் அடைந்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்பட்டு மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.

    நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து ஜவுளி ஆர்டர்கள் ஈரோடு விசைத்தறியாளர்களுக்கு கிடைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. ஏற்கனவே உற்பத்தி செய்த ஜவுளிகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் ரூ.200 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன.

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டு தினந்தோறும் 12 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று முதல் வருகின்ற 20-ந் தேதி வரை முழு உற்பத்தியை நிறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது:-

    தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக ஏற்கனவே கடந்த மாதம் 20-ந்தேதி முதல் விசைத்தறி உற்பத்தியை 50 சதவீதமாக குறைத்து விட்டோம். இந்தநிலையில் இன்று (அதாவது நேற்று) முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தொழிலாளர்களையும், உரிமையாளர்களையும் காக்கும் வகையில், வருகிற 20-ந்தேதி வரை முழுவதுமாக உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.

    மேலும் வட மாநிலங்களில் தற்போது தொற்று அதிகரித்துள்ள காரணத்தால் ஆர்டர்கள் வருவது தடைபட்டுள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆர்டர்களால் ரூ.200 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. இந்த முழு உற்பத்தி நிறுத்தம் மூலம் நாளொன்றுக்கு ரூ.7 முதல் ரூ.10 கோடி வரை உற்பத்தி பாதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 599 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 599 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் தீவிரமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என்றும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.

    மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 600-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று புதிதாக மேலும் 590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 599 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 599 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

    மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 21 ஆயிரத்து 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 168 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது தொற்று உள்ள 3 ஆயிரத்து 421 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    தாளவாடி அருகே வீசிய சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1,500 வாழைகள் சாய்ந்தன.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் தாளவாடியை அடுத்த சூசைபுரம், மல்லன்குழி, அருள்வாடி, தமிழ்புரம், ஆசனூர், திம்பம் ஆகிய பகுதியில் சுமார் 1 மணிநேரம் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    அங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பின.

    இந்தநிலையில் பலத்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திகனாரை ஜோரகாடு பகுதியை சேர்ந்த இளவேந்தன் என்பவரின் தோட்டத்தில் 1,500 வாழை மரங்கள் முறிந்தன. சேதமடைந்த வாழைகளை கணக்கெடுத்து அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று இளவேந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற மகளையே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 60 ஆண்டு சிறை தண்டனையும், அவரது நண்பர்களுக்கு 40 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ஒரு கிராமத்து பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். தந்தையின் கொடுமை தாங்க முடியாத சிறுமியின் தாயார் குழந்தைகளை விட்டு விட்டு சென்று விட்டார்.

    இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அந்த சிறுமியை பெற்ற மகள் என்று கூட பாராமல் அவளது தந்தை, தனது நண்பர்களான கோபி அருகே உள்ள கூகலூர் குளத்துக்கடை கக்கன் வீதியை சேர்ந்த அம்மாசை மகன் அருணாச்சலம் (வயது 35), குளத்துக்கடை கருப்பன் வீதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (33) ஆகியோருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து உள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கோபி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தை உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

    அந்த தீர்ப்பில் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தது, கூட்டு பலாத்காரம் செய்தது ஆகிய குற்றங்களுக்காக குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் மற்றும் கற்பழிப்பு குற்றம் உள்பட 3 பிரிவுகளில் தலா 20 ஆண்டுகள் வீதம் 60 ஆண்டுகள் தந்தைக்கு ஜெயில் தண்டனை விதித்தார்.

    அருணாச்சலத்துக்கு போக்சோ உள்ளிட்ட 2 சட்டங்களின் கீழ் தலா 20 ஆண்டு வீதம் 40 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், மணிகண்டனுக்கு போக்சோ உள்பட 2 சட்டங்களின் கீழ் தலா 20 ஆண்டுகள் வீதம் 40 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.


    ஈரோடு கிழக்கு
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    இ.திருமகன் ஈவெராகாங்கிரஸ்67300
    மு.யுவராஜாஅதிமுக58396
    ச.கோமதிநாம் தமிழர்11629
    ஏ.எம்.ஆர்.ராஜாகுமார்ம.நீ.ம.10005
    முத்துகுமரன்நாம் தமிழர்1204
    ஈரோடு மேற்கு
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    முத்துசாமிதிமுக100757
    கே.வி.ராமலிங்கம்அதிமுக78668
    சந்திர குமார்நாம் தமிழர்13353
    துரைசேவுகன்ம.நீ.ம.8107
    சிவசுப்பிரமணியன்அமமுக730
    மொடக்குறிச்சி
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    சி.சரஸ்வதிபா.ஜ.க77653
    சுப்புலட்சுமி ஜெகதீசன்திமுக76409
    கோ.பிரகாஷ்நாம் தமிழர்12871
     ம.ராஜேஷ்குமார்ம.நீ.ம.4574
    தங்கராஜ்அமமுக1547
    பெருந்துறை
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
     எஸ்.ஜெயகுமார்அதிமுக85125
    கே.கே.சி.பாலுதிமுக70618
     சி.லோகநாதன்நாம் தமிழர்10294
     சி.கே.நந்தகுமார்ம.நீ.ம.3533
    பி.ஆர்.குழந்தைவேல்தேமுதிக858
    பவானி
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    கேசி கருப்பணன்அதிமுக100915
    துரைராஜ்திமுக78392
    சத்யாநாம் தமிழர்10471
    சதானந்தம்ம.நீ.ம.4221
    ராதாகிருஷ்ணன்நாம் தமிழர்956
    அந்தியூர்
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    ஏ.ஜி.வெங்கடாசலம்திமுக79096
    கே.எஸ்.சண்முகவேல்அதிமுக77821
    மா.சரவணன்நாம் தமிழர்8230
    மு.குருநாதன்மநீம2474
    எஸ்.ஆர்.செல்வம்அமமுக1212
    கோபிச்செட்டிப்பாளையம்
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    கே.ஏ.செங்கோட்டையன்அதிமுக108608
    ஜி.வி.மணிமாறன்திமுக80045
    மா.கி.சீதாலட்சுமிநாம் தமிழர்11719
    என்.கே.பிரகாஷ்ம.நீ.ம.4291
    நா.க.துளசுமணிஅமமுக2682
    பவானிசாகர்
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    பண்ணாரிஅதிமுக99181
    சுந்தரம்இகக83173
    சங்கீதாநாம் தமிழர்8517
    கார்த்தி குமார்ம.நீ.ம.4297
    ரமேஷ்தேமுதிக2197
    ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக 652 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனாவுக்கு வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.

    தினந்தோறும் 400-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 652 பேருக்கு கொரோனா தெற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 817ஆக உயர்ந்தது.

    இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக கடந்த 1-ந் தேதி சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்தது.

    மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 556 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 19 ஆயிரத்து 231 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று உள்ள 3 ஆயிரத்து 419 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாலும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்பட்டு உள்ளது.
    ஈரோட்டில் மின்கம்பத்தில் திருநங்கை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு

    ஈரோடு கனிராவுத்தர் குளம் கூரை மேடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 39). இவர் திருநங்கையாக மாறி தனது பெயரை மைதிலி என்கிற கணேசன் என மாற்றிக்கொண்டார். இந்த நிலையில் வீட்டின் அருகில் இருந்த மின்கம்பத்தில் மைதிலி என்கிற கணேசன் நேற்று முன்தினம் நள்ளிரவில் தூக்குபோட்டுக் கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மைதிலி என்கிற கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மைதிலி என்கிற கணேசனின் தற்கொலைக்கான காரணம் என்ன? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அ.ம.மு.க. கூட்டணியில் ஈரோடு மாவட்டத்தில் தே.மு.தி.க. பெருந்துறை, பவானிசாகர் ஆகிய 2 இடங்களில் போட்டியிட்டது.
    ஈரோடு:

    அ.ம.மு.க. கூட்டணியில் ஈரோடு மாவட்டத்தில் தே.மு.தி.க. பெருந்துறை, பவானிசாகர் ஆகிய 2 இடங்களில் போட்டியிட்டது.

    பெருந்துறை தொகுதியில் போட்டியிட்ட குழந்தைவேல் 857 வாக்குகள் மட்டும் பெற்றிருந்தார். இதேபோல் பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்ட ரமேஷ் 2197 வாக்குகள் பெற்றிருந்தார். இந்த 2 தொகுதியிலும் சேர்த்து 3054 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கோமதி, ஈரோடு மேற்கில் சந்திரகுமார், மொடக்குறிச்சி தொகுதியில் கோ.பிரகாஷ், பெருந்துறை தொகுதியில் லோகநாதன், பவானி தொகுதியில் சத்யா, அந்தியூர் தொகுதியில் சரவணன், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் சீதாலட்சுமி, பவானிசாகர் தொகுதியில் சங்கீதா ஆகியோர் போட்டியிட்டனர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் நாம்தமிழர் கட்சி 3-ம் இடம் பிடித்து உள்ளது. 6 தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகளை பெற்று உள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 11,629 வாக்குகளும், ஈரோடு மேற்கு தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 13,353 வாக்குகளும், மொடக்குறிச்சி தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 12,944 வாக்குகளும், பெருந்துறை தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 10,294 வாக்குகளும், பவானி தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 10,471 வாக்குகளும், அந்தியூர் தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 8,230 வாக்குகளும், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் 11,719 வாக்குகளும், பவானிசாகர் தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் 8,517 வாக்குகளும் பெற்று உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் நாம்தமிழர் கட்சிக்கு 87,157 வாக்குகள் கிடைத்தது. 


    பவானி தொகுதியில் இன்று காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்று முடிவில் கருப்பணன் 1531 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    ஈரோடு:

    பவானி தொகுதியில் தி.மு.க. சார்பில் கே.பி.துரைராஜ், அ.தி.மு.க. சார்பில் கே.சி.கருப்பணன், அ.ம.மு.க. சார்பில் மு.ராதாகிருஷ்ணன், மக்கள்நீதிமய்யம் சார்பில் கி.சதானந்தம், நாம்தமிழர் கட்சி சார்பில் மு.சத்யா மற்றும் சுயேட்சைகள் உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலில் பவானி தொகுதியில் 83.50 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இன்று காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. சுற்றுவாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:

    கி.சதானந்தம் - ம.நீ.ம.-

    மு.சத்யா - நாம் தமிழர் கட்சி -430

    முதல் சுற்று முடிவில் கருப்பணன் 1531 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    ஈரோட்டில் வரத்து குறைவு காரணமாக பழங்கள் ரூ.10 முதல் ரூ.30 வரை விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள தற்காலிக சந்தைக்கு பழங்கள் அனைத்தும் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பழங்கள் வரத்து தடைபட்டு உள்ளது. மேலும் மக்கள் வருகை குறைந்ததால் விற்பனையும் சரிந்து இருக்கிறது. இதனால் வியாபாரிகள் பழங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக வியாபாரி ஒருவர் கூறினார்.

    ஈரோட்டில் நேற்று முன்தினம் பழங்களின் சராசரி விலை (ஒரு கிலோ) விவரம் வருமாறு:-

    மாதுளை - ரூ.200

    சாத்துக்குடி - ரூ.90

    ஆப்பிள் - ரூ.200

    ஆரஞ்சு - ரூ.120

    திராட்சை - ரூ.110

    கொய்யா - ரூ.50

    மாம்பழம் - ரூ.100

    இதுபோல் ஒரு கிலோ வெள்ளரி சராசரியாக ரூ.60-க்கு விற்பனையானது.

    வரத்து குறைவு காரணமாக பழங்கள் ரூ.10 முதல் ரூ.30 வரை விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
    ×