என் மலர்tooltip icon

    ஈரோடு

    மாணவியை திருமணம் செய்த சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் கோவை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஒலகடம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள குள்ளநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் உறவினர்கள்.

    அந்த சிறுமி அதே பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தான். இந்நிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி சிறுவன் பழகி வந்துள்ளான். சம்பவத்தன்று மாணவியை சிறுவன் கடத்தி சென்று உள்ளான்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வெள்ளித் திருப்பூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சிறுவனைத் தேடி வந்தனர். விசாரணையில் சிறுவன் மாணவியை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதையடுத்து இருவரையும் மீட்ட போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் பிரபுதேவாவின் புதிய படம் ஒன்று நேரடியாக ஓட்டி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
    பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

    பொன் மாணிக்கவேல்

    டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. இப்படம் கடந்த வருடமே வெளியாக இருந்தது. இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
    கோபிசெட்டிபாளையம் அருகே காதலிக்கு இன்று திருமணம் நடைபெறுவதால் மனம் உடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள உக்கரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு கிரண் ராஜ் கிஷோர் (24) என்ற மகன் உள்ளார். டிப்ளமோ படித்து உள்ளார். இவரும் பக்கத்து தெருவைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் கிரண்ராஜ் கிஷோர் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் இன்று காலை திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இதுபற்றி தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்த கிரண் ராஜ் கிஷோர் சோகத்தில் இருந்து வந்தார்.

    மேலும் தனது காதலிக்கு திருமணம் நடைபெறுவதால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிரண் ராஜ் கிஷோர் இறந்து விட்டார்.

    காதலி திருமணம் நடந்த நாளில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நீலகிரியில் உள்ள அனைத்து பகுதிகளிலுமே இரவு நேரங்களில் மழையும், பகல் நேரத்தில் லேசான வெயிலும், அதிகாலையில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டமும் நிலவுகிறது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகள், அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

    குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அருவங்காடு, உபதலை, ஓட்டுப்பட்டரை, காட்டேரி, சேலாஸ் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழையால் ஆறு மற்றும் ஓடைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழை காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் சில இடங்களில் புதிதாக நீர்வீழ்ச்சிகளும் உருவாகி அதில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நீலகிரியில் உள்ள அனைத்து பகுதிகளிலுமே இரவு நேரங்களில் மழையும், பகல் நேரத்தில் லேசான வெயிலும், அதிகாலையில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டமும் நிலவுகிறது. குறிப்பாக கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    இந்த குளிர் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வருவதற்கே தயங்கி உள்ளேயே முடங்கி கொள்கின்றனர். அத்தியாவசியத்திற்கு மட்டுமே வெளியில் வருகின்றனர்.

    வீட்டில் இருந்தாலும் கடும் குளிர் வாட்டுவதால் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் குளிரை தாங்கி கொள்வதற்காக தொப்பி, மப்புலர், பனியன் உள்ளிட்ட உலர் ஆடைகளை அணிந்து கொள்கின்றனர். பள்ளி செல்லும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைவருமே குளிரால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    ஒரு சில இடங்களில் ஆட்டோ, வேன் டிரைவர்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

    பகல் நேரங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை, கூடலூர்- ஊட்டி சாலை, கோத்தகிரி- ஊட்டி சாலை, மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை என நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய அனைத்து சாலைகளிலும் பனி மூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதன் காரணமாக பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே செல்கின்றனர்.

    கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கனமழையும், பகலில் மிதமான கால நிலையும் காணப்படுகிறது. இதுதவிர கடுமையான குளிரும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் தினந்தோறும் குளிரும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், பால்காரர்கள், பொதுமக்கள் என அனைவருமே குளிரால் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    கடும் குளிரால் கோவை, நீலகிரி மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 826 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இதேபோல் தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணி, கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிப்பு போன்ற காரணங்களால் மாவட்டத்தில் வேகமாக தாக்கம் குறைந்து வருகிறது.

    இந்நிலையில் சுகாதார துறையினர் நேற்று வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 826 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 48 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 691 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 756 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நமது மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலும் முதியவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். எனவே முதியவர்கள் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் அவர்களை வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத முதியவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
    மண்டபம் வந்த தாய்மாமனுக்கு சகோதரி உறவினர்களுடன் இணைந்து ஆரத்தி எடுத்து மண்டபத்தினுள் அழைத்து சென்றார்.
    திருப்பூர்:

    பூப்படைந்த விழா என்றாலே தாய்மாமன் சீர் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சீர்வரிசை என்பது உறவினர்கள் மத்தியில் கவுரவத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றாகும். 

    இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமாரின் மகள் சதுன்யா பூப்புனித நன்னீராட்டு விழா குன்னத்தூர் சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    தனது சகோதரியின் மகள் பூப்படைந்த விழாவிற்கு வேலுச்சாமி, சதீஷ் உள்ளிட்ட தாய்மாமன்கள் அந்த கால வழக்கப்படி பண்பாட்டை நினைவூட்டும் வகையில் 7 இரட்டை மாடு வண்டிகளை பூட்டி கொண்டு தேங்காய், பழம் என 25 வகையான சீர் தட்டுகளை எடுத்து கொண்டு உறவினர்கள் புடை சூழ, மேளதாளங்கள் முழங்க குன்னத்தூரிலிருந்து திருமண மண்டபம் வரை சுமார் ஐந்து கி.மீ., தூரம் மாட்டுவண்டிகளில் தாய்மாமன் சீரினை எடுத்து கொண்டு வந்தனர்.

    மண்டபம் வந்த தாய்மாமனுக்கு சகோதரி உறவினர்களுடன் இணைந்து ஆரத்தி எடுத்து மண்டபத்தினுள் அழைத்து சென்றார். விழாவிற்கு வந்த அனைவருக்கும் இறுதியில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 

    மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர் எடுத்து வந்து பண்பாடு நினைவூட்டும் வகையில் வழங்கியது உறவினர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 
    பவானி கரையோரப் பகுதியை வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 4 ஆயிரம் கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. இன்று மேலும் அதிகரித்து 6 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 104 அடியை நெருங்கி உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.72 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,757 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,500 கன அடியும், பவானி ஆற்றுக்கு 6 ஆயிரத்து 500 கன அடி என மொத்தம் 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பவானி ஆற்றில் 6,500 கன அடி நீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கன அடிக்கு மேல் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும் என்பதால் பவானி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பவானி கரையோரம் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் கால்நடைகளை நீர்நிலைகளில் குளிப்பாட்டக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பவானி கரையோரப் பகுதியை வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். 

    மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஜி.வி.பிரகாஷின் டுவிட்டர் பதிவு
    ஜி.வி.பிரகாஷின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி மாறன் படத்தின் பாடல் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும், இப்படத்தில் ஒரு தீம் பாடல் உள்பட 4 பாடல்கள் உள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். விரைவில் மாறன் படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
    காரும், மோட்டார் சைக்கிளும் கடம்பூர் மலைப்பகுதி 12-வது வளைவில் வந்தபோது நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் குன்றி மலைப்பகுதியில் இருந்து நேற்று மாலை கோவை நோக்கி ஒரு கார் சென்றது.

    இதேபோல் குன்றி மலைப்பகுதி அருகே உள்ள இருடிப்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பழனிச்சாமி, சதீஸ் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் கடம்பூரில் இருந்து இருடிப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    காரும், மோட்டார் சைக்கிளும் கடம்பூர் மலைப்பகுதி 12-வது வளைவில் வந்தபோது நேருக்குநேர் மோதி விபத்தானது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பழனிச்சாமி, சதீஷ் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கோவையில் சிகிச்சை பெற்று வந்த பழனிச்சாமி, சதீஷ் ஆகியோர் இன்று காலை பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் உள்ள குளறுபடியை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சொல்லி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் இன்று பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. சென்னை நொச்சிக்குப்பத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    தமிழகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் தடுப்பூசி போடும் பணிகள் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    ஏற்கனவே அரசு மருத்துவமனைகள், மருத்துவ அமைப்புகளின் வாயிலாக சுமார் 2,800 இடங்களில் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற தொடங்கியது. அதன்பிறகு வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை தொடங்கி இதுவரை 7 தடுப்பூசி முகாம்கள் போடப்பட்டு அது மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது.

    கடந்த 2-ந் தேதி மதுராந்தகம் அருகே சித்தாமூர் பக்கத்தில் உள்ள நல்லம்பாளையம் கிராமத்தில் வீடு தேடி நடமாடும் வாகனங்களின் மூலம் தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தொடங்கப்பட்டது.

    ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச்சென்று தடுப்பூசி போடும் பணி இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில்தான் முதன் முதலாக தொடங்கப்பட்டது.

    தடுப்பூசி முகாம் (கோப்புப்படம்)

    மேலும் விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கிராமங்கள் தோறும் வாகனங்களில் சென்று தடுப்பூசி போடும் பணியினை கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கினார்கள்.

    தடுப்பூசி போடும் பணியில் ஒருவரைகூட தவற விட்டுவிடக்கூடாது என்ற வகையில் வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி போடப்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    அதற்கு ஏற்ப கடந்த 2-ந்தேதி நல்லாம்பாளையம் கிராமத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. அதற்கு மறுநாள் பிரதமர் மோடி பங்கேற்ற ஒரு காணொலி கூட்டத்தில் வீடுகள்தோறும் சென்று தடுப்பூசி போடும் பணியினை அவரும் வலியுறுத்தினார்.

    அந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றார். ஓரிரு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட சுகாதார அலுவலர்கள் வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி போடும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்து 70 ஆயிரத்து395 பேர். கோவேக்சின் 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 9 ஆயிரத்து 903 பேரும், கோவிஷீல்டு 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் எண்ணிக்கை 51 லட்சத்து 60 ஆயிரத்து 392 பேரும் ஆவர்.

    சென்னை மாநகராட்சியின் சார்பில் மாநகராட்சி கமி‌ஷனர் இன்று சென்னை பல்வேறு பகுதிகளில் யாருக்கெல்லாம் 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டும், யாருக்கெல்லாம் முதல் தடுப்பூசி போட வேண்டும் என்ற பட்டியலை தயாரித்து இருக்கிறார்.

    அந்த வகையில் இன்று நொச்சிக்குப்பம் பகுதியில் 536 வீடுகள் இருக்கிறது. இதில் 24 வீடுகள் கதவு அடைக்கப்பட்டு இருக்கிறது. 2956 பேர் இருக்கிறார்கள்.

    771 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. 557 பேருக்கு 2-வது தவணை போடப்பட்டு இருக்கிறது. இதில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை 998. இவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடும் பணியினை நாங்கள் நொச்சிக்குப்பத்தில் தொடங்கி வைத்து இருக்கிறோம். அலுவலர்கள் வீடு தோறும் தேடி சென்று தடுப்பூசி போடும் பணியினை நிறைவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

    ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பொறுமையாக எடுத்து பேசி தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தை அலுவலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். உலகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் தினமும் 30 ஆயிரத்தை கடந்த அளவில் தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது.

    அமெரிக்காவில் நேற்று 75 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. ரஷ்யாவில் 40 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இங்கிலாந்தில் 36 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. சிங்கப்பூரில் 3 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. பிரான்சில் 9 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. ஜெர்மனியில் 30 ஆயிரம், துருக்கியில் 26 ஆயிரம் என உலக அளவில் பெரிய அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக மிக அவசியமான ஒன்று. எனவே அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த பணியை தொடர்ந்து பெசன்ட்நகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் ஆய்வு செய்ய உள்ளோம்.

    தினந்தோறும் வார நாட்களில் இந்த பணி நடைபெறும். வருகிற 14-ந்தேதி 8-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் தாராளமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் 100 சதவீத வாக்காளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். அதனால்தான் வாரங்கள் தோறும் வீடுகளில் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

    ஆகஸ்டு 5-ந்தேதி தமிழக முதல்வர் கிருஷ்ணகிரியில் “மக்களை தேடி மருத்துவம்” என்று ஒரு திட்டத்தை தொடங்கினார். இதன்மூலம் இதுவரை 32 லட்சத்து 36 ஆயிரத்து 622 பேர் பயன் அடைந்துள்ளனர். அந்த திட்டத்தின்படி பயனாளிகளை கண்டறிவதற்கு வீடு தோறும் தேடி சென்று தடுப்பூசி போடும் பணி ஒரு பயன் உள்ள திட்டமாக அமையும்.

    பல்வேறு வீடுகளில் கேட்டு வருகிற போது ஒரு பெண் எனக்கு உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது என்று கூறினார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து அளிக்க தயாராக உள்ளார்.

    வீடு தேடி மருத்துவம் திட்டத்திற்கு மத்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் உள்ள குளறுபடியை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சொல்லி உள்ளோம். தவறு தெரிந்து நடந்ததா? தெரியாமல் நடந்ததா? என்பதையும் கண்டறிய சொல்லி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    இதையும் படியுங்கள்... பொதுமக்கள் ஊர் திரும்ப வசதியாக 17,719 பஸ்கள் இயக்கம்
    கடம்பூர் மலைப் பாதையில் ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் தோன்றியதோடு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து அமைந்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    இம்மலைப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக கடம்பூர் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது.

    இந்நிலையில் நேற்று மாலை கடம்பூர் மலைப் பகுதி முழுவதும் கன மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக கடம்பூர் மலைப் பாதையில் ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் தோன்றியதோடு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் உள்ள மல்லியம்மன் துர்க்கம் கோவில் அருகே உள்ள மலைச்சரிவில் தோன்றிய அருவியை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி அருவிகள் முன்பு நின்று செல்போனில் புகைப்படம் எடுத்து சென்றனர்.



    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணை மற்றும் அதனையொட்டிய பூங்காவில் காலை முதலே ஏராளமான பேர் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் அணையின் அழகை கண்டு ரசித்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

    மேலும் பூங்காவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சுடச்சுட மீன்களை வாங்கி சாப்பிட்டனர். இதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்ததால் பவானிசாகர் அணை பகுதியில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இன்று காலையும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் பவானிசாகர் அணை பகுதிகளை கட்டியது.

    ×